*தினம் ஒரு கல்விசார்ந்த புத்தகம்*
நாள்:64
தேதி:28-09-2022
புத்தகம் எண்ணிக்கை:64
புத்தகத்தலைப்பு: வாசிப்பு வசப்படும்
ஆசிரியர்:ச.சுப்பாராவ்
** மொத்தம் பதினாறு பக்கங்கள் தான் நாம் படித்தவுடனே நமது வாசிப்பு ஆர்வத்தை தூண்டும்
** குறைந்த பக்கங்களில் நிறைந்தது மன நிறைவு.
**புத்தக வாசிப்பு ஒரு காலை.
**எந்த ஒரு கலையையும் கற்க, அறிந்துகொள்ள நாம் செலவிட வேண்டிய மூன்று அடிப்படை விசயங்கள் நமது நேரம், உடல்ரீதியான, மனரீதியான முயற்சி.
** ஏராளமான ஆய்வுகளுக்குப் பிறகு வாசிப்பு நிபுணர்கள் பத்துச் சதவிகித விதியை உருவாக்கியிருக்கிறார்கள்
** எந்த ஒரு புத்தகத்தை எடுத்தாலும், தினமும் அதில் பத்து சதவிகிதம் படிப்பது என்று உறுதி ஏற்படுத்திக்கொள்வது.
** வாசிப்பிற்கு நமது ஆழமான மனவிருப்பம் மிக முக்கியம். அதைவிட முக்கியம் நாம் எவ்வளவு சாப்பிட்டாலும், அம்மா இன்னும் கொஞ்சம் என்று எக்ஸ்ட்ரவாகக் கொஞ்சம் திணிப்பாளே அது போல இன்னும் கொஞ்சம் கூடுதலாக என்ற ஆசை.
**வாசிப்பு என்பது ஓர் ஆன்மாவின்இராகம்.
அது அறிவிற்கும் ஆற்றலுக்கும் உள்ளஓர் உறவுப்பாலம். அதனால் தான் வாசிக்கின்றசமுதாயம் உலகை ஆளும் என்பார்கள்.
**நம்நாட்டில் சராசரி ஆண்டிற்கு ஒவ்வொரு நபரும் 2புத்தகங்களே வாசிக்கின்றனர் என்பது ஓர்ஆய்வில் தெரிய வந்துள்ளது. மேலைநாட்டினரோ ஆண்டிற்கு ஆறிலிருந்து 10புத்தகங்கள் வரை வாசிக்கின்றனர் என்று மேலும்அத்தகவல் தெரிவிக்கின்றது
**இந்தி சுதந்திர போராட்டவாதி மாவீரன்
பகத்சிங்கை தூக்கில் போடும் சில மணித்துளிகளுக்கு முன்பு அன்னாரின் கடைசிஆசை என்ன என்று வினவிய போது, அவர்சொன்ன அந்த வார்த்தைகளை நாம் சிந்தித்துப்பார்க்க வேண்டும்.
‘நான் படிக்கும் புத்தகத்தைஇன்னும் முடிக்க
வில்லை; நான் படித்து முடித்தப்பிறகு என்னைத் தூக்கில் போடுங்கள்’ என்றார்.அது அன்னாருன் கடைசி ஆசை என்றால்,வாழும் காலத்திலேயே நாம் வாசித்து விடவேண்டும் அல்லவா
** ‘ஓதாமல் ஒரு நாளும் இருக்கவேண்டாம்’
என்று ஔவை சொன்னது கல்விக்குமட்டும்
தான் என எண்ணிவிடலாகாது.வாசிக்காமல்
ஒரு நாளும் இருக்க வேண்டாம்என்று நினைத்து சிந்தித்துப் பாருங்கள், வானம்வசப்படும்.
** அறிவும் ஆற்றலும் புத்தாக்கச்சிந்தனைக்கு அடித்தளமாகும்.அவ்விரண்டையும் ஒருங்கே கொடுப்பதுவாசிப்பு என்றால் அது மிகையாகாது.
**வாசிப்பை நம் சுவாசமாகமாற்றாவிட்டாலும்
பராவாயில்லை. குறைந்ததுநம்
வாழ்வின் பண்பாடாக மாற்ற முடிந்தால், நம்சமுதாயத்தில் மிகப் பெரிய மறுமலர்ச்சியைக்காண முடியும்.
**மேலை நாடுகளில் வாசிப்புப்பழக்கம் ஒரு
பண்பாடாக கடைப்பிடிப்பதால்தான் அவர்கள் நம்மை விட 20 ஆண்டுகள்வளர்ச்சியில்
முன்னோடியாக இருக்கிறார்கள்.
**வாசிப்பு என்று தனியாகப்பார்க்காமல்
அதனை பண்பாட்டோடு கலந்துவிட்டால்
நிச்சயம் பெரிய மாற்றத்தைஎதிர்ப்பார்க்கலாம்.
பண்பாடு என்பது நம்வாழ்க்கையின்
வெளிப்பாடு. அந்தவாழ்க்கைக்குள்
மாணவர்களைக் கொண்டு வந்துவிட்டால்,
பிறகு அவர்களின் வாசிப்பு தாகத்தைத்தீர்க்க
நமக்கு புத்தகங்கள் போதாது.
*நன்றிகளுடன்*
'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,
M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC.,
M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,
பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,
சங்ககிரி- 637301
0 Comments