*தினம் ஒரு புத்தகம்*
நாள்:218
தேதி:10-03-2023
புத்தகம் எண்ணிக்கை:218
புத்தகத்தின் பெயர் :வள்ளுவ மையிரிவு
ஆசிரியர்
பெயர் :ராசித் கசாலி
விலை :80
பக்கங்கள் : 70
பதிப்பகம் :விஜயா பதிப்பகம்
*பெரு நிறுவனங்களில் ஆலோசகராகவும் வாழ்வியல்
வழிகாட்டியாகவும் பெரும் கல்வியாளராகவும் திகழும் ராசித் கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தை சேர்ந்த ஒரு
குக் கிராமத்தில் எளிய குடும்பம் ஒன்றில் பிறந்தவர்
*தமிழக அரசினால் நியமனம் செய்யப்பட்ட பாரதியார்
பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினர் ஆவார்
*தங்கள் சுய மகிழ்ச்சியை நாடுபவர்கள்
மற்றவர்களின் மகிழ்ச்சிக்காக வாழ வேண்டும் என்று ஸ்ரீ நாராயண குரு சொன்னது போல
பிறர் நலம் சார்ந்த வாழ்க்கை வாழ்வதன் மூலம் மனிதன் தன் வாழ்க்கையை நலமாக்கி
கொள்ளலாம் என்பதை திருக்குறள் அறிவுறுத்துகிறது
*சாதி மதம் போன்ற எந்த வேறுபாடும் இன்றி அனைத்து
மனிதர்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய பொதுமறையான திருக்குறட் கருத்துக்களை
அறிமுகப்படுத்துவதே இந்நூல் ஆகும்
*மொத்தம் 11 தலைப்புகள் உள்ளன எனக்கு பிடித்த
தலைப்பு தன்னடக்கம் ஆகும்
*அறம் கண்டு அகம் மகிழ்ந்து மறம் கண்டு மனம்
பதிப்பவர் யாரோ அவரே உண்மையான இறை நம்பிக்கையாளர்
*தங்களை விட தங்கள் பிள்ளைகள் அறிவாளிகளாகவும்
இருப்பது பெற்றோருக்கு இனிமை தரக்கூடியதாகவும்
*தர்மத்தின் உண்மையை அறிந்தவர்களின்
வாயிலிருந்து வெளிப்படும் வார்த்தைகள் இனிமையும் அன்பும் பொருந்தி
குற்றமில்லாதவர்களை திகழும் என்கிறார் திருவள்ளுவர்
*தனக்குள் பொங்கும் சீற்றத்தை கட்டுப்படுத்தும்
மன கற்றல் உடையவர் யாரோ அவரே வலிமையானவர்
*நம்மைச் சுற்றி உள்ள எளியவர்களுக்கு நாம்
வாழும் காலம் வரை நலம் புரிந்து நம் முழு வாழ்வையும் அர்த்தமுடையதாக செய்வதை
காட்டிலும் மேலானது வேறு என்ன இருக்க முடியும்
*11 கட்டுரைகளும் நம்மை கவரும் வகையில் எளிய
எழுத்து நடையில் எழுதப்பட்டுள்ளது இந்த நூலின் சிறப்பாகும்
*நன்றிகளுடன்*
'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,
M.A.,M.A.,M.A.,M.A.,M.A.,M.COM.,M.SC.,M.SC.,M.PHIL.,M.ED.,M.PHIL.,NET(T).,NET(EDN).,NET(PSY).,TET.,CTET.,CLIS.,
பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,
சங்ககிரி- 637301
0 Comments