*தினம்
ஒரு புத்தகம்*
நாள்:153
தேதி:26-12-2022
புத்தகம்
எண்ணிக்கை:153
புத்தகத்தின்
பெயர்: மாமனிதர் அப்துல் கலாம் கருத்துரைகள்
ஆசிரியர்
:ஆர் .சி .சம்பத்
விலை
:30
பக்கங்கள்
:96
பதிப்பகம்:
அருணா பதிப்பகம்
KANI MATHS Educational Group -ல் இணைந்து கொள்ளலாம்.
*முன்னாள்
குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களின் பொன்மொழிகளும் வாழ்வியல் சிந்தனைகளும்
நல்ல கருத்துக்களும் எழுதப்பட்ட நூல் இது ஆகும்
*நூலின்
முதல் பகுதியில் அப்துல் கலாமுக்கு பிடித்த திருக்குறளாக அவர் கூறுவது
"வெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர்தம் உள்ளத்தனையது உயர்வு" இந்தக்
குரல் தான் எனக்கு வழிகாட்டி எனக்கு அச்சாணி என் வளர்ச்சிக்கும் இந்த குரல் தான்
காரணம் என்கிறார்
*தோல்வியை
தோற்கடி
*வெற்றி
பெறும் தலைவர்கள் தோல்வி அடைவதில்லை தடைகளை உடைக்கிறார்கள் வெற்றி பெற வேண்டும்
எனில் வெல்ல முடியும் என்ற உணர்வுடன் சிந்தியுங்கள் செயல்படுங்கள்
*எது
நடந்ததோஅது
நன்றாகவே நடந்தது
எது
நடக்கிறதோ அது
நன்றாகவே நடக்கிறது
எது
நடக்குமோ அது
நன்றாகவே நடக்கும்
*கனவு
காணுங்கள்
கனவு காணுங்கள்
கனவு காணுங்கள்
அந்த கனவுகளை எண்ணங்களாக மாற்றுங்கள் பின்னர்
எண்ணங்களை செயல்களாக உருமாற்றுங்கள்
*தன்
வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைவதற்கு தனக்கு வழிகாட்டியாக ஐந்தாம் வகுப்பு
விஞ்ஞான பாட ஆசிரியர் ,மகாத்மா காந்தி ,விக்ரம் சாராபாய் ஆகிய மூவர்களை அப்துல்
கலாம் குறிப்பிடுகிறார்
*மூன்று
முக்கிய காரணங்களால் இந்திய மக்களுக்கு மாரடைப்பு வருகிறது என்கிறார் கவலை,
உடற்பயிற்சியின்மை ,உணவு பழக்க வழக்கம் ஆகிய தான் அவை குறிப்பாக மனக்கவலை தான்
மாரடைப்புக்கு முக்கிய காரணம் என்கிறார்
*கல்வி
என்பது ஒருவரின் கண்களை திறப்பதாகும் இது வியாபாரம் அல்ல
*இந்த
பூமியில் பூமிக்கு மேலே பூமிக்கு உள்ளே இருக்கிற எல்லா வளங்களையும் விட சக்தி
மிக்கது மனித மூளை
*மிகச்சிறிய
புத்தகம் தான் ஆனால் படிக்க படிக்க வியப்பு ஒவ்வொரு ஒவ்வொரு அறிவுரைகளும் நம்
வாழ்விற்கு வழி காட்டுபவை
*நன்றிகளுடன்*
'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,
M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,
பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,
சங்ககிரி- 637301
இதுவரை உள்ள புத்தகங்களின் மொத்த தொகுப்புகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள DOWNLOAD - ஐ CLICK செய்து பார்த்துக் கொள்ளலாம்.
0 Comments