*தினம் ஒரு கல்விசார்ந்த புத்தகம்*
நாள்:98
தேதி:01-11-2022
புத்தகம் எண்ணிக்கை:98 தலைப்பு: பனிக்கால ஊஞ்சல்
ஆசிரியர்:கலாப்பிரியா
மேலும் கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான
இணைந்து கொண்டு ஆசிரியர்கள் pdf ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
**கலாப்ரியா தமிழின்நவீன கவிஞர்களில் குறிப்பிடத்தக்கவர். எழுபதுகளில் எழுதத் தொடங்கியவர்.
**கலாப்ரியாவின் இயற்பெயர் சோமசுந்தரம்.
**அறிஞர் அண்ணாவின் இரங்கல் கூட்டத்திற்காக முதன்முதலில் கவிதை (இரங்கற்பா) எழுதியவர் சோமசுந்தரம்.
**வண்ணநிலவனின் கையெழுத்து இதழான பொருநையில் கவிதை எழுதும் போது தனக்குத் தானே 'கலாப்ரியா' என்று பெயர் சூட்டிக்கொண்டார்.
**கசடதபறவில் கவிதைகள் வெளிவரும்போது கூர்ந்து கவனிக்கப்பட்டார்.
*கசடதபறவிற்குபின் வானம்பாடி, கணையாழி, தீபம் ஆகிய இதழ்களில் எழுதினார்
** மனதைக் கவர்ந்த கவிதைகள்
**விதையை
மண்ணில் ஒளித்து
வைக்கும்
வெள்ளந்திக்குப் பெயர்
விவசாயி
**ஆசையைத்
துறக்கப் போகும்
சித்தார்த்தனுக்கெதற்கு
அரச மர நிழல்
** விலா எலும்பிலிருந்து
அல்ல
ஒரு வேரிலிருந்துதான்
செய்திருக்க வேண்டும்
பெண்ணை
** உன் நினைவின்
போர்வைகளைப்
போர்த்திக்கொண்டால்
இன்னும் குளிர்கிறது
** தவம் என்பது
கேள்விகளை யோசிப்பதா
பதில்களை யோசிப்பதா
**உன்
காகிதக்கப்பல்
மிதப்பதும் மகிழ்ச்சி
என்
காகிதக்கப்பல்
மூழ்குவதும் மகிழ்ச்சி
உனக்கு
**மேலே வந்தால்
நீயே
பறித்துக் கொள்ளலாமே
ஏன் கல்லெறிகிறாய்
கீழே நின்று
**நீ மேல் படிக்கு
வந்தவுடன் என்னைக்
கீழே தள்ளு
கீழ்ப்படியிலிருந்துகொண்டே
காலை இழுக்காதே
**சிறகொடுக்கித்
தூங்குகிறது பறவை
யாரும் ஆடாத
தோட்டத்துப்
பனிக்கால
ஊஞ்சலெனோ.
**தவறாக
ஆயிரங்கால் மண்டபத்தினுள்
புகுந்துவிட்ட நாய்
திகைத்து நிற்கிறது
**நீ கொஞ்சம்
மெதுவாகப் போயிருக்கலாம்
உன்னைமுத்தமிட
நினைத்து உதிர்ந்த
மழைத் துளி
என் இமையை நனைக்கிறது
** வித்தியாசமான கவிதைகள் நம் மனதை கவர்கிறது
*நன்றிகளுடன்*
'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,
M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,
பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,
சங்ககிரி- 637301
0 Comments