இடம் மாறிய இதயம் ஆசிரியர் : அவளும் இவளும்

 


தினம் ஒரு புத்தகம்

நாள்:272

தேதி:03-05-2023

புத்தகம் எண்ணிக்கை:272  

புத்தகத்தின் பெயர் : இடம் மாறிய இதயம்

ஆசிரியர் : அவளும் இவளும் 

பக்கங்கள் : 90 

விலை  : 110 

பதிப்பகம் : U 2 Write

 மேலும் கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

இணைந்து கொண்டு ஆசிரியர்கள் pdf ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.      


 * "இடம மாறிய இதயம்" என்ற இந்தப் புத்தகத்தின் தலைப்பே புத்தகத்தின் உள்ளடக்கத்தில் உள்ள கவிதைகளின் தன்மையினை உணர்த்தி விடுகிறது 

 

* கவிஞனுக்கு காவியம் படைக்கும் ஆயுதங்கள் பேனாவும் காகிதங்களுமே என்பதை உண்மையாக்கியுள்ளனர்

 

*இந்தக் கவிஞர்களின்  பேனாக்கள் காதல் என்ற அழகியல் உணர்வை மையாக  நிரப்பியதால் என்னவோ இப்புத்தகம் முழுவதும் அழகியல் உணர்வு  மிக்க கவிதைகள் நிறைந்துள்ளது 

 

*கவிஞர் மீராவின் கனவுகள்+கற்பனைகள் =  காகிதங்கள் என்ற அழகியல் கவிதைகளுக்கு பிறகு மீண்டும் அழகியல் கவிதைகளை நீண்ட  நாட்களுக்குப் பிறகு படிக்கிறேன் கவிதைகள் அருமை 

 

*கவிதைகளின் வடிவமைப்பு ,அச்சுப்பதிப்பு, மிக அருமை 

 

*வாழ்வின் எதார்த்தத்தை உணர்த்தும் அழகியல் கவிதைகள் இல்லாததை விட இருப்பதே மேல் என்பதை உணர்த்தும் அழகிய கவிதை 

 

*கிடைக்காத 

பக்கங்களுக்காய் 

கவலை கொள்ளாமல் 

கிடைத்த பக்கங்களை 

அன்புடன் புரட்டுங்கள் 

வாழ்க்கை புத்தகம் அழகாகும்...!

 

* முதல் காதல் மூச்சுக்காற்று உள்ள அனைவருக்கும் இருப்பது என்பதைப் போல "உள்ளொன்று "கவிதை உணர்த்துகிறது 

 

*சொல்லிக் கொள்ள முடியாத இரகசியங்கள் 

எல்லோர் மனதிலும் 

இருக்க தான் செய்கின்றன....!

 

* கனவு கவிதை மீண்டும் நமது கலைந்த கனவே நினைவுபடுத்துகிறது 

 

*உனக்கென நானும் 

எனக்கென நீயும் என 

எழுதி முடித்த பிறகு தான் 

களைந்தது கனவு 

 

*இன்று பல திருமணங்கள் மணமகளின் ஆசையை விட பெற்றோரின் ஆசையால் பெற்றோரின் விருப்பத்தாலே நடைபெறுகிறது என்பதை பற்றி அழகாய் உணர்த்தும் கவிதை 

 

*கூலி கொடுத்து 

அனுப்பி வைக்கிறார்கள் 

மகள் விரும்பாத சுற்றுலாவிற்கு ...!

 

*புறநானூறில் பாடிய பொன்முடியாரின் பாடலுக்கு இன்றைய நிலையில் பிள்ளைகளின் கடனே தீருமோ என வினாக் கேட்கிறார் கவிஞர்

 

*ஈன்று புறந்தருதல்

தாய்க்குக்கடனே 

சான்றோனாக்குதல்

தந்தைக் கடனே 

என்றைக்குத் தீருமோ 

பிள்ளைக் கடன் ...!

 

*இன்றைய உறவுகளையும் உலக மக்களையும் உணர்த்தும் கவிதை வரிகள் அருமை 

 

*சூழ்நிலை மாறினால் 

சுற்றமும் மாறும் என்பது 

 

*அறிவுரைக்கு நவீன வரையறை நவீன இலக்கணம் அருமை 

 

*அனுபவம் 

முடியும் 

இடத்தில் தான் 

ஆரம்பமாகிறது 

அறிவுரை ..!

 

*கணவன் மனைவியின் ஆழ்ந்த காதல் உணர்வை உணர்த்தும் கவிதை 

 

*12 மணி நேரமும் 

வேலை செய்வதால் 

உன் ஞாபகம் எனக்கு 

வரவில்லை என்றான் தலைவன் 

 

24 மணி நேரமும் 

காத்திருப்பதால் 

உங்களைத் தவிர 

வேறு ஞாபகம் எனக்கு 

வரவில்லை என்றாள் தலைவி ..!

 

*இந்தப் புத்தகத்தில் படித்தவுடன் பலமுறை சிந்திக்க வைத்த கவிதை 

 

*கல்லறைப் பூவும் 

கல்யாணப் பூவும் 

அழகாய் பூத்தது 

ஒரே செடியில் ...!

 

இந்தக் கவிதையின் பாதிப்பில் இருந்து மீண்டு வரவே பல மணி நேரம் ஆகிவிட்டது 

 

*தொடர்ந்து படியுங்கள் தொடர்ந்து எழுதுங்கள் கவிதை உலகில் சிகரம் தொட வாழ்த்துக்கள் 

 

*ஒவ்வொரு கவிதை தொடங்கும் முன்பே கவிதைக்கு அறிமுக உரை அருமை 

 

*மனதில் ஆழ்ந்த மகிழ்வோ அல்லது பாதிப்போ நல்ல கவிதைக்கு வழிகோலும் இக்கவிஞர்கள் மனதின் பாதிப்புகளை உணர்வுகளை அழகாய் கவிதைகள் படைத்துள்ளார்கள் வாழ்த்துக்கள்

 

* ஒவ்வொரு கவிதையும் படிக்கும் போது மன நிறைவு ஏற்படுகிறது நல்ல வார்த்தைகள் புதுப்புது மாறுபட்ட சிந்தனைகள் வாழ்த்துக்கள்                

  *நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

 இதுவரை உள்ள புத்தகங்களின் மொத்த தொகுப்புகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள DOWNLOAD - ஐ CLICK செய்து பார்த்துக் கொள்ளலாம்.

Post a Comment

0 Comments