*50- வது நாள் சிறப்பு புத்தகம்* எனது பதிவுகளை படித்து இதுவரை வாழ்த்தி உற்சாகப்படுத்திய முகமறியா நண்பர்கள் மற்றும் நேரிலும் செல்பேசியிலும் ஊக்கப்படுத்திய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். * வாசிப்போம் வளம் பெறுவோம். *தினம் ஒரு கல்விசார்ந்த புத்தகம்*
நாள்:50
தேதி:14-09-2022
புத்தகம் எண்ணிக்கை:50
புத்தகத்தின் தலைப்பு: கரும்பலகையில் எழுதாதவை
ஆசிரியர்: பழ.புகழேந்தி
மேலும் கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான
இணைந்து கொண்டு ஆசிரியர்கள் pdf ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
*தினம் ஒரு கல்வி சார்ந்த புத்தகம் பதிவு இன்றுடன் ஐம்பதாவது நாள் பதிவு சில புத்தகங்களை படிக்கும் போது என்னையறியாமல் அழுது உள்ளோன் அப்படிப்பட்ட புத்தகம் தான் இது
*நமது மனதில் ஒரு இனம் புரிய அனுபவத்தை உருவாக்கும் புத்தகம்.
*கண்டீப்பாக படிக்க வேண்டிய புத்தகம்
** அட்டைப்படமே எனக்கு ஒருவிதமான ஈர்ப்பை ஏற்படுத்தியது.சங்கீத ஒலியோடு சுயமாகப் பறக்கும் வண்ணத்துப்பூச்சி பார்க்க பார்க்க அழகாய் இருந்தது
** குழந்தைகளை நேசித்து குழந்தையாக வாழும் குழந்தையுள்ளம் கொண்ட ஒருவரால் மட்டுமே இப்படி எழுத முடியும்
** தாய்மொழியால் கற்பித்தால் குழந்தையின் சிந்தனை சிறப்பாய் அமையும் என அறிஞர்கள் கூறியது இன்று பொய்யாகிவிட்டதை அழகாய் படம் பிடித்துக்காட்டுகிறார்
தமிழில் பேசினால்
தண்டனை தரும் பள்ளி
தினமும் தொடங்குகிறது
தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடி...!
**நேற்று
ஒரு குழந்தையை
அடித்துவிட்டேன்
இன்னும் வலிக்கிறது
எனக்கு..!
என்ற வரிகள் கவிஞரின் மென்மையான இதயத்தை காட்டுகிறது
** ஒரு குழந்தை தந்தையின் ஞாபகத்தால் அழுகிறது என்பதற்காக கோடு போட்ட சட்டையைத் தவிர்த்து விடுமுறை போடும் கவிஞரின் தாய் உள்ளம் யாருக்கு வரும்
** விடைகள் சொல்லவே
பழக்குகிறோம்
பழக்கியதே இல்லை
கேள்வி கேட்க..!
என்ற வரிகள் இன்றைய கல்விமுறைகளை காட்டுகிறது
** எழுதப்படாத கரும்பலகையாய்
குழந்தைகள் மனசு...!
என்ற இருவரிக்குள் எவ்வளவு உண்மை
** வீட்டுப்பாடம்
எழுதாததற்காய்
முட்டி போடச் சொன்னேன்
சிறுவனை
மனசுக்குள் உறுத்தியது
அன்று
கையெழுத்து வாங்க வேண்டிய
பாடக்குறிப்பை
தலைமையாசிரியரிடம்
காட்டாதது...!
பாசத்தை விடவும்
வலிவாகவே இருந்தது
பாழாய்ப்போன நம்பிக்கைகள்...!
என்ற வரிகள் மூடநம்பிக்கைகளை அழகாய் காட்டுகிறது
** தேர்வறையில்
மேற்பார்வையாளராய்
இருக்கையில்
வாசலுக்கு வெளியே
வண்ணத்துப்பூச்சி...!
இயற்கையை நேசிக்கும் கவிஞரின் அன்பு உள்ளம் தெரிகிறது
** கேள்வித்தாளின் பின்புறம்
வரையப்பட்ட ஓவியத்தில்
பூர்த்தியாகி இருந்தது
அவன்
தேர்வு முடித்த
மிச்ச நேரம்..!
எந்தக் குழந்தைகளையும் எந்த தேர்வும் கட்டிப் போட முடியாது என்பதை தெளிவாக விளக்குகிறார்.
** விடைத்தாள்களை
சிவப்பு மையால் தான்
திருத்த வேண்டி இருக்கிறது...!
என்ற வரியில் கவிஞரின் மனது தெரிகிறது.
** புகழேந்தி அவர்களின் கவிதைகளை படிக்கும் போதுதான் புரிகிறது.எவ்வளவு தொலைவில் மாணவர்களை விட்டு இருக்கிறோம் என்று
** ஆசிரியர்கள்,கவிதை ஆர்வலர்கள் கண்டீப்பாக படிக்க வேண்டிய நூல்
*நன்றிகளுடன்*
'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,
M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,
பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,
சங்ககிரி- 637301
0 Comments