தினம் ஒரு புத்தகம்
நாள்:254
தேதி:15-04-2023
புத்தகம் எண்ணிக்கை:254
புத்தகத்தின் பெயர் :பதினெண்கீழ்க்கணக்கு
நூல்கள்
தொகுதிகள் : 3
பக்கங்கள் :1224
விலை : 1100
பதிப்பகம் : வர்த்தமான்ன் பதிப்பகம்
KANI MATHS Educational Group -ல் இணைந்து கொள்ளலாம்.
*தமிழகத்தில் சங்கம் மருவிய காலத்தில்
இயற்றப்பட்ட 18 நூல்களைச் சேர்த்து பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என
வழங்கப்படுகின்றன. இவை ஒவ்வொன்றும் தனித்தனியான வெவ்வேறு புலவர்களால் பாடப்பட்டவை
*தமிழின் பெருமைகளையும் தமிழர்களின்
சிறப்புகளையும் அறநெறி கருத்துக்களையும் எடுத்துக் கூறுவதில் 11 கீழ்க்கணக்கு
நூல்கள் புகழ்பெற்றவை
*நீதி நூல்கள்களின் தொகுப்புகள்
1)நாலடியார்
2)நான்மணிக்கடிகை
3)இன்னா நாற்பது
4)இனியவை நாற்பது
5)திருக்குறள்
6)திரிகடுகம்
7)ஏலாதி
8)பழமொழி நானூறு
9)ஆசாரக்கோவை
10)சிறுபஞ்சமூலம்
11)முதுமொழிக்காஞ்சி
*அகத்திணை நூல்கள் தொகுப்புகள்
12)ஐந்திணை ஐம்பது
13)திணைமொழி ஐம்பது
14)ஐந்திணை எழுபது
15)திணைமாலை நூற்றைம்பது
16)கார் நாற்பது
17)கைந்நிலை
*புறத்திணை நூல் தொகுப்புகள்
18)களவழி நாற்பது
*நான்மணிக்கடிகை என்பது நான்கு இரத்தினத்
துண்டங்கள் என்னும் பொருளைத் தரும். ஒவ்வொரு பாடலிலும் நான்கு சிறந்த
கருத்துக்களைக் கூறுவதால் நான்மணிக்கடிகை எனப் பெயர் பெற்றது. இதனை இயற்றியவர்
விளம்பி நாகனார்.
*பூதஞ்சேந்தனார் இயற்றியது இனியவை நாற்பது. 40
வெண்பாக்களைக் கொண்டது. நான்கு பாடல்களில் இன்பம் தருவன நான்கினைக் கூறியுள்ளார்.
மற்ற பாடல்களில் மூன்று மூன்று இன்பங்களை கூறியுள்ளார்.
*இன்னா நாற்பது
என்பது
ஒவ்வொரு பாடலிலும் நான்கு கருத்துக்களைக்
கொண்டு, ஒவ்வொன்றையும் 'இன்னா' என எடுத்துக் கூறுதலின் 'இன்னா நாற்பது' எனப்
பெயர்பெற்றது. இந்நூலை இயற்றியவர் கபிலர்.
*திரிகடுகம் என்பது சுக்கு, மிளகு திப்பிலி
என்னும் மூன்று மருந்துப் பொருளை குறிக்கும். மூன்று மருந்துப் பண்டங்களால் ஆகிய
திரிகடுகம் என்னும் மருந்து உடல் நலம் பேணுவதைப் போன்று, இந்நூற் செய்யுட்களில்
மும்மூன்றாக உரைக்கப் பெற்ற அறங்களும் உயிர் நலம் பேணுவனவாம். இதனாலேயே இந்நூல்
திரிகடுகம் எனப் பெயர் பெற்றது. இதன் ஆசிரியர் நல்லாதனார்.
*ஆசாரக்கோவை என்பதற்கு 'ஆசாரங்களினது கோவை'
என்றோ, 'ஆசாரங்களைத் தொகுத்த கோவை என்றோ பொருள் கூறலாம். இதன் ஆசிரியர் கயத்தூர்ப்
பெருவாயின் முள்ளியார்.
*சிறுபஞ்சமூலம் என்பது ஐந்து சிறிய வேர்கள்
என்று பொருள்படும். அவையாவன சிறுவழுதுணை வேர், நெருஞ்சி வேர், சிறுமல்லி வேர்,
பெருமல்லி வேர், கண்டங்கத்தரி வேர் என்பனவாம். சிறுபஞ்சமூலம் ஆகிய மருந்து உடல்
நலம் பேணுமாறு போல, சிறுபஞ்சமூலப் பாடல்களில் குறித்த ஐந்தைந்து பொருள்களும் உயிர்
நலம் பேணுவன. அதனால் இந்நூல் சிறுபஞ்சமூலம் என பெயர் பெற்றது. இந் நூலை இயற்றியவர்
காரியாசான் என்பவர்.
