தினம் ஒரு புத்தகம்
நாள்:272
தேதி:03-05-2023
புத்தகம் எண்ணிக்கை:272
புத்தகத்தின் பெயர் : இடம் மாறிய இதயம்
ஆசிரியர்
: அவளும் இவளும்
பக்கங்கள் : 90
விலை : 110
பதிப்பகம் : U 2 Write
இணைந்து கொண்டு ஆசிரியர்கள் pdf ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
* "இடம மாறிய இதயம்" என்ற இந்தப்
புத்தகத்தின் தலைப்பே புத்தகத்தின் உள்ளடக்கத்தில் உள்ள கவிதைகளின் தன்மையினை
உணர்த்தி விடுகிறது
* கவிஞனுக்கு காவியம் படைக்கும் ஆயுதங்கள்
பேனாவும் காகிதங்களுமே என்பதை உண்மையாக்கியுள்ளனர்
*இந்தக் கவிஞர்களின் பேனாக்கள் காதல் என்ற அழகியல் உணர்வை மையாக நிரப்பியதால் என்னவோ இப்புத்தகம் முழுவதும்
அழகியல் உணர்வு மிக்க கவிதைகள் நிறைந்துள்ளது
*கவிஞர் மீராவின் கனவுகள்+கற்பனைகள் = காகிதங்கள் என்ற அழகியல் கவிதைகளுக்கு பிறகு
மீண்டும் அழகியல் கவிதைகளை நீண்ட நாட்களுக்குப் பிறகு படிக்கிறேன் கவிதைகள்
அருமை
*கவிதைகளின் வடிவமைப்பு ,அச்சுப்பதிப்பு, மிக
அருமை
*வாழ்வின் எதார்த்தத்தை உணர்த்தும் அழகியல்
கவிதைகள் இல்லாததை விட இருப்பதே மேல் என்பதை உணர்த்தும் அழகிய கவிதை
*கிடைக்காத
பக்கங்களுக்காய்
கவலை கொள்ளாமல்
கிடைத்த பக்கங்களை
அன்புடன் புரட்டுங்கள்
வாழ்க்கை புத்தகம் அழகாகும்...!
* முதல் காதல் மூச்சுக்காற்று உள்ள அனைவருக்கும்
இருப்பது என்பதைப் போல "உள்ளொன்று "கவிதை உணர்த்துகிறது
*சொல்லிக் கொள்ள முடியாத இரகசியங்கள்
எல்லோர் மனதிலும்
இருக்க தான் செய்கின்றன....!
* கனவு கவிதை மீண்டும் நமது கலைந்த கனவே
நினைவுபடுத்துகிறது
*உனக்கென நானும்
எனக்கென நீயும் என
எழுதி முடித்த பிறகு தான்
களைந்தது கனவு
*இன்று பல திருமணங்கள் மணமகளின் ஆசையை விட
பெற்றோரின் ஆசையால் பெற்றோரின் விருப்பத்தாலே நடைபெறுகிறது என்பதை பற்றி அழகாய்
உணர்த்தும் கவிதை
*கூலி கொடுத்து
அனுப்பி வைக்கிறார்கள்
மகள் விரும்பாத சுற்றுலாவிற்கு ...!
*புறநானூறில் பாடிய பொன்முடியாரின் பாடலுக்கு
இன்றைய நிலையில் பிள்ளைகளின் கடனே தீருமோ என வினாக் கேட்கிறார் கவிஞர்
*ஈன்று புறந்தருதல்
தாய்க்குக்கடனே
சான்றோனாக்குதல்
தந்தைக் கடனே
என்றைக்குத் தீருமோ
பிள்ளைக் கடன் ...!
*இன்றைய உறவுகளையும் உலக மக்களையும் உணர்த்தும்
கவிதை வரிகள் அருமை
*சூழ்நிலை மாறினால்
சுற்றமும் மாறும் என்பது
*அறிவுரைக்கு நவீன வரையறை நவீன இலக்கணம் அருமை
*அனுபவம்
முடியும்
இடத்தில் தான்
ஆரம்பமாகிறது
அறிவுரை ..!
*கணவன் மனைவியின் ஆழ்ந்த காதல் உணர்வை
உணர்த்தும் கவிதை
*12 மணி நேரமும்
வேலை செய்வதால்
உன் ஞாபகம் எனக்கு
வரவில்லை என்றான் தலைவன்
24 மணி நேரமும்
காத்திருப்பதால்
உங்களைத் தவிர
வேறு ஞாபகம் எனக்கு
வரவில்லை என்றாள் தலைவி ..!
*இந்தப் புத்தகத்தில் படித்தவுடன் பலமுறை
சிந்திக்க வைத்த கவிதை
*கல்லறைப் பூவும்
கல்யாணப் பூவும்
அழகாய் பூத்தது
ஒரே செடியில் ...!
இந்தக் கவிதையின் பாதிப்பில் இருந்து மீண்டு
வரவே பல மணி நேரம் ஆகிவிட்டது
*தொடர்ந்து படியுங்கள் தொடர்ந்து எழுதுங்கள்
கவிதை உலகில் சிகரம் தொட வாழ்த்துக்கள்
*ஒவ்வொரு கவிதை தொடங்கும் முன்பே கவிதைக்கு
அறிமுக உரை அருமை
*மனதில் ஆழ்ந்த மகிழ்வோ அல்லது பாதிப்போ நல்ல
கவிதைக்கு வழிகோலும் இக்கவிஞர்கள் மனதின் பாதிப்புகளை உணர்வுகளை அழகாய் கவிதைகள்
படைத்துள்ளார்கள் வாழ்த்துக்கள்
* ஒவ்வொரு கவிதையும் படிக்கும் போது மன நிறைவு
ஏற்படுகிறது நல்ல வார்த்தைகள் புதுப்புது மாறுபட்ட சிந்தனைகள் வாழ்த்துக்கள்
'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,
M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,
பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,
சங்ககிரி- 637301
இதுவரை உள்ள புத்தகங்களின் மொத்த தொகுப்புகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள DOWNLOAD - ஐ CLICK செய்து பார்த்துக் கொள்ளலாம்.
0 Comments