*தினம் ஒரு புத்தகம்*
நாள்:236
தேதி:28-03-2023
புத்தகம் எண்ணிக்கை:236
புத்தகத்தின் பெயர் : தமிழ் வளர்த்த
வீரமாமுனிவர்
பதிப்பாசிரியர் :முனைவர் சி. மணிவளன் பக்கங்கள்
: 314
விலை :300
பதிப்பகம் : கிறிஸ்தவ ஆய்வு மையம் திருச்சி
கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான
*வீரமாமுனிவர் அவர்களின் படைப்புகள் ,பணிகள்,
சிறப்புகள் ,எழுத்துத் திறன் என்று பல்வேறு திறன்கள் குறித்த 73
ஆய்வுக்கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூலாகும்
*இந்த நூலைப் படிக்க படிக்க வீரமாமுனிவர்
குறித்த பல்வேறு அரிய தகவல்கள் கிடைக்கிறது
*தமிழ்வளர்த்த வீரமாமுனிவர் குறித்து 73
ஆய்வாளர்களின் ஆய்வுக் கட்டுரைகளில் இருந்து அரிய தகவல்களை ஒரே தொகுப்பில் படிக்க
முடிகிறது
*வீரமாமுனிவரின் குறித்த தகவல்களை உள்ளடக்கிய
வரலாற்றுப் பெட்டகமாக இந்த நூல் உள்ளது
*தமிழில் பல வகை இலக்கியங்கள் உண்டு அவற்றுள்
ஒருவகை இலக்கியத்திற்கு மாலை என்பது பெயராகும் தமிழில் உள்ள நூற்றுக்கணக்கான
சிற்றிலக்கிய வகைகளில் மாலை என்பது ஒரு வகை சிற்றிலக்கியம் ஆகும் அந்த வகையில்
அடைக்கல மாலை வீரமாமுனிவர் எழுதியுள்ளார்
*தமிழின் பெருமையாம் உலகப் பொதுமறை எனும்
பொய்யாமொழி பொக்கிஷமான திருக்குறளின் சிறப்புகளை தம் சொந்த நாட்டு மக்களுக்கு
காட்டும் நோக்கில் திருக்குறளை இலத்தின் மொழியில்ல மொழிபெயர்த்துள்ளார்
* திருக்குறளுக்கு உரையினை பண்பாட்டுச் சூழலிலும்
மொழிபெயர்ப்பு செய்து புகழ்ப்படைத்தார்
*வீரமாமுனிவர் தமிழில் கடினச் சொற்களுக்கு
பொருள் காண நிகண்டுகளையே நம்பிக் கொண்டிருந்த நிலையை மாற்றினார்
*1732 ஆம் ஆண்டு இவர் தொகுத்த சதுரகராதி முதல்
தமிழ் அகர முதலி எனும் பெருமை பெற்றது
*தமிழ் எழுத்துக்களையும் சீர்திருத்தம்
செய்துள்ளார்
*தேம்பாவணியில் 95 இடங்களில் குதிரை பற்றிய
குறிப்பு உள்ளது
*தேம்பாவணியில் 11 இடங்களில் குரங்குகள் பற்றிய
செய்தி உள்ளது
*தேம்பாவணியில் 3 இடங்களில் கரடி பற்றிய
குறிப்பு உள்ளது
*தேம்பாவணையில் 8 இடங்களில் எருமை பற்றிய
குறிப்புகள் உள்ளது
*தேம்பாவணியில் 2 இடங்களில் அன்பில் பறவை பற்றிய
குறிப்பு உள்ளது
*தேம்பாவணியில் அன்னப்பறவை பற்றி 44 இடங்களில்
குறிப்புகள் உள்ளது
*இது போன்ற தகவல்கள் நம்மை வியக்க வைக்கிறது
*இலக்கிய சுவடிகளை பல இடங்களில் தேடிச் சென்று
எடுத்ததால் சுவடி தேடும் சாமியார் எனவும் அழைக்கப்பட்டார்
*வீரமாமுனிவர் தமிழில் முதன் முதலில் வந்த
நகைச்சுவை இலக்கியம் வீரமாமுனிவரின் பரமாத்த குரு கதையாகும் வெளியான ஆண்டு 1728
*தமிழில் முதல் சிறுகதையை அறிமுகப்படுத்தியவர்
வீரமாமுனிவர்
*ஒன்பதாயிரம் தமிழ்ச் சொற்களுக்கு லத்தீன்
மொழியில் பொருள் கூறியுள்ளார்
* வீரமாமுனிவர் எழுதிய புத்தகங்கள் 36
வீரமாமுனிவருக்கு 13 மொழிகள் தெரியும்
* வீரமாமுனிவரை எனக்கு மிகவும் பிடிக்க காரணம்
தனது கல்லறையின் மீது இங்கு ஒரு தமிழ் மாணவன் உறங்கிக் கொண்டிருக்கிறான் என
எழுதியது ஆகும்
*குறிப்பு*
*இந்தப் புத்தகம் சங்ககிரி அரசு கிளை நூலகத்தில்
இருக்கிறது*
*நன்றிகளுடன்*
'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,
M.A.,M.A.,M.A.,M.A.,M.A.,M.COM.,M.SC.,M.SC.,M.PHIL.,M.ED.,M.PHIL.,NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,
பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,
சங்ககிரி- 637301
0 Comments