அறியப்படாத தமிழகம் ஆசிரியர் : தொ. பரமசிவன்



*தினம் ஒரு புத்தகம்*

நாள்:166

தேதி:08-01-2023

புத்தகம் எண்ணிக்கை:166

புத்தகத்தின் பெயர் : அறியப்படாத தமிழகம் 

ஆசிரியர் : தொ. பரமசிவன் 

விலை : 50 

பக்கங்கள் : 112 

பதிப்பகம் : நற்றினை பதிப்பகம்

  கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

 KANI MATHS Educational Group -ல்  இணைந்து கொள்ளலாம். 


* வாசிக்கவும் சிந்திக்கவும் விவாதிக்கவும் வலிமை இழந்து நமது பெருமைகளை மறந்து போன இளைஞர்களை மனதில் கொண்டு இந்த சிறு நூல் எழுதப்பட்டுள்ளது 

 

*தொ.பரமசிவன் அவர்களின் இந்த நூல் ஏழு கட்டுரைகளை உள்ளடக்கியது 

 

*அறியப்படாத தமிழகம் என்ற நூலின் தலைப்பே அறிந்து கொள்ள நம்மை தூண்டுகிறது 

 

*எனக்கு மிகவும் பிடித்த தலைப்பு "தைப்பூசம்" ஆகும்

 

*அறியப்படாத தமிழகம் நூல் கண்டிப்பாக ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய நூல் 

 

*நாம் தமிழராக பிறந்துவிட்டு நமது நாட்டில் இவ்வளவு விஷயங்களை தகவல்களை அறிந்து கொள்ளாமல் இருந்து விட்டோமே என வருத்தப்பட வைக்கிறது 

 

*பல அறிவியல் பூர்வமான தகவல்களை ஆதாரங்களுடன் நூலில் அழகாய் விவரிக்கிறார் 

 

*ஒவ்வொரு தகவலையும் படிக்க படிக்க  மிக ஆச்சரியமாக உள்ளது 

 

*இந்த நூலைப்படிக்க படிக்க நாம் தமிழர் என்பதில் பெருமிதம் ஏற்படுகிறது 

 

*தமிழ் என்ற சொல் தமிழருக்கு இனிமையானது "இனிமையும் நீர்மையும் தமிழெனல் ஆகும்" என்று பிங்கல நிகண்டு குறிப்பிடுகிறது 

 

*தமிழ் என்ற சொல்லை இனிமை ,பண்பாடு அகப்பொருள் என்ற பொருள்களிலும் வழங்கியுள்ளனர் 

 

*சிவநெறி தமிழ்நாட்டில் பிறந்தது என குறிக்க வந்த சேக்கிழார் "அசைவில் செல்லும் தமிழ் வழக்கு " என சைவத்தையும் "அயல் வழக்கு" என சமணத்தையும் குறிப்பிடுகிறார் 

 

*"தெள்ளமுதின் மேலான முத்திக்னியே என் முத்தமிழே " என்று தமிழை முத்தி தரும் பொருளாகவும் தமிழ்விடு தூது 

 குறிப்பிடுகிறது 

 

*முதலாம் ஆதித்த சோழன் தனது வெற்றிக்கு உதவிய படைத்தலைவன் ஒருவனுக்கு "செம்பியன் தமிழவேள்"என்ற பட்டங்களை கொடுத்துள்ளதாக சான்றுள்ளது 

 

*நீர் என்பது வானத்திலிருந்து வருவது என்பதனால் அதனை அமிழ்தம் என்று வள்ளுவர் குறிப்பிடுவார் 

 

*நீர் நிலைகளுக்கு தமிழர்கள் வழங்கி வந்த பெயர்கள் பல சுனை, கயம் பொய்கை ,ஊற்று என்பன தானே நீர்கசிந்த நிலப்பகுதிகளாகும் 

 

*குட்டை மழை நீரின் சிறிய தேக்கமாகும் 

 

*குளிப்பதற்கு பயன்படும் நீர்நிலைக் குளம் என்பதாகும் 

 

*உண்பதற்கு பயன்படும் நீர்நிலை ஊரணி என்பதாகும் 

 

*ஏர் தொழில் பெயர் தொழிலுக்கு பயன்படும் நீர்நிலை ஏரி

 

*மழை நீரை மட்டும் ஏந்தி நிற்கும் நிலையினை ஏந்தல் என்றும் 

 

*கண்ணாறுகளை உடையது கண்மாய்என்றும் தமிழர்கள் பலவிதமாக பழங்காலத்தில் அழைத்துள்ளனர் 

 

*சமைத்தல் என்ற சொல்லுக்கு பக்குவப்படுத்துதல் என்று பொருள் 

 

