தினம் ஒரு புத்தகம்
நாள்:257
தேதி:18-04-2023
புத்தகம் எண்ணிக்கை:257
புத்தகத்தின் பெயர் : சங்க இலக்கியம் மூலமும்
உரையும்
பாகங்கள் : 11
பக்கங்கள் : 5211
விலை : 4500
உரையாசிரியர் : முனைவர் கதிர்.மகாதேவன்
பதிப்பாசிரியர் : முனைவர் தமிழண்ணல் முனைவர்
சுப.அண்ணாமலை
பதிப்பகம் :வர்த்தமானான் பதிப்பகம்
*சங்க இலக்கியம் தற்போது கண்டுபிடிக்கப்பட்ட வரை
473 புலவர்களால் எழுதப்பட்ட 2381 பாடல்களைக் கொண்டுள்ளது. இப்புலவர்களுள் பல
தரப்பட்ட தொழில் நிலையுள்ளோரும் பெண்களும், நாடாளும் மன்னரும் உண்டு.
*ஒருவரின் காதல், இல்லறம் சார்ந்த தகவல்களைக்
கூறுவதே அகத்திணை ஆகும். புறம் என்பது, ஒருவர் செய்த கொடை, அவரின் வீர செயல்கள்
ஆகியவற்றைக் குறிக்கும்.
*தமிழர்களுக்கு என வரலாறு, இலக்கியம், பெருமை
உண்டு என உலக அரங்கில் தன்னை நிலை நிறுத்திக்கொண்டதற்கு ஆதாரமாக இருந்த நூல் சங்க
இலக்கியங்களாகும்.
*பண்டைத்தமிழரது காதல், போர், வீரம்,
ஆட்சியமைப்பு, வணிகம் போன்ற நடப்புகளை சங்க இலக்கியப் பாடல்கள் அறியத்தருகின்றன.
*தொழிலை தரத்தோடு செய்ய வேண்டும்,
ஏமாற்றக்கூடாது என்றும், உறவினர்களுக்கு உதவ வேண்டும் எனவும், வசதி உள்ளவர்கள்
பிறருக்கு தானம் செய்ய வேண்டும் எனவும் அறம் சார்ந்த வாழ்க்கை முறைகளை
வெளிப்படுத்தி நிற்கின்றதுநிற்கின்றது சங்க இலக்கியம்.
*பறவைகள், விலங்குகள், பூச்சிகள், நீரில் வாழும்
உயிரினங்கள், மரங்கள், செடிகள், கொடிகள், மலைகள், ஆறுகள் யாவற்றையும் சங்க இலக்கிய
பாடல்களில் காணலாம்.
*சங்ககால இலக்கிய மொழிகள் வாசிப்பதற்கு தனியாகப்
பயிற்சி எடுத்துக்கொள்ளத்தான் வேண்டும். அது மொழியின் பழைய சொற்களஞ்சியத்தை, பழைய
இலக்கணத்தை, பழைய சொற்கூட்டு முறையை அறிந்து கொள்வதாகவே இருக்க முடியும்.
*சங்ககாலத்தில் உள்ளூர் அளவில் பண்டமாற்றுமுறை
வணிகமே பெரும்பான்மையாக நடைபெற்று வந்தது என்பதனை சங்ககாலப் பாடல்கள் மூலம்
அறியலாம். தமிழர்கள் அயல்நாட்டினரோடு கொண்டிருந்த தொடர்பை பட்டினப்பாலை என்னும்
பத்துப்பாட்டு இலக்கிய பாடல்கள் மூலம் அறிந்து கொள்ளலாம்.
*சங்ககாலப் புலவர்களின் பாடல் திறமைகளையும்,
அவர்களது ஆற்றல்கள் பற்றியும் சங்க கால இலக்கியங்கள் மூலம் அறிந்து கொள்ள
முடிகின்றது.
*எட்டுத்தொகை நூல்கள்:
1. நற்றிணை
2. குறுந்தொகை
3. ஐங்குறுநூறு
4. பதிற்றுப்பத்து
5. பரிபாடல்
6. கலித்தொகை
7. அகநானூறு
8. புறநானூறு
*எட்டுத்தொகை நூல்களை எளிமையாக நினைவில்
வைத்துக்கொள்ள தனிப்பாடல்:
"நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம்புறம் என்று
இத்திறத்து எட்டுத்தொகை.".
