*தினம் ஒரு புத்தகம்*
நாள்:241
தேதி:02-04-2023
புத்தகம் எண்ணிக்கை:241
புத்தகத்தின் பெயர் :தமிழாற்றுப்படை ஆசிரியர் :
வைரமுத்து
பக்கங்கள் : 360
விலை : 500
பதிப்பகம் : திருமகள் நிலையம்
*நூலின் முதல் பக்கத்தில்
எனக்கு
நண்பராய்
மந்திரியாய்
நல்லாசிரியருமாய்
விளங்கிய
கலைஞர் அவர்களே
நீங்கள் இல்லாமல்
வெளிவரும் இந்நூலில்
நீங்களும்
இருக்கின்றீர்கள்
எஎன்ற அறிமுகமே கலைஞருக்கும் வைரமுத்துவுக்கும்
இடையேயான உறவு நேசம் நட்பு தெரிகிறது
*மொகஞ்சதாரோ மற்றும் ஹரப்பா நிலவெளிகளை ஜான்
மார்ஷல் ஆழப் பிளந்து அகழ்வாய்வு செய்த பிறகுதான் உண்மையின் நாகரீகம்
பூமியிலிருந்து புறப்பட்டு வந்தது
* திராவிட மொழிகளில் பழமையானது தமிழே அதுவே
முதல் மொழியாக இருக்கலாம் என்று நான் நம்புகிறேன் இது பேராசிரியர் கில் கொண்ட
நம்பிக்கை
*தமிழ் மொழி என்பது பண்பட்டது இயல்பாக வளர்ந்த
இலக்கிய வளம் கொண்டது என்பது மாக்ஸ்முல்லர் கூற்று
* திராவிட மொழிகளில் பழமையானது தமிழ்,தமிழ்பதிவே
முதல் மொழியாக இருக்கலாம் என்று நம்புகிறேன்
*மொழி ஓர் உயிர் ஒலியே அதன் உயிர் எழுத்து அதன்
உடல் அது தன்னை பேசும் மனிதர்களை இயக்குகிறது அவர்களின் இயக்கமும் வருகிறது
*இறந்த காலத்தை சுமந்து கொண்டு நிகழ்காலத்தில்
இயங்கிக்கொண்டு எதிர்காலத்தில் பெருவெளியில் பயணிக்கிறது
*தயிரும் வெண்ணையும் பாலுக்குள் நிறைந்திருப்பது
போல யாப்பும் அணியும் தொல்காப்பியத்துக்குள் துணிந்து உரைகின்றன
*இந்நூலில் 24 தமிழ் அறிஞர்கள் பற்றிய தகவல்களை
தந்துள்ளார்
*மூன்று அதிகாரங்கள் அதிகாரத்திற்கு 27 இயல்கள்
இளம்பூரணர் கருத்துப்படி 1595 நூற்பாக்கள் தொல்காப்பியத்தில் உள்ளன
*நச்சினார்க்கினியார் கணக்குப்படி 1611 பாக்கள்
உடையது தொல்காப்பியம்
*மனிதராகிய உயர்தனிக்கும் மனிதர் அல்லாதவைக்கும்
இயற்கை இட்டுக் கொடுத்த ஒப்பந்தத்தில் மூலப்படியே முற்றிலும் உணர்ந்து கொண்ட முதற்றமிழ்
கவி கபிலர்
*ஆற்றுப்படை என்பதற்கு கவிஞர் வைரமுத்து அவர்கள்
தரும் விளக்கம்: ஆற்றுப்படுத்துதல் என்றால் அதனை நோக்கிச் செலுத்துதல் என்கிறார் .
*தமிழின் மூவாயிர ஆண்டுகால பெருமைகளைக் கூறி
தமிழை நோக்கி கேட்பவர்களை, வாசிப்பவர்களை ஆற்றுப்படுத்தும் என்கிற நம்பிக்கையால்
இக்கட்டுரைத் தொகுப்புக்கு தமிழாற்றுப்படை என பெயர் வைத்திருக்கிறார்.
*நம்முடைய மொழியும் அதன் பண்பாடும் பல
எதிர்ப்புகளை ஆதிக்கங்களை முறியடித்து 3000 ஆண்டுகளுக்கு மேலாக சிறப்பாக
இன்றைக்கும் திகழ்ந்து கொண்டிருக்கின்றது. அந்த சிறப்புக்கு காரணமான தமிழ்ச்
சான்றோர்களை இந்த தமிழாற்றுப்படையில் வரிசைப்படுத்தி காட்டியிருக்கின்றார்
வைரமுத்து
*தொல்காப்பியரில் இருந்து அவர் துவங்கி
இருக்கின்றார்.
*மன்னனின் அவையில் தனி ஒரு பெண்ணாக நீதி கேட்ட
கண்ணகி மூலம், முடியாட்சி காலத்திலும் ஜனநாயகம் நிலவியதை இளங்கோவடிகளின்
சிலப்பதிகாரம் எடுத்துக் காட்டுகின்றது.
*சங்க இலக்கிய தென்றலின் மணம் வீசிய 100
பூக்களைப் பாடிய கபிலரின் தமிழ் திறத்தை கவிப்பேரரசு எடுத்துக்
காட்டியிருக்கின்றார்.
*ஆத்திகம் - நாத்திகம் என்று பேதமின்றி தமிழ்
மொழிக்கு தொண்டாற்றிய சான்றோர்களின் பணிகளை விருப்பு வெறுப்பின்றி வைரமுத்து
அவர்கள் இந்த நூலில் தெளிவாக எடுத்துச் சொல்லி இருக்கின்றார்.
*கம்பர், அப்பர், திருமூலர், ஆண்டாள், வள்ளலார்,
உ.வே.சா, பாரதியார், மறைமலை அடிகளார், இறைப்பற்று இலக்கியம் செழிக்க செயல்படும்
பெரும்பணியை பதிவு செய்திருக்கின்றார்.
*ஔவையார் என்பவர் ஒருவரா, ஒவ்வொரு காலத்திலும்
வெவ்வேறு ஆட்கள் இருந்தார்களா, என்ற ஆய்வு நோக்கோடு தமிழ் இலக்கியத்தில் பெண்களின்
பங்களிப்பை மிகச் சிறப்பாக இந்த தமிழாற்றுப்படையில் அவர் எடுத்துக்
காட்டியிருக்கின்றார்.
* படிக்க வேண்டிய நல்ல நூல் ஆகும்
*நன்றிகளுடன்*
'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,
M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC.,
M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,
பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,
சங்ககிரி- 637301
0 Comments