தினம் ஒரு புத்தகம்
நாள்:275
தேதி:06-05-2023
புத்தகம் எண்ணிக்கை:275
புத்தகத்தின் பெயர் : அன்பே தவம்
ஆசிரியர் : குன்றக்குடி பொன்னம்பல அடிகள்
பதிப்பகம் : ஆனந்தவிகடன்பதிப்பகம்
விலை : 240
பக்கங்கள் : 320
மேலும் கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான
இணைந்து கொண்டு ஆசிரியர்கள் pdf ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
*அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.
*அன்பு இல்லாதவர், எல்லாவற்றையும் தனக்கு உரியது
என்பர்; அன்பு உள்ளவர்களோ, எனது உயிரும் பிறருக்கே என்பர் என்கிறார் வள்ளுவப் பெருந்தகை.
*ஆன்மிக நெறிகளும் அன்பைத்தான் முதற்பொருளாகக்
கூறுகின்றன. எல்லா மதங்களின் கோட்பாடுகளும் அன்பை அடிப்படையாகக்கொண்டு
கட்டமைக்கப்பட்டவையே.
*இன்றைய அதி அவசர உலகில் சக மனிதரிடம்,
உயிர்களிடம் அன்புகாட்டுவது என்பது அரிதாகிப்போய்விட்டது. ஆனால், உலகெங்கினும் பிற
உயிரிடம் இரங்கும் அன்புள்ளம்கொண்டவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் தனி
மனிதராகவோ, ஆன்மிகவாதிகளாகவோ, மருத்துவர் களாகவோ, தொண்டு செய்பவர்களாகவோ இயங்கிக்
கொண்டிருக்கிறார்கள்.
*அந்த வரிசையில் தமிழ்நாட்டில் குன்றக்குடி
ஆதீனம் பல்லாண்டுகளாக கல்வி உள்ளிட்ட பல அறப்பணிகளைச் செய்து வருகிறது.
*ஆன்மிக வழியில் அன்பை வலியுறுத்தும்
குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், ஆனந்த விகடனில் எழுதிய தொடர் கட்டுரைகள்
தொகுக்கப்பட்டு நூலாக்கம் பெற்றுள்ளது.
*‘அன்புநிலையே வாழ்வின் உயர்நிலை’ என்பதை வலியுறுத்தும் இந்த நூல், அனைவரும்
படித்துப் பின்பற்ற வேண்டிய அறநூலாகும்!
*இன்பமும் துன்பமும் கலந்ததுதானே வாழ்க்கை.
வாழ்க்கையின் எல்லா நலன்களையும் பொத்தான்களை இயக்கிப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று
எல்லோரும் விரும்புகிறார்கள்.
*வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியிலும் நிகழும்
நிகழ்வை ஏற்றுக்கொண்டு எதிர்கொண்டு, வாழப் பழகிக்கொள்ள வேண்டும்.
*எல்லாவற்றிலும் இயைந்தும் இசைந்தும் வாழ்வதே
வாழ்க்கை. நம் வாழ்வைத் தவற விட்டுவிட்டு வாழ்க்கையின் மீதே பழி போடுகிறோம்.
மகாபாரதத்தில் ஒரு காட்சி.
*இன்று நம் குடும்ப அமைப்பில் அன்பு
தேவைப்படுகிறது. அன்பு குறைவதால் பல சிக்கல்கள் உருவாகின்றன.
*அன்பு குறைவதே ஆதரவற்ற இல்லங்கள் அதிகரிக்க
காரணமாகின்றன. பெரியவர்களை பாதுகாக்க தவறுகின்றனர்.
*குழந்தைகளை கவனிக்க தவறுகின்றனர். எனவே
அனைவரிடமும் அன்பு பாராட்ட வேண்டும்
*குறிப்பு*
*இந்தப் புத்தகம் பள்ளிபாளையம் அரசு கிளை
நூலகத்தில் இருக்கிறது*
*நன்றிகளுடன்*
'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,
M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,
பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,
சங்ககிரி- 637301
இதுவரை உள்ள புத்தகங்களின் மொத்த தொகுப்புகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள DOWNLOAD - ஐ CLICK செய்து பார்த்துக் கொள்ளலாம்.
0 Comments