*அடுப்பில் ஏற்றி சமைப்பது அடுதல் எனப்படும் சமையல் செய்யப்படும் இடம் அட்டில் அல்லது அடுக்களை தமிழர் வீட்டு அமைப்பில் வீடு எந்த திசை நோக்கி அமைந்திருந்தாலும் சமையலறை வீட்டின் வடகிழக்கு அல்லது தென்மேற்கு மூளையில் அமைக்கப்படுகிறது 

 

*வற்றல் என்பது மழைக்காலத்திற்கு என சேமிக்க சேமிக்கப்பட்ட உணவாகும் காய்கறிகள் நிறைய கிடைக்கும் காலத்தில் உப்பு கலந்த மோரில் ஊறவைத்து பின்னர் வெயிலில் நீர்வற்ற காயவைத்து சேமிப்பர் 

 

*உப்பு என்ற தமிழ் சொல்லுக்கு சுவை என்பதே முதல் பொருள் இனிப்பு கசப்பு துவர்ப்பு என்று சுவைகள் எல்லாம் உப்பு என்ற சொல்லை அடிப்படையாகக் கொண்டு பிறந்தது 

 

*சமையலுக்கு பயன்படுத்தும் உப்பிற்கு வெள்ளுப்பு என்று பெயர் 

 

*பழந்தமிழ் நாட்டு பொருளாதாரத்திலும் தமிழ் பண்பாட்டிலும் உப்புக்கு தனி இடம் உண்டு பழந்தமிழர்களால் சுவையின் சின்னமாகவும் வளத்தின் சின்னமாகவும் உப்பு கருதப்பட்டது 

 

*தன் உருவம் தெரியாமல் பிற பொருள்களோடு கலந்து கொண்டு பயன் தருவதால் வெள்ளுப்பு என அழைக்கப்படுகிறது இன்றும் தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் புது மணமகள் தன் கணவன் வீட்டிற்கு நுழையும் போது ஒரு சிறு ஓலைக்குடையில் உப்பை எடுத்துக் கொண்டே நுழைகிறார் அதுபோல புதுமனை புகு விழாக்களிலும் உறவினர்கள் அரிசியினையும் உப்பினையும் அன்பளிப்பாக கொண்டு வருவார்கள் 

 

*ஒருவர் இறந்து எட்டாவது அல்லது பத்தாவது நாளில் இறந்தவர்களுக்கு படைப்பு உணவினை உப்பில்லாமல் செய்வது வழக்கம் இன்னும் தமிழரிடத்தில் உள்ளது 

 

*தின்ற உப்பிற்கு துரோகம் செய்வது என்பது நன்றி மறந்தவனை காட்டும் ஒரு பழமொழி. 

 

*ஆடி அறுதி எனப்படும் ஆடி மாத கடைசி நாளிலும் தைப்பொங்கலுக்கு மறுநாளான கரி நாளிலும் விருப்பத்துடன் புலால் உண்ணுவது தமிழர் வழக்கமாகும் 

 

* சங்ககால சங்க இலக்கியத்தில் வீடு என்பதற்கு பதிலாக மனை என்ற சொல்லே காணப்படுகிறது உண்டு 

 

 *தமிழர்களின் தனிப்பெரும் திருவிழாவாக திகழ்வது தைப்பொங்கல் திருநாளாகும் தேசிய இனத்துக்குரிய அடையாளம் ஒன்றை தமிழருக்கு வழங்கும் திருவிழா இது சமய எல்லைகளைக் கடந்த திருவிழாவாகவும் இது அமைகிறது 

 

*தன் குடும்பத்தின் கடுமையான துயர வேளையிலும் துயரத்தில் பங்கேற்க வந்தவரின் பசி உணர்வை சிந்தித்துப் பார்த்து உண்ணச் செய்வது தமிழர்கள் தம் வாழ்வின் விருந்தோம்பலுக்கு தந்த சிறப்பிடத்தை காட்டி நிற்கிறது 

 

"அறியப்படாத தமிழகம் இந்த நூலை படிக்க படிக்க படிக்க ஒவ்வொரு வரிகளும் நமது தமிழின பண்பாடுகளை, கலாச்சாரங்களை ,பழக்க வழக்கங்களை மறந்துவிட்டாதை  நம் கண் முன்னே கொண்டு வருகிறது 

 

*எவ்வளவு பெருமை வாய்ந்த இனம் தமிழ் இனம் என்பதை காலக்கண்ணாடி போல் பிரதிபலிக்கிறது

 

*கண்டீப்பாக ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய புத்தகம் ஆகும்

 

 *நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

        இதுவரை உள்ள புத்தகங்களின் மொத்த தொகுப்புகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள DOWNLOAD - ஐ CLICK செய்து பார்த்துக் கொள்ளலாம்.

Post a Comment

0 Comments