*தினம் ஒரு புத்தகம்* - வீரத்திருமகள் வேலுநாச்சியார்

 


*தினம் ஒரு புத்தகம்*

நாள்:224

தேதி:16-03-2023

புத்தகம் எண்ணிக்கை:224

புத்தகத்தலைப்பு:வீரத்திருமகள் வேலுநாச்சியார்

ஆசிரியர்: கலைவாணன்

விலை:90

பக்கங்கள்:288.                  

 கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          
 KANI MATHS Educational Group -ல்  இணைந்து கொள்ளலாம்.

 *வீரமங்கை இராணி வேலுநாச்சியார் இந்தியாவின் முதல் பெண் விடுதலைப் போராட்ட வீராங்கனை ஆவார். 

 

*வேலுநாச்சியார் கி.பி. 1730ஆம் ஆண்டு, இராமநாதபுரம் மன்னர் செல்லமுத்து விஜயரகுநாத சேதுபதி - சக்கந்தி முத்தாத்தாள் தம்பதியினருக்கு ஒரே பெண் மகளாக பிறந்தார். 

 

*வேலுநாச்சியார் ஆண் வாரிசு போலவே வளர்க்கப்பட்டார். 

 

* வேலுநாச்சியார் பல மொழிகள் கற்றார். வாள் வீச்சு, களரி வீச்சு உள்ளிட்ட ஆயுதப் பயிற்சிகளையும் அவர் பெற்றார்.

 

*இராணி வேலு நாச்சியார் கி.பி. 1746 இல் சிவகங்கைச் சீமை மன்னர் முத்துவடுகநாதத்தேவரை மணமுடித்தார். 

 

*கி.பி.1772 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 25 ஆம் தேதி சிவகங்கைப் படைகளை பிரிட்டிஷ் ராணுவதளபதி பெஞ்சர் முற்றுகையிட்டார். ராஜா முத்து வடுகநாதர் அவரது வீரர்களுடன் பிரிட்டிஷ் படைகளுக்கு எதிரான யுத்தத்தில் வீரமரணம் அடைந்து விட்டார். 

 

*வேலுநாச்சியார், முத்து வடுக நாதரை அடக்கம் செய்து விட்டு திண்டுக்கல் அருகே விருப்பாட்சி விரைந்தார்.

தண்டவராயன் பிள்ளை உடன் ராணி வேலுநாச்சியார் மற்றும் மகள் வெள்ளச்சிநாச்சியார் திண்டுக்கல் அருகே விருப்பாட்சி பாளையத்தில் கோபால் நாயக்கரிடம் அடைக்கலமானார். பின்னர் ராணி வேலுநாச்சியாரின் பாதுகாவலர்கள் வெள்ளைமருது மற்றும் சின்னமருது ஆகியோரும் அவருடன் இணைந்து கொண்டனர். 

 

*இராணி வேலு நாச்சியார், தளபதிகள் மருது சகோதரர்களுடன் இணைந்து புதிய படையணியை கட்டி எழுப்பினார்.

 

*மைசூரை ஆண்ட ஹைதர் அலி உதவியுடன் திண்டுக்கல் மலைக்கோட்டையில் சிறிது காலம் வேலுநாச்சியார் தங்கி இருந்தார். 

 

*வேலுநாச்சியார் படையணியை கட்டமைக்க ஹைதர் அலி, கோபால் நாயக்கர் உள்ளிட்ட பலரும் உதவிக்கரம் நீட்டினர். இதனால் வேலுநாச்சியார் 7 ஆண்டுகள் இடைவிடாமல் ஆங்கிலேயருடன் யுத்தம் நடத்தி இழந்த சிவகங்கை சீமையை மீட்டெடுத்தார்.

 

*வேலுநாச்சியாரின் படை தளபதிகளில் ஒருவரான குயிலி, பிரிட்டிஷ் படைகளின் வெடிமருந்து கிடங்கை தற்கொலை படை தாக்குதல் மூலம் சிதறடித்தார்.

 

*குயிலி  உலகின் முதலாவது தற்கொலைப் படை போராளி என்ற சரித்திரத்தைப் படைத்தார்

 

* வேலு நாச்சியார் சிவகங்கையை மீட்டு ஆட்சிபுரிந்த போது சின்னமருதுவை நாட்டின் முதல்அமைச்சராக பணிபுரிவதற்கும் வெள்ளைமருது நாட்டின் தலைமைத்தளபதியாக பணிபுரிவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. 

 

*ராணி வேலு நாச்சியார் தனது கணவரைத் தொடர்ந்து கி.பி.1789 வரை சிவகங்கையை ஆட்சிபுரிந்தார். இவர் நாட்டை நிர்வகிப்பதற்காக மருதுசகோதரர்களுக்கு அதிகாரங்களை வழங்கினார். அதன் பின்னர் சில ஆண்டுகளில் ராணி வேலு நாச்சியார் மரணம் அடைந்தார்

 

வட இந்தியாவில் ஜான்சி ராணி லட்சுமிபாய், சுதந்திரப் போராட்டத்தின் முதல் முகமாக முன்னிறுத்தப்படுகிறார். ஆனால் அவருக்கு ஒரு நூற்றாண்டுக்கு முன்னரே தமிழர் நிலத்தில் ஆங்கிலேயருக்கு எதிராக வீரம் செறிந்த யுத்தம் நடத்திய வரலாற்றுப் பெருமைக்குரியவர் நமது ராணி வேலுநாச்சியார்

    

 *நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A.,M.COM.,M.SC.,M.SC.,M.PHIL.,M.ED.,M.PHIL.,NET(T).,NET(EDN).,NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

Post a Comment

0 Comments