மோட்டார் சைக்கிள் டைரிகள் ஆசிரியர்:சேகுவேரா

 




*தினம் ஒரு கல்விசார்ந்த புத்தகம்*

நாள்:88

தேதி:22-10-2022

புத்தகம் எண்ணிக்கை:88

தலைப்பு: மோட்டார்

 சைக்கிள் டைரிகள்

ஆசிரியர்:சேகுவேரா

தமிழில்: என்.ராமநாதன்

 மேலும் கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

இணைந்து கொண்டு ஆசிரியர்கள் pdf ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.      

**சேகுவேராவும் அவரது நண்பர் ஆல்பெர்டாவும் லா பெட்ரோஸா என்னும் மோட்டார் சைக்கிளில் தென் அமெரிக்காவை சுற்றிவரும் போது ஏற்பட்ட அனுபவங்களின் தொகுப்பே இந்த நூல் ஆகும்

 

** மோட்டார் சைக்கிளில் பயணம் செய்யும் போது அவர்கள் ரசித்த காட்சிகள்,உபசரித்த மனிதர்கள்,பார்வையிட்ட காட்சிகள் போன்றவற்றை டைரிகளில் குறித்து வைத்துள்ளதின் தொகுப்பே இந்த நூல்

 

**அர்ஜெண்டினாவில் தொடங்கி சிலி, பெரு, வெனிசூலா, பொலிவியா என்று லத்தீன் அமெரிக்க நாடுகளிடையே எர்னஸ்டோ மேற்கொண்ட பயண அனுபவங்கள் மோட்டார் சைக்கிள் டைரிக் குறிப்புகளாக வெளிவந்தன.

 

*" தனித்துவமிக்க இந்தப் புத்தகத்தில் எர்னஸ்டோ தன் அனுபவங்களையும், தரிசித்த நாடுகளின் அரசியல், சமூக, வரலாற்றுப் பின்புலத்தையும் பதிவு செய்திருக்கிறார். இந்தப் பயணம் எர்னஸ்டோவை உலகின் முதன்மையான புரட்சியாளராக உருமாற்றியது.

 

** ஒரு தேர்ந்த மார்க்சிஸ்டாகவும், தீரமிக்கப் போராளியாகவும் வளர்த்தெடுத்தது. மக்களை நேசித்து, மக்களுக்காக வாழ்ந்து, மக்களுக்காக உயிர் துறக்கும் நெஞ்சுரத்தையும் மாண்பையும் பெற்றுத் தந்தது

 

**எர்னஸ்டோ என்னும் சாமானியனை சே குவேராவாக உருமாற்றியது.

 

** சேகுவேரா புரட்சியாளராக மாறுவதற்கு இந்த பயணமும் ஒரு அடிப்படை

 

** பல்வேறு விளிம்பு நிலை மக்களை பார்வையிட்டு ஆராய்ந்து அறிய இந்த பயணமும் ஒரு வழிகாட்டி

 

** இந்த டைரியினை படித்ததன் விளைவு நம் வாழ்க்கையில் நடைபெறும் ஒவ்வொரு நிகழ்வுகளையும் குறித்து வைத்துக்கொள்ள ஆர்வம் ஏற்படும் என்பது உறுதி

 

** சேகுவேராவின் தத்துவங்கள்

 

*ஒவ்வொரு அநீதியையும் கண்டு ஆத்திரத்தில் அதிர்ந்து போவாயானால் நீ எனது தோழன்.

 

*உன் இனத்தில் யார் பெயரை சொன்னால் , எதிரி குலை நடுங்குவானோ அவனே உன் இனத்தின் தலைவன்.

 

*போருக்குச் செல்லும்போது கையில் ஆயுதம் கொண்டு செல்ல வேண்டும் என்பது அவசியம் இல்லை. நீ சுத்த வீரன் என்றால் உனக்கான ஆயுதத்தை நீ செல்லும் போர்க்களத்திலேயே உன்னால் சம்பாதித்து கொள்ள முடியும்

 

*உன்னால் செய்ய முடியாததை , கடைபிடிக்க முடியாததை மற்றவனிடம் எதிர்ப்பார்க்காதே!

 

*விதைத்துக் கொண்டே இரு. முளைத்தால் மரம் , இல்லையேல் உரம்.

 

*எங்கே நல்ல புத்தகங்கள் எரிக்கப்படுகின்றனவோ, அங்கே விரைவில் நல்ல மனிதர்களும் எரிக்கப்படுவார்கள்.

 

*நீ மண்ணுக்காக போராட தயங்குகிறாய், ஆனால் ஒவ்வொரு விதையும் மண்ணோடு போராடியே மரமாகிறது.

 

*புரட்சிகள் உருவாகுவதில்லை நாம் தான் உருவாக்க வேண்டும். *நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' .பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

இதுவரை உள்ள புத்தகங்களின் மொத்த தொகுப்புகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள DOWNLOAD - ஐ CLICK செய்து பார்த்துக் கொள்ளலாம்.

Post a Comment

0 Comments