*எட்டுத்தொகை அக நூல்கள்நூல்கள்
1)நற்றிணை
2)குறுந்தொகை
3)அகநானூறு
4)ஐங்குறுநூறு
5)கலித்தொகை
*எட்டுத்தொகை புற நூல்கள்
6)புறநானூறு
7)பதிற்றுப்பத்து
*அகமும் புறமும் உடைய நூல்கள்
8)பரிபாடல்
*குறுந்தொகை குறைந்த அடிகள் கொண்ட பாடல்களின் தொகுப்பாக
இருப்பதால் குறுந்தொகை எனப் பெயர் பெற்றது. “நல்ல குறுந்தொகை” எனச் சிறப்பித்து உரைக்கப்படுகின்றது. இந்நூலே
முதலில் தொகுக்கப்பட்ட தொகை நூலாகக் கருதப்படுகின்றது.
இத்தொகுப்பில் அமைந்துள்ள 401 பாடல்களை 206
புலவர்கள் பாடியுள்ளனர்.
*எட்டுத்தொகை நூல்களில் முதலாவது நூலாக
இடம்பெற்றுள்ள நூல் நற்றிணை ஆகும். நல் என்னும் அடைமொழியும், அகப்பொருள்
ஒழுக்கத்தைச் சுட்டும் திணை எனும் பெயரும் சேர்ந்து நற்றினை எனும் பெயரால் இந்நூல்
அழைக்கப்படுகின்றது.இந்நூலைத் தொகுத்தவர் பற்றி இதுவரை அறியப்படவில்லை. எனினும்
தொகுப்பித்தவர் பன்னாடு தங்த பாண்டியன் மாறன் வழுதி ஆவார்
*அகத்திணை சார்ந்த இந்நூலானது நானூறு பாடல்களை
கொண்டமைந்ததால் இது அகநானூறு என அழைக்கப்படுகின்றது.
பாண்டியன் உக்கிரப்பெருவழுதி என்ற மன்னனின்
வேண்டுகோளுக்கு இணங்க, உப்பூரிகுடிகிழார் மகனார் உருத்திரசன்மன் என்ற புலவர்
இந்நூலைத் தொகுத்துள்ளார். 145 புலவர் பெருமக்கள் இந்நானூறு பாடல்களையும்
பாடியுள்ளனர். இந்நூலுக்கு நெடுந்தொகை என்ற வேறு பெயரும் உண்டு.
* பதிற்றுப்பத்து, பத்துச் சேர அரசர்கள் பற்றிப்
புகழ்ந்து பாடுகிறது. பத்துப் புலவர்கள் பாடிய பத்துப் பத்துப் பாடல்களின்
தொகுதியாக விளங்குவதால் இந்நூல் பதிற்றுப்பத்து எனப் பெயர் பெற்றது.
*பரிபாடல் முருகப் பெருமானுக்கும்
திருமாலுக்கும் தொடர்புடைய புராணச் செய்திகளும், வையையில் நீராடுவாரின் பல்வேறு
செயற்பாடுகளும் சுவையுடன் இதில் கூறப்பட்டுள்ளன.
*கலித்தொகை கலிப்பாவினால் பாடப்பட்ட 150
பாடல்களைக் கொண்டுள்ளது. பிற அகத்திணை நூல்கள் எடுத்துரைக்காத கைக்கிளை,
பெருந்திணை, மடலேறுதல் ஆகியவை கலித்தொகையில் மட்டுமே இடம்பெறுகின்றமை இந்நூலுக்கே
உரிய சிறப்பம் ஆகும்.
*புறநானூறு நானூறு பாடல்களைக் கொண்ட புறத்திணை சார்ந்த ஒரு
சங்கத் தமிழ் நூலாகும். இந்நூலின் பாக்கள் 4 அடி முதல் 40 அடி வரையிலான
ஆசிரியப்பாவால் அமைந்து உள்ளன.
அக்காலத் தமிழ் மக்களின் அரசியல், சமூகம்,
பொருளாதாரம், கல்வி, நாகரிகம், கலை வளர்ச்சி, வீரம், கொடை, ஆடை, அணிகலன், பழக்க
வழக்கங்கள், வாணிபம் போன்ற பல செய்திகளை கூறுகின்றன.
*ஐங்குறுநூறு எட்டுத்தொகை என வழங்கும் தொகுப்பு
நூல்களுள் ஒன்று. ஆசிரியப்பாவாலானது. இதிலுள்ள பாடல்கள் சங்க காலத்தைச் சேர்ந்தவை.
இந்நூலில் அமைந்த 500 பாடல்களும் ஐந்து வெவ்வேறு புலவர்களால் இயற்றப்பட்டுள்ளன.
*குறிப்பு*
*இந்தப் புத்தகம் சங்ககிரி அரசு கிளை நூலகத்தில்
இருக்கிறது*
*நன்றிகளுடன்*
'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,
M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL.,
NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,
பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,
சங்ககிரி- 637301
0 Comments