*தினம் ஒரு புத்தகம்*
நாள்:201
தேதி:21-02-2023
புத்தகம் எண்ணிக்கை:201
புத்தகத்தின் பெயர் :மாசில்லாக் காட்சி
ஆசிரியர்
:கோ.பங்கயம்
பக்கங்கள் :44
விலை :75
பதிப்பகம் :அகழ் பதிப்பகம்
*கத்தேரி அரசு உயர்நிலைப் பள்ளியின் தமிழ்
ஆசிரியர் திருமதி கோ. பங்கயம் அவர்கள் எழுதிய நூல்
*திருக்குறளில் உள்ள மெய்யுணர்தல் என்ற
அதிகாரத்தில் உள்ள 10 திருக்குறளுக்கு எழுதிய 10 கதைகளின் தொகுப்பே
மாசில்லாக்காட்சி என்ற இந்தப் புத்தகம் ஆகும்
*நூலாசிரியர் அவர்கள் இலக்கிய மன்ற
பேச்சுப்போட்டியின் போது இந்த நூலை எனக்கு அன்பளிப்பாக வழங்கினார்
*நூலாசிரியர் ஏற்கனவே திருக்குறள் மற்றும்
திருக்குறளின் பொருளை இசை வடிவில் பாடி வெளியிட்டுபலரின் பாராட்டுகளைப் பெற்றவர்
*பல்வேறு ஆய்வுக் கட்டுரை எழுதியுள்ளார் பல
விருதுகளை பெற்றுள்ளார் தமிழ் இலக்கியத்தில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார்
*இந்தப்புத்தகத்தின் சிறப்பு இதற்கு இவரே அட்டைப்படைத்தை வடிவமைத்துள்ளார்
*பத்து திருக்குறள் கதைகளில் என் மனதை மிகவும்
கவர்ந்தது மெய்யறிவு ஆகும்
*கதைகளின் தலைப்புகளே கவித்துவமாக உள்ளது
*கதையின் தலைப்பே நம்மை கதை படிக்கத்
தூண்டுகிறது
*மெய்ப்பொருள் அறிவோம் என்ற கதையின் மூலம் அன்பே
அகிலத்தில் சிறந்தது என உணர்த்திய விதம் அருமை
*அழியாத மெய்ப்பொருள் அன்பே என்று அறியாமல்
அழியும் பொருள் செல்வத்தை மெய்ப்பொருள் என்ற அறியாமையை உணர்ந்து கொண்டு வாழ
வேண்டும்
*உண்மை இன்பம் தரும் எனும் கதையின் மூலம்
மெய்யறிவு பெற்றவர்களுக்கு உண்மை தோன்றி இருள் விலகி இன்பப்பேறு வாய்க்கும் என
உணர்த்துகிறார்
*அறிவுத்தெளிவு கதையின் மூலம் மெய்
உணர்ந்தவர்கள் வானுலகம் அடைவார் என்பதை விளக்குகிறார்
*கதையின் எழுத்து நடை கவித்துவமாக மனதைக் கவரும்
வகையில் உள்ளது
*கவிதை நடையில் கதையினை படிப்பது போன்ற உள்ளது
இது இந்த புத்தகத்தின் தனி சிறப்பு ஆகும்
*அன்பே தெய்வம் என்ற கதையில் எந்த பொருளையும்
அது தோற்றத்தை ஆராயாமல் அதன் உண்மை தன்மையினை அறிந்து உணர வேண்டும் என
விளக்குகிறார்
*பெரியோர் சொல் கேள் என்ற கதையின் மூலம்
பெரியோர் சொல் கேட்டு நடப்பதன் நன்மைகளை தெள்ளத்தெளிவாக சுட்டிக்காட்டுகிறார்
*பத்து கதைகளிலும் பத்து மையக்கருத்துக்களை
அழகாக உணர்த்தியிருக்கிறார்
*நூலின் இறுதிப்பகுதியில் திருவள்ளுவர் போற்றி
எனும் தலைப்பில் 113 போற்றி என திருவள்ளுவரைப் போற்றுகிறார்
*"அகரமும் பகவனும் ஆதியாம் போற்றி
அஞ்சத்தக்கன அகற்றினாய் போற்றி அடக்கமே ஆளுமென அருளைப் போற்றி "
*இந்தப்புத்தகம் கண்டிப்பாக மாணவர்களும்
குழந்தைகளும் படிக்க வேண்டிய புத்தகம் அவர்களுக்கு நல்ல பழக்கத்தையும் நல்ல
அறிவையும் ஏற்படுத்தக்கூடிய கதைகளை கொண்ட புத்தகம் இது
*ஆசிரியர்களும் குழந்தைகளும் பெற்றோர்களும்
படிக்க வேண்டிய புத்தகம்
* திருக்குறளை பொருளாக படிக்காமல் கதையாக
படிப்பதன் மூலம் குரளில் உள்ள கருத்துக்கள் மனதில் எளிதில் பதியும் என்பதற்கு
இந்தப்புத்தகம் சிறந்த சான்று
* மேலும் பல நல்ல நூல்களைப் படைக்க ஆசிரியர்
அவர்களுக்கு வாழ்த்துக்கள்
*நன்றிகளுடன்*
'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,
M.A.,M.A.,M.A.,M.A.,M.A.,M.COM.,M.SC.,M.SC.,M.PHIL.,M.ED.,M.PHIL.,NET(T).,NET(EDN).,NET(PSY).,TET.,CTET.,CLIS.,
பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,
சங்ககிரி- 637301
0 Comments