அன்பே தவம் ஆசிரியர் : குன்றக்குடி பொன்னம்பல அடிகள்



தினம் ஒரு புத்தகம்

நாள்:275

தேதி:06-05-2023

புத்தகம் எண்ணிக்கை:275   

புத்தகத்தின் பெயர் : அன்பே தவம்

ஆசிரியர் : குன்றக்குடி பொன்னம்பல அடிகள்

பதிப்பகம் : ஆனந்தவிகடன்பதிப்பகம் 

விலை : 240 

பக்கங்கள் : 320

 மேலும் கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

இணைந்து கொண்டு ஆசிரியர்கள் pdf ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.      


*அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு. 

 

*அன்பு இல்லாதவர், எல்லாவற்றையும் தனக்கு உரியது என்பர்; அன்பு உள்ளவர்களோ, எனது உயிரும் பிறருக்கே என்பர்  என்கிறார் வள்ளுவப் பெருந்தகை. 

 

*ஆன்மிக நெறிகளும் அன்பைத்தான் முதற்பொருளாகக் கூறுகின்றன. எல்லா மதங்களின் கோட்பாடுகளும் அன்பை அடிப்படையாகக்கொண்டு கட்டமைக்கப்பட்டவையே.

 

*இன்றைய அதி அவசர உலகில் சக மனிதரிடம், உயிர்களிடம் அன்புகாட்டுவது என்பது அரிதாகிப்போய்விட்டது. ஆனால், உலகெங்கினும் பிற உயிரிடம் இரங்கும் அன்புள்ளம்கொண்டவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் தனி மனிதராகவோ, ஆன்மிகவாதிகளாகவோ, மருத்துவர் களாகவோ, தொண்டு செய்பவர்களாகவோ இயங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

 

*அந்த வரிசையில் தமிழ்நாட்டில் குன்றக்குடி ஆதீனம் பல்லாண்டுகளாக கல்வி உள்ளிட்ட பல அறப்பணிகளைச் செய்து வருகிறது. 

 

*ஆன்மிக வழியில் அன்பை வலியுறுத்தும் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், ஆனந்த விகடனில் எழுதிய தொடர் கட்டுரைகள் தொகுக்கப்பட்டு நூலாக்கம் பெற்றுள்ளது. 

 

*‘அன்புநிலையே வாழ்வின் உயர்நிலை என்பதை வலியுறுத்தும் இந்த நூல், அனைவரும் படித்துப் பின்பற்ற வேண்டிய அறநூலாகும்!

 

*இன்பமும் துன்பமும் கலந்ததுதானே வாழ்க்கை. வாழ்க்கையின் எல்லா நலன்களையும் பொத்தான்களை  இயக்கிப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று எல்லோரும் விரும்புகிறார்கள். 

 

*வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியிலும் நிகழும் நிகழ்வை ஏற்றுக்கொண்டு எதிர்கொண்டு, வாழப் பழகிக்கொள்ள வேண்டும்.

 

*எல்லாவற்றிலும் இயைந்தும் இசைந்தும் வாழ்வதே வாழ்க்கை. நம் வாழ்வைத் தவற விட்டுவிட்டு வாழ்க்கையின் மீதே பழி போடுகிறோம். மகாபாரதத்தில் ஒரு காட்சி.

 

*இன்று நம் குடும்ப அமைப்பில் அன்பு தேவைப்படுகிறது. அன்பு குறைவதால் பல சிக்கல்கள் உருவாகின்றன. 

 

*அன்பு குறைவதே ஆதரவற்ற இல்லங்கள் அதிகரிக்க காரணமாகின்றன. பெரியவர்களை பாதுகாக்க தவறுகின்றனர். 

 

*குழந்தைகளை கவனிக்க தவறுகின்றனர். எனவே அனைவரிடமும் அன்பு பாராட்ட வேண்டும்

 

                        *குறிப்பு*

*இந்தப் புத்தகம் பள்ளிபாளையம் அரசு கிளை நூலகத்தில் இருக்கிறது*

 

*நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

 இதுவரை உள்ள புத்தகங்களின் மொத்த தொகுப்புகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள DOWNLOAD - ஐ CLICK செய்து பார்த்துக் கொள்ளலாம்.

Post a Comment

0 Comments