*தினம் ஒரு புத்தகம்*
நாள்:191
தேதி:02-02-2023
புத்தகம் எண்ணிக்கை:191
புத்தகத்தின் பெயர் :ரெட்இங்க் ஆசிரியரின் பெயர்
:ச.க. முத்து கண்ணன்
பக்கங்கள் : 103
விலை : 95
பதிப்பகம் : பாரதி புத்தகாலயம்
*என்ன செய்வது
சிவப்பு மையால் தான்
திருத்த வேண்டி இருக்கிறது
என்றார் கவிஞர் புகழேந்தி. அவரின் வரிகள் ஆயிரம்
அர்த்தங்களை உடையது
*சிவப்பு மைக்குப்பின் உள்ள மனதை நெருடும்
அனுபவங்களில் சில அனுபவங்களை மட்டுமே கதையாகத் தந்துள்ளார்
*மொத்தம் பத்து சிறுகதைகள் உள்ளன படிக்கும்போது
இப்புத்தகத்தின் எழுத்து நடை நம்மை நிகழ்வு நடைபெறும் சூழலுக்கே கொண்டு செல்கிறது
எழுத்து நடை மிகவஅருமை மனதைக் கவர்கிறது
*எனக்கு மிகவும் பிடித்தத்தலைப்பு
"வாத்தியார் தினம்" என்னுடன் பயணித்த என்
நண்பர்கள் பலரை நினைவுக்கு கொண்டு வருகிறது.
* விருதுகள் பெரும்
தருணங்களை விட
பிஞ்சு கையால்
வாழ்த்து அட்டை பெறும்
தருணம் மட்டற்ற மகிழ்வானது ...!
அனுபவப்பட்டவர்களால் மட்டுமே உணர முடிகிறது
முடியும்
*இலக்கின்றி பயணித்து இறுதியில் ஆசிரியர்
பணியினை பெற்று இலக்கினை நிர்ணயித்துக் கொண்ட தருணங்களை இப்புத்தகம் நினைத்துப்
பார்க்க வைக்கிறது
*கீச் கீச் என்ற கதையில் புத்தகம் கொடுத்து
கோழிக்குஞ்சு பெற்ற மாணவர்களின் குழந்தை மனது புலனாகிறது பல்வேறு தருணங்களில்
நம்மையும் குழந்தையாக்கி விடுவார்கள்
*மாணவர்கள் பெற்றோர்களின் குடும்பப் பிரச்சனை
காரணமாக சில குழந்தைகளின் கல்வி திசை மாறி போவதை படிக்கும் போது நமக்கு கண்ணீர்
தான் வருகிறது
*ஒவ்வொரு குழந்தையின் இடைநிற்றல் பின்னாலும் பல
உணர்வுப்பூர்வமான கதைகள் மறந்துள்ளது
*நீலப்பந்து கதையில் உள்ள ராசாவை போல் பல
ராசாக்கள் வகுப்பறையில் நிறைந்துள்ளார்கள் இன்றைய ஆசிரியர்கள் தாயுள்ளத்தோடு
அவர்களை அரவணைத்துக் கொள்கின்றனர்
*பரு கதை விடலைப்பருவ மாணவர்களின் அறியாப் பருவநிலை
உணர்த்துகிறது இத்தகைய தருணங்களில் தான் மாணவர்களுக்கு உடற்கல்வியோடு உடலில் அறிவு
கல்வியும் தேவை
*ஜெயந்தி டீச்சர் கதை போல் பல தாய் உள்ளம் கொண்ட
ஆண் தலைமை ஆசிரியர்கள் இன்னும் இருக்கிறார்கள் இந்தக் கதையினை படிக்கும் போது நான்
படித்த போது பார்த்த பல நல்ல ஆசிரியர்கள் நினைவுக்கு வருகிறார்கள்
*ஒவ்வொரு கதையையும் படிக்கும் போது மனதிற்கும்
இனம்புரியாத வலி ஏற்படுகிறது இதுதான் இவரின் கதைக்கு கிடைத்த வெற்றியோ..?இது கதை
அல்ல நிஜம் என உணர்த்துகிறது
*ரெட் இங்க் நமது மனதிற்குள் நீங்கா இடம்
பிடித்த கிரீன் இங்க் கதைகள் ஆகும்
* கண்டிப்பாக மனிதத்தை நேசிப்பவர்கள் அனைவரும்
படிக்க வேண்டிய புத்தகம் இது
*நன்றிகளுடன்*
'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,
M.A.,M.A.,M.A.,M.A.,M.A.,M.COM.,M.SC.,M.SC.,M.PHIL.,M.ED.,M.PHIL.,NET(T).,NET(EDN).,NET(PSY).,TET.,CTET.,CLIS.,
பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,
சங்ககிரி- 637301
0 Comments