*முதுமொழிக்காஞ்சி என்ற நூல் கூடலூர் கிழார்
என்பவரால் பாடப்பெற்றது. பத்து அதிகாரங்களையும் ஒவ்வொரு அதிகாரத்திலும் பத்து
பத்து குறட்டழிசைகளையும் கொண்டது.அறம், பொருள், இன்பம் பற்றிக் கூறுவது.
*பழமொழி நானூறு என்பது நூலிலுள்ள பாடல்களுள்
ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு பழமொழியை அமைத்து, அதற்கு விளக்கம் கூறும் வகையில் ஆசிரியர்
பாடியிருத்தலின், பழமொழி என்னும் சிறப்புப்பெயர் பெற்றது. மேலும் இந்நூல் நானூறு
பாடல்களைக் கொண்டுள்ளது. இதனால் பழமொழி நானூறு" என்றும் இது குறிக்கப்
பெறும். இதன் ஆசிரியர் மூன்றுறை அரையனார்.
*ஏலம் ஆதியான ஆறு பொருள்கள் சேர்ந்த ஒரு வகைச்
சூர்ணம் 'ஏலாதி' என மருத்துவ நூல்களில் கூறப்பெறும். ஏலம் ஒரு பங்கு,
இலவங்கப்பட்டை இரண்டு பங்கு, நாககேசரம் மூன்று பங்கு, மிளகு நாலு பங்கு, திப்பிலி
ஐந்து பங்கு, சுக்கு ஆறு பங்கு என்ற அளவுப்படி சேர்த்து இம் மருந்தை ஆக்குவர்.
ஏலாதி நூலும் ஒவ்வொரு பாடலிலும் ஆறு பொருள்களைப் பெற்று, உயிருக்கு உறு துணையாக அற
நெறியை விளக்கி உரைக்கும் ஒப்புமை நீர் மையால் இப் பெயரைப் பெற்றுள்ளது. இந்
நூலின் ஆசிரியர் கணிமேதாவியார்.
*திருக்குறள் உலகப்புகழ் பெற்ற தமிழ்
இலக்கியமாகும். இதனை இயற்றியவர் திருவள்ளுவர். உலக இலக்கிய அரங்கில் தமிழனின்
பெருமையை நிலைநாட்டும் உயர்வுடையது இந் நூல்.
*கார் நாற்பது என்பது நாற்பது செய்யுட்களை
உடைமையாலும், கார் காலத்தின் தோற்றம் ஒவ்வொரு செய்யுளிலும் கூறப்படுகின்றமையாலும்
இது கார் நாற்பது என்னும் பெயர் பெற்றது.இதனை இயற்றியவர் மதுரைக் கண்ணங்கூத்தனார்.
*ஐந்திணை ஐம்பது என்ற இந்நூல் முல்லை, குறிஞ்சி,
மருதம், பாலை, நெய்தல் என்ற ஐந்திணைக்கும் பத்துப் பாடல்களைப் பெற்றுள்ளமையால்
'ஐந்திணை ஐம்பது' எனப் பெயர் பெற்றது.
*ஐந்திணைகளில் ஒவ்வொன்றிற்கும் பதினான்கு பாடல்களைக்
கொண்டு, எழுபது பாடல்களில் இந் நூல் அமைந்துள்ளதால், ஐந்திணை எழுபது என பெயர்
பெற்றது.இந் நூலை அருளியவர் மூவாதியார்.
*ஐந்திணை ஒழுக்கங்களைக் கோவையாக அமைத்து மாலை
போலத் தந்துள்ளமையால் 'திணைமாலை' என்றும், பாடல் அளவினால் 'திணைமாலை நூற்றைம்பது'
என்றும், இந்நூல் பெயர் பெற்றுள்ளது. இந் நூலின் ஆசிரியர் ஏலாதியை இயற்றிய
கணிமேதாவியார்.
*'கை' என்பது ஒழுக்கம் என்றும் பொருள்படும்.
ஐந்திணை ஒழுக்கம் பற்றிக் குறிப்பிடுவதால் கைந்நிலை எனப்பட்டது. இந் நூலைச்
இயற்றியவர் மாறோக்கத்து முள்ளிநாட்டு நல்லூர்க் காவிதியார் மகனார் புல்லங்காடனார்.
*களவழி நாற்பது போர்க்களம் பற்றிய பாடல்களின்
தொகுதியாகும்.களவழி நாற்பது பாடியவர் பொய்கையார் என்பவராவர்.
*இன்னிலை என்பது நான்கு பகுதிகளைக் கொண்டது. இந்
நூலைச் செய்தவர் பொய்கையார்.
*நன்றிகளுடன்*
'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,
M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL.,
NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,
பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,
சங்ககிரி- 637301
0 Comments