*தினம் ஒரு புத்தகம்*
நாள்:227
தேதி:19-03-2023
புத்தகம் எண்ணிக்கை:227
புத்தகத்தின் பெயர் : பன்மொழி புலவர்
கா.அப்பாதுரை
ஆசிரியர் பெயர் : கு.வெ.பாலசுப்பிரமணியன்
பதிப்பகம் : சாகித்திய அகாதெமி
விலை : 40
பக்கங்கள் : 122
*குறிப்பு :
இந்தப் புத்தகம் சங்ககிரி அரசு கிளை நூலகத்தில்
இருக்கிறது*
*அப்பாதுரை பன்மொழிப் புலவர் என அழைக்கப்பட்டார்
*40 மொழிகளை திறம்பட கற்றறிந்தமையால்
பன்மொழிப்புலவர் என்று அழைக்கப்பட்டார்
*இலக்கியம் ,வரலாறு ,வாழ்வியல் ,
மொழிபெயர்ப்பு, மொழியியல் ,நிலவியல் அகராதி என
பல துறைகளில் ஏறத்தாழ 40 நூல்களைப் படைத்த பெருமை இவருக்கு உண்டு
*தென்மொழி உலக இலக்கியங்கள் தென்னாட்டுப்
போர்க்களங்கள் ,குமரிக்கண்டம் ,கடல் கொண்ட தென்னாடு ,திருக்குறள் மடி விளக்க உரை
போன்ற நூல்கள் இவரின் புகழ்பெற்ற படைப்புகள் ஆகும்
*தமிழ்மொழி ,தமிழினம் என்பவற்றின் வேரையும்
விழுதையும் ஆராய்ந்து அவற்றுக்கு உலகத் தொடர்பு உண்டு என்று காட்டிய பெருமை
பன்மொழிப் புலவர் அப்பாதுரை உண்டு
*அறிவுச்சுரங்கம் ,அறிவுக்கடல் , பன்மொழிப்
புலவர் என்ற பல சிறப்பு பெயர்களில் அழைக்கப்பட்டார்
*கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி என்ற
சிற்றூரில்
24 -6 -197 அன்று காசிநாத பிள்ளைக்கும் முத்து
இலட்சுமி அம்மாளுக்கும் மகனாகப் பிறந்தவர்
* அப்பாதுரை எழுதிய நூல்களில் தென்னாட்டு
போர்க்களங்கள் எனும் நூல் என்னை மிகவும் கவர்ந்த ஒன்றாகும் என்று அறிஞர் அண்ணா
கூறுவார்
*அப்பாதுரை வரலாற்றை கிளிப்பிள்ளை போல சொன்னவர்
அல்ல சான்றாதாரங்களின் அடிப்படையில் தன் கருத்துக்களை விளக்குவாரே அன்றோ பிறர்
கருத்தை எடுத்துரைத்து மறுப்பதில்லை
*நேதாஜி வரலாற்றை எழுதும்போது அவரை இந்தியாவின்
நெப்போலியன் ஆக குறிப்பிடுகிறார்
*நாடு நமக்கு தந்தையின் தோள்
மொழி நமக்கு தாயின் மடி
*உலக வழக்கும் செய்யுள் வழக்கும் இலக்கணத்துக்கு
இலக்கியமாகக் குறிக்கப்பட்டது தமிழ் மொழி மட்டுமே
*நன்றிகளுடன்*
'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,
M.A.,M.A.,M.A.,M.A.,M.A.,M.COM.,M.SC.,M.SC.,M.PHIL.,M.ED.,M.PHIL.,NET(T).,NET(EDN).,NET(PSY).,TET.,CTET.,CLIS.,
பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,
சங்ககிரி- 637301
0 Comments