*தினம் ஒரு புத்தகம்*
நாள்:210
தேதி:02-03-2023
புத்தகம் எண்ணிக்கை:210
புத்தகத்தின் பெயர்: ம.ப.பெரியசாமி தூரன்
ஆசிரியர் பெயர் :சிற்பி பாலசுப்ரமணியம்
விலை : 50
பக்கங்கள் : 124
பதிப்பகம் :சாகித்ய அகாடமி
* தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு தனிப்பெரும்
சாதனை என்று மதிப்பிடப்படுகின்ற கலைக்களஞ்சியம் குழந்தைகள் கலைக்களஞ்சியம்
இரண்டிற்கும் முதன்மை ஆசிரியராக இருந்தவர்
*செந்தமிழ் செல்வர் என போற்றப்படுபவர்
*ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில் உள்ள மஞ்சள்
காட்டு வலசு எனும் கிராமத்தில் 1908 ஆம் ஆண்டு செப்டம்பர் 26 ஆம் நாள் பிறந்தார்
*நண்பர்களுடன் சேர்ந்து வனமலர் சங்கம் என்ற
அமைப்பு ஏற்படுத்தினார். அந்த அமைப்பின் மூலம் பித்தன் என்ற இதழை நடத்தினார்
*இளம் தமிழா ,மின்னல் பூ, நிலா பிஞ்சு
,பட்டினப்பறவைகள் முதலிய கவிதை நூல்களை படைத்தார்
*பத்மபூஷன் ,கலை மாமணி ,இசை பேரறிஞர்
,பெருந்தமிழ் செல்வர் ,செந்தமிழ் செல்வர் போன்ற விருதுகளும் பட்டங்களும் தூரனுக்கு
பெருமை சேர்த்தன
*1940களில் காலச்சக்கரம் என்ற வார பத்திரிகையின்
ஆசிரியராக பணியாற்றினார்
*1968 ஆம் ஆண்டு பத்மபூஷன் விருது பெற்றார்
*1987 ஆம் ஆண்டு ஜனவரி 20ஆம் நாள் மறைந்தார்
*தமிழக அரசு இவருடைய நூல்களை எல்லாம்
நாட்டுடைமையாக்கி உள்ளது
*2008 வட அமெரிக்க தமிழ் சங்க பேரவை தனது ஆண்டு
விழாவை பெரியசாமித்தூரன் நூற்றாண்டு விழாவாக கொண்டாடியது
*கர்நாடக இசை வல்லுனராகவும் வழங்கினார்
*முருகா முருகா என்றால் உருகாதா உந்தன் உள்ளம்
என்ற சிறந்த முருக பக்தி பாடல்களில் முதன்மையானதாகவும் உள்ள பாடலை இயற்றியுள்ளார்
*மரபுக் கவிஞராகவும் தூரன் நாமக்கல் கவிஞர் மரபு
எனும் பாரதிக்குப் பிந்தைய கவி மரபைச் சார்ந்தவர்
*நன்றிகளுடன்*
'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,
M.A.,M.A.,M.A.,M.A.,M.A.,M.COM.,M.SC.,M.SC.,M.PHIL.,M.ED.,M.PHIL.,NET(T).,NET(EDN).,NET(PSY).,TET.,CTET.,CLIS.,
பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,
சங்ககிரி- 637301
0 Comments