தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்
கழகத்தின் சேலம் மாவட்ட பொதுக்குழு இனிதே சிறப்பாக நடைப்பெற்றது.... இவ்விழாவில் மருத்துவ
படிப்பில் சேர்ந்த அரசுபள்ளி மாணவர்களை பாராட்டி(டாக்டர் அணியும் கோர்ட்,ஸ்டெதஸ்கோப்
மற்றும் பதக்கம் ) வழங்கப்பட்டது...
கல்வி தொலைக்காட்சியில் பாடம் கற்பித்த ஜலகண்டாபுரம், அரசு மகளிர் மேல்நிலைப் , அறிவியல் பட்டதாரி ஆசிரியர், காயத்ரி அவர்களை பாராட்டி சிறந்த ஆசிரியர்களுக்கான விருது வழங்கப்பட்டது.
கொரோனா காலத்திலும் மற்றும் விடுமுறை நாட்களிலும்
பள்ளிக்கு வர இயலாத சூழ்நிலையில் மாணவர்களுக்கு KANI MATHS YOUTUBE
CHANNEL மற்றும் www.kanimaths.com இணையதளத்தின் மூலம் பல மாணவ மாணவியர்களின் நலன் கருதி சிறப்பாக செயல்பட்டு
பாடங்களை இணையவழியில் கற்பிக்கப்பட்ட சேலம் மாவட்டம், எடப்பாடி வட்டம், கொங்கணாபுரம்,
அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி பள்ளியில் , கணித பட்டதாரி ஆசிரியர் பா. திருகுமரேசகனி
அவர்களை பாராட்டி சிறந்த ஆசிரியர்களுக்கான விருது விருது வழங்கப்பட்டது.
எடப்பாடி
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கணித பட்டதாரி
ஆசிரியர் மோகனவேல் அவர்களை பாராட்டி சிறந்த ஆசிரியர்களுக்கான விருது விருது வழங்கப்பட்டது.
சங்ககிரி வடுகப்பட்டி
அரசு உயர்நிலை பள்ளி அறிவியல் பட்டதாரி ஆசிரியர் அருளாளன் அவர்களை பாராட்டி நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்பட்டது.
சிறப்பு விருந்தினராக
நம் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் திரு.து.சோமசுந்தரம் அவர்கள் கலந்துகொண்டு மிக
சிறப்பான முறையில் உரையாற்றினார்....
தினகரன் நாளிதழ் நாள்: 01.11.2022
சேலம் மாவட்டம் எடப்பாடி
வட்டம் கொங்கணாபுரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி. M. தேன்மொழி
அவர்கள் நம் பள்ளியில் பணிபுரியும் கணித பட்டதாரி ஆசிரியர் பா. திருகுமரேசகனி அவர்களுக்கு தமிழ்நாடு
பட்டதாரி ஆசிரியர் கழகம் மூலம் சிறந்த ஆசிரியர் விருது கொடுத்ததை தொடர்ந்து நினைவு
பரிசு வழங்கி பாராட்டினார்கள். மேலும் உடன் பணி புரியும் மற்ற ஆசிரிய - ஆசிரியைகளும்
பாராட்டினார்கள்.
0 Comments