தினம் ஒரு புத்தகம்
நாள்:255
தேதி:16-04-2023
புத்தகம் எண்ணிக்கை:255
நூலின் பெயர் : தமிழியல்
ஆசிரியர் : நன்னன்
விலை : 150
பக்கங்கள் : 416
பதிப்பகம் : முத்தமிழ் பதிப்பகம்
கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான
*தமிழ் மொழி 'இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்
தமிழ்,' என மூன்று பிரிவுகளை உடையது. இவையே 'முத்தமிழ்' என அழைக்கப்படக் காரணமாக
விளங்குகிறது.
*முன்னோர் முத்தமிழின் பிரிவுகள்
ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே இலக்கணம் அமைத்தனர்.
*அகத்தியம் முத்தமிழுக்கும் உரிய இலக்கண நூல்
என்பர். இருப்பினும், பொதுவாகத் தமிழ் இலக்கணம் என்பது இயற்றமிழ் இலக்கணத்தைக்
குறிப்பதாயிற்று.
*செய்யுள், உரைநடை ஆகியவற்றின் தொகுதி
இயற்றமிழாகும்.
*தொல்காப்பியம் இயற்றமிழில் கிடைத்துள்ள மிகப்பழைய
இலக்கண நூலாகும்.
*மா.நன்னன் மக்கள் தொலைக்காட்சியில் அறிவோம்
அன்னைமொழி என்ற தலைப்பில் தமிழைப் பிழையின்றி எழுதவும், வாக்கியங்களை அமைக்கவும்
நாள்தோறும் தகவலை வழங்கிவந்தார்.
*நிகழ்ச்சியின் வாசகர்களை தமிழ்ப் பண்ணையார்கள்
என்று அழைத்தார்.
*நன்னனின் “பெரியாரைக் கேளுங்கள்” எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 2009 ஆம்
ஆண்டுக்கான சிறந்த நூல்களில் சமூகவியல் வகைப்பாட்டில் பரிசு பெற்றது.
*நன்னன் அவர்கள்
பெரியார் விருது, தமிழ்ச் செம்மல் விருது, திரு. வி. க. விருது போன்ற
விருதுகளையும் பெற்றவர்.
*இந்நூல் உள்ளுறை ,முகவுரை ,எழுத்து, சொல் தொடர்
என ஐந்து பகுதிகளை உடையது
*தொல்காப்பியர் போன்றோரின் தமிழ் மரபை பின்பற்றி
பேணுவதோடு ஆரியம் ஆங்கிலம் போன்றவற்றால் ஏற்பட்ட கொள்கை நோய்களிலிருந்து தமிழைக்
காப்பதை நோக்கமாகக் கொண்டது எம் முயற்சி என்கிறார் நூலாசிரியர்
* தமிழ் மொழியை பயன்படுத்துவோர் அதன் இயல்பை
அறிந்து அதற்கு ஏற்ப அதனை ஆள வேண்டுமே அன்றி பிற மொழிகளின் இயல்புகளுக்கு ஏற்ப
இம்மொழியை ஆளக்கூடாது
*இலக்கணம் என்பதன் பொருளை விட இயல் என்பதன்
பொருளே மிகப் பொருத்தமாக உள்ளது
*உள்ளிலிருந்து எழும் அல்லது எழுப்பப்படும்
ஒளியே எழுத்து எனப்படும்
*தாமே செய்வதை செய்வினை அன்றும் பிறரை
செய்விப்பதை செய்யப்பட்டு வினை என்றும் கூறலாம்
*பயனிலை இல்லா எழுத்து பயனற்ற எழுத்தே எனலாம்
* தமிழ் அறிவு நாகரீகத்தை நிறுவது திணைப் பகுதியாகும்
*ஒன்பது என்பதன் குற்றியலுகரம் தன் வடிவு
திரிந்து கெடாமல் சாரியை பெரும்
*புணர்ச்சி என்பதற்கு இணைதல் சேர்தல் கூடுதல்
என்பது பொருள்
* தமிழ் மொழியை பிழையின்றி எழுதுவதைப் பற்றி
இந்நூல் கூறுகிறது
*தமிழ் மொழியைப் பிழையில்லாமல் எழுத பேச
இந்தநூல் கண்டிப்பாகத் தேவை
*குறிப்பு*
*இந்தப் புத்தகம் சங்ககிரி அரசு கிளை நூலகத்தில்
இருக்கிறது*
*நன்றிகளுடன்*
'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,
M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL.,
NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,
பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,
சங்ககிரி- 637301
இதுவரை உள்ள புத்தகங்களின் மொத்த தொகுப்புகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள DOWNLOAD - ஐ CLICK செய்து பார்த்துக் கொள்ளலாம்.
0 Comments