*தினம்
ஒரு புத்தகம்*
நாள்:152
தேதி:25-12-2022
புத்தகம்
எண்ணிக்கை:152
புத்தகத்தின் பெயர்:மரத்தொகை
ஆசிரியர் :இரா பூபதி
பக்கங்கள்:
96
விலை
:120
பதிப்பகம்
:மகிழினி பதிப்பகம், சேலம்
கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான
KANI MATHS Educational Group -ல் இணைந்து கொள்ளலாம்.
*பட்டிமன்ற
பேச்சாளர் மற்றும் கவியரங்க கவிஞர் மற்றும் தமிழ் பேச்சாளராகவும் விளங்குகிறார்
*தமிழ்
மீது மிகுந்த பற்று கொண்டவராக விளங்குகிறார்
*புதுக்கவிதை
மற்றும் ஹைக்கூ கவிதைகள் கொண்ட தொகுப்பு ஆகும்
*
"இளைஞர்களே காதல் செய்யுங்கள் வாழ்க்கைக்கு வரங்களைத் தரும் மரங்களை"
என்று கூறுவதில் இருந்து இவரின் மரம் மீதான தீராத காதல் புலப்படுகிறது
*மரம்
என்னும் இயற்கை அன்னை மீது கொண்ட நேசத்தால் மரத்தொகை என்று தனது புத்தகத்திற்கு
பெயர் வைத்துள்ளார்
*நூலகம்
சென்று புத்தகம் படித்தவர்கள் என்றும் சும்மா இருந்தது இல்லை என்பதற்கு இவரின்
மரத்தொகையை சாட்சி
*என்மனதை
வையமிட்ட சிலகவிதைகள்*
*காதலியின்
நினைவுகளை சுகமாக்கும் அழகியல் கவிதை
நான்கு பக்கமும்
உன் நினைவுகள்
தீவாக நான் .....!
*வாழ்க்கை
எனும் பயணத்தில் தேடலே வாழ்க்கை என்பதை உணர்த்தும் வாழ்வியல் கவிதை
தேங்குவதில் இல்லை
தேடலில் இருக்கிறது
வாழ்க்கை ......!
*வெளியே
செல்ல வேண்டும் தயாராகவில்லை முகமூடி என்கிறது புதுக்கவிதை இதையே விளம்பரம் மூலம்
அழகிய விளக்கம் தந்து மனதை வருடுகூறும்
விளம்பரங்களில்
நடிப்பவர்களை விட விளம்பரத்திற்காக
நடிப்பவர்களை அதிகம் ...!
*பிரிவு
என்னும் கொடிய துயரத்தை உணர்த்தும் கவிதை
நீ
இல்லா வாழ்க்கை
நீரில்லா உலகு
இரண்டுமே ஒன்றுதான் எனக்கு ....!
*மழலைப்
பேச்சு ரசிக்கும் குழந்தை மனது
பிழைகளும்
அழகாகின்றது
மழலைப் பேச்சு ....!
*வாழ்க்கையில்
பல நேரங்களில் அடித்தளங்கள் அஸ்திவாரங்களின் அருமை யாருக்கும் தெரிவதில்லை என்பதை
உணர்த்தும் நகைச்சுவை உணர்வு கொண்ட கவிதை வரிகள்
சமைத்தவர்களை
விட பரிமாறுபவர்களே அதிகம் 'கவனி'க்கப்படுகிறார்கள்
டிப்ஸ் ...!
*தந்தையைப்
பற்றிய கவிதையை படிக்கும் போது கண்டிப்பாக அனைவருக்கும் அவரவர் தந்தை நினைவுக்கு
வந்துவிடுவார்கள்.
வார்த்தைக்குள்
அடக்க முடியா
பெரும் கவிதை அப்பா .....!
*மரம்
பற்றி ஒரு கவிதையே போதும் இவரின் அன்பை உணர
ஒரு
மரம் போதும்
எல்லாவற்றையும் ஈர்க்க...!
*
இப்படியே எழுதிக் கொண்டே போகலாம் இவரின் கவிதையின் அழகியல் நயத்தை ,பொருளை,சமூக
சிந்தனைகளை,இயற்கை நேசிப்பை.
*ஒவ்வொரு
கவிதையை படிக்கும் போது கவிதையின் களத்திற்கே நம்மை கொண்டு சேர்த்து விடுகிறது
அத்தனையும் அருமை
*கண்டிப்பாக
இயற்கையையும் இந்த சமூகத்தையும் நேசிக்கும் அனைவரும் படிக்க வேண்டிய கவிதை
தொகுப்பு மரத்தொகை ஆகும்
*இயற்கை
நேசர் ,சமுதாயப் பற்றாளர் ,தமிழ்க்கவிஞர் இரா பூபதி மேலும் பல நூல்களை
அழகுத்தமிழில் தந்து உயர வாழ்த்துக்கள்
*நன்றிகளுடன்*
'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,
M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,
பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,
சங்ககிரி- 637301
இதுவரை உள்ள புத்தகங்களின் மொத்த தொகுப்புகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள DOWNLOAD - ஐ CLICK செய்து பார்த்துக் கொள்ளலாம்.
0 Comments