*தினம் ஒரு புத்தகம்*
நாள்:178
தேதி:20-01-2023
புத்தகம் எண்ணிக்கை:178
புத்தகத்தின் பெயர்:மானுட வாசிப்பு
ஆசிரியர் :
சண்முகானந்தம்
விலை :120
பக்கங்கள் :118
பதிப்பகம் :தடாகம் வெளியீடு
KANI MATHS Educational Group -ல் இணைந்து கொள்ளலாம்.
*தமிழகப்பண்பாட்டு ஆய்வாளர்களில் முதன்மையானவர்
தொ.பரமசிவன்
*நாட்டார் மக்களின் வாய்மொழி வழக்காறுகள்
,சடங்குகள் ,உரையாடல்களிலிருந்து ஆய்வை முன் தொடுத்தவர் தொ.பரமசிவன்
*சிறு தெய்வ வழிபாடுகள் குறித்து இவரது ஆய்வுகள்
முக்கியத்துவம் வாய்ந்தது
*சிறு தெய்வங்கள் பற்றி ஆதாரப்பூர்வமான தகவல்கள்
பல தந்துள்ளார்
*இந்த நூலில் 18 தலைப்புகளின் கீழ் கேட்கப்பட்ட
கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்
*எனக்குப்பிடித்த கேள்வி பதில் பகுதி கல்வி
மற்றும் அழகர் கோயில் என்ற இரு தலைப்புகளில் கேட்கப்பட்ட கேள்விகள் ஆகும்
*ஒரு அற்புதமான ஆளுமையோடு நிகழ்த்துகின்ற
நேர்காணல் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான முன்மாதிரியாக இருக்கிறது
இக்கலந்துரையாடல் கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்குரிய பதில்களும் மிக அருமை
*அறிவின் துருத்தல்களற்ற வினாக்களும்
அகந்தைகளற்ற விவரிப்பமாக தெளிந்தோடும் ஆறெனச்செல்கிறது பதில்
*எதை எடுக்க வேண்டும் என்பது நேர் கண்டவர்களுக்கும்
தெரிந்திருக்கிறது எதை பதிலாக கொடுக்க வேண்டும் என்பது எதிர் கொண்ட தொ.ப
அவர்களுக்கும் தெரிந்திருக்கிறது
*இந்த நேர்காணல் தொ.பரமசிவன் அவர்களின் மீது
கண்டிப்பாக ஒரு தேடலை உருவாக்கி இருக்கும்
*பல்வேறு புத்தகங்களை படிப்பதால் ஏற்படும்
அனுபவத்தை படிக்கும்போது இந்நூல் ஏற்படுத்துகிறது
*பண்பாட்டை எப்போது உணர முடியும் பண்பாட்டை
மீறும் போது தான் பண்பாட்டை உணர முடியும் என்று நறுக்கு தெரித்தார் போல் பதில்
* தமிழ்ப்பண்பாடு என்பது வடவேங்கடம் தென்குமரி
ஆயிடை தமிழ் கூறும் நல்லுலகு என்று கூறுகிறது தொல்காப்பியம்
*"நெடியோன் குன்றமும் தொடிநாள் பௌவமும்
தமிழ் வரம்பறுத்த தன் புனல் நல் நாட்டு"
என்கிறது சிலப்பதிகாரம்
*இந்தியாவிலேயே அதிக அளவில் கல்வெட்டுகள் உள்ள
மாநிலம் தமிழ்நாடு அதிகாரப்பூர்வமற்ற அளவீட்டின் படி இங்கு ஒரு லட்சம்
கல்வெட்டுகள் உள்ளன 50000கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது 25000
கல்வெட்டுகள் படிக்கப்பட்டு இருக்கிறது
*திடீர்னு தெய்வம் உங்க முன்னாடி வந்தால் என்ன
வேண்டும் என்று கேட்டால் என்ன கேட்பீங்க ?
அடுத்த பிறவியிலும் இந்த ஊரில் பிறக்கணும்
அதுலயாவது சிலப்பதிகாரத்தை ஒழுங்கா படிக்கணும்னு கேட்பேன்
இறுதி கேள்விக்கான இந்த பதிலே மீண்டும் மீண்டும்
தொ.ப வை நோக்கி என்னை ஓடச்செய்தது
*தொ.பா என்ற மாபெரும் தமிழ் சமூக பண்பாட்டு
வரலாற்று விஞ்ஞானியின் படைப்புகளை இவ்வளவு காலம் படிக்கவில்லையே என்ற வருத்தம்
தான் வருகிறது
*நேர்காணல் வகை நூல்களில் இது முன்னோடி மற்றும்
பொக்கிசம்.
*நன்றிகளுடன்*
'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,
M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,
பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,
சங்ககிரி- 637301
இதுவரை உள்ள புத்தகங்களின் மொத்த தொகுப்புகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள DOWNLOAD - ஐ CLICK செய்து பார்த்துக் கொள்ளலாம்.
0 Comments