*தினம் ஒரு புத்தகம்*
நாள்:126
தேதி:29-11-2022
புத்தகம் எண்ணிக்கை:126
புத்தகம்:
ஆலவாயன்
ஆசிரியர்: பெருமாள் முருகன்
KANI MATHS Educational Group -ல் இணைந்து கொள்ளலாம்
** மாதொரு பாகன் நாவலின் தொடர்ச்சியாக இருவேறு
தளங்களில் எழுதப்பட்டது இருநாவல்கள்
** ஒன்று கதையின் நாயகன் இறந்தால்
எப்படியிருக்கும் மற்றொன்று உயிரோடு இருந்தால் எப்படியிருக்கும்
** கதையின் நாயகன் இறந்ததால் நடைபெறும்
நிகழ்வுகளை மையப்படுத்தி எழுதப்பட்ட நாவல் ஆலவாயன்
** கதையின் நாயகன் தன் மனைவி மற்றும்
குடும்பத்தார் செயல்பாடுகளால் விரக்தி அடைந்து தற்கொலை செய்து கொள்கிறான்
** நிகழ்வுகள் எல்லாம் உளவியல் ரீதியான
அணுகுமுறை
**காளி பாசமாக வளர்த்த பூவரச மரத்தின் விழுதில்
தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்கிறான்
** காளி உயிராய் உணர்வாய் உடலாய் நேசித்த மனைவி
மற்றவனோடு என்பதால் மிகுந்த மனவேதனையின் உச்சத்தால் தற்கொலை செய்து
கொள்கிறான்
** கணவன் இறந்த பிறகு பூவர மரத்தைக் கூட அவன்
மீது கொண்ட பாசத்தால் பொன்னா வெட்ட விடவில்லை
**கணவனை இழந்த சோகம்,கணவன் இறப்பால் ஊர்
மக்களால் பேசப்படும் புரளிகள் வசவுகள் அன்புக்கணவனின் நினைவுகள் இவற்றாலே நாவல்
நகர்கிறது
** தன்மகன் இறந்த பிறகு மருமகளை மகளாக
பேணிப்பாதுகாக்கும் சீராயி தாய்மையின் சிகரம்
** சீராயி,வல்லாயி,பொன்னா என பெண்மைக்கு
முக்கியத்துவம் அளிக்கும் பாத்திரப்படைப்பு
**தனக்கு பிறந்த குழந்தையின் ஒவ்வொரு
செயல்பாடுகளையும் தன் கணவனின் செயல்பாடுகளோடு ஒப்பிட்டு குழந்தையை ஆலவாயன் என அன்போடு
அழைப்பதில் நாவல் நிறைவடைகிறது.
*நன்றிகளுடன்*
'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,
M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,
பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,
சங்ககிரி- 637301
இதுவரை உள்ள புத்தகங்களின் மொத்த தொகுப்புகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள DOWNLOAD - ஐ CLICK செய்து பார்த்துக் கொள்ளலாம்.
0 Comments