*தினம் ஒரு கல்வி சார்ந்த புத்தகம்* - இது யாருடைய வகுப்பறை?


 

*தினம் ஒரு கல்வி சார்ந்த புத்தகம்*

நாள்:6

தேதி:1-8-2022

புத்தகம் எண்ணிக்கை:6

புத்தகத் தலைப்பு: இது யாருடைய வகுப்பறை?

ஆசிரியர்: “ஆயிஷா”  இரா.நடராசன்

   

மேலும் கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

இணைந்து கொண்டு ஆசிரியர்கள் pdf ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.          


** காலையில் பள்ளிக்கு குழந்தைகள் புன்னகையோடு வரும் சூழ்நிலை நிலவினால் மட்டுமே கல்வியில் மாற்றம் ஏற்பட்டதாக 

பொருள்.

 

**அடிக்காமல்,திட்டாமல் குழந்தைகளை

அன்பால் அரவணைக்க இந்தப்புத்தகத்தை படித்தாலே போதும்

 

** விடைகள் கேட்டு பழக்கப்பட்ட குழந்தைகளை கேள்விகள் கேட்டு பழக்க இந்தப்புத்தகம் உதவும்.

 

**இந்த நூல் ஏழு பெரும் கட்டுரைகளைக் கொண்டது.

 

**முதலாவது கட்டுரை பழங்காலத்தில் இருந்து இப்போது வரை குருகுலம், திண்ணைப்பள்ளி, மதரஸா, தேவாலயக்கல்வி , மறுமலர்ச்சி யுகக் கல்வி என கல்வி  முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைப் பற்றிப் பேசுகிறது.

 

** மாற்றம் என்பது மானிடதத்துவம்

 

**இரண்டாவது கட்டுரையின் தலைப்புஇது யாருடைய வகுப்பறை?” . கல்வியில் பெரிய தாக்கத்தை உண்டுபண்ணியவை ரூசோவின் சிந்தனைகளும், ஜான் டூயியின் சிந்தனைகளும். ரூஸோ கல்வியை(Education) முன் வைக்க, ஜான் டூயி பள்ளியை(Schooling) முன் வைத்தார் என்கிறார் நடராசன்

 

**“ கல்வி என்பது பரந்துபட்ட செயலாக்கம்; ஆனால் பள்ளி ஒரு குறுகிய செயலாக்கம்.” என இரண்டையும் வேறுபடுத்தி காட்டுகிறார்

 

**மூன்றாவது இயலின் தலைப்புஅறிவியல் தெரியும் ராமலிங்கத்தைத் தெரியுமா?’ என்பது. ஓர் அறிவியல் ஆசிரியர்க்கு அறிவியலும் தெரிந்திருக்க வேண்டும். அறிவியல் கற்கும் மாணவன் ராமலிங்கத்தைப் பற்றியும் தெரிந்திருக்க வேண்டும் என்பது இக்கட்டுரையின் நோக்கம்.

 

** “ குழந்தையைப் புரிந்து கொள்வதே ஒரு ஆசிரியனின் அடிப்படைத் தகுதிஎன்று பெருங்குரலெடுத்து நூலாசிரியர் கூறுகிறார்.

 

**நான்காவது கட்டுரையின் தலைப்புவகுப்பறையின் மேற்கூரை தீப்பற்றிய போதுஎன்பதாகும். துள்ளி ஓட வேண்டிய குழந்தைகள் கை கட்டி வாய் பொத்தி நெருப்பில் வெந்து மடிந்த கும்பகோணத்துத் துயரத்தை நினைவூட்டிப் பதைக்க வைக்கும் கட்டுரை இதுவாகும்.

 

**ஐந்தாவது கட்டுரையின் தலைப்புஉள்ளேன் டீச்சர்என்பதாகும். எங்கு மாணவர்கள் பாதுகாப்பை உணருகிறார்களோ, எங்கு பயம் இல்லாமல் இருக்கிறதோ அப்படிப்பட்ட வகுப்பறைச் சூழலே வல்லமையுள்ள கற்றுணரும் சரியான இடம் ஆகும் என்கிறார் நூலாசிரியர்.

 

**ஆறாவது கட்டுரையின் தலைப்பு, “ அவங்க வகுப்பறை நம்ம வகுப்பறைஎன்பதாகும். பிறநாட்டு வகுப்பறைகளை அலசும் இக்கட்டுரை , பின்லாந்து, கியூபா நாடுகளின் கல்விமுறையைப் பரவசத்துடன் பகிர்ந்து கொள்கிறது

 

**கெடுபிடியும் இறுக்கமும் அற்ற வகுப்பறைகளை உருவாக்கி இன்று கல்வித்தரத்தில் முன்னுக்கு நிற்கிறது பின்லாந்து. கியூபாவில்வகுப்பறை என்பது பாடப்புத்தக ஆதிக்கத்தில் சிக்கிய வகுப்பறை அல்ல. முழு மனிதனை உருவாக்கும் பட்டறை அது. ஜப்பானின் சுமையற்ற யுட்டோரி கல்வித்திட்டமும் வெகுவாக நம்மை ஈர்க்கிறது

 

**கடைசி கட்டுரைவகுப்பறையின் சுவர்களைத் தகர்த்தெறிவோம்என்பது ஆகும். ஆசிரியர் என்பவர் பாடம் நடத்திப் போகிறவர்  மட்டுமல்லர். அவர் வகிக்க வேண்டிய பாத்திரங்கள் ஏராளம் இருக்கின்றன. அவற்றைப் பட்டியலிடுகிறது இக்கட்டுரை.

 

** வகுப்பறை மகிழ்வான மாணவருக்கான வகுப்பறையாக மாற முதன்மையான பணி

ஆசிரியர் தினந்தோறும் படிக்க வேண்டும்.கற்பிப்பதை விட மாணவர்களோடு கற்றுக்கொள்ள வேண்டும்

 

*நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' .பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A.,M.COM.,M.SC.,M.SC.,M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

 2022 - 2023 கல்வியாண்டிற்கான ஆசிரியர்களுக்கு அனைத்து தகவல்களும் உடனுக்குடன் நமது இணையதளமான www.kanimaths.com பதிவேற்றம் செய்யப்படும்.

 

கீழே கொடுக்கப்பட்டுள்ள Click here என்ற ஆங்கில வார்த்தையை பயன்படுத்தி அனைத்து ஆசிரியர்களும் தகவல்களை pdf மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.



🌏🌏 Join Us Social Media:-


Join as Telegram Group : Click here

Join as kanimaths group - 1  : Click here


Join as kanimaths group - 2 : Click here   

Post a Comment

0 Comments