தினம் ஒரு புத்தகம்
நாள்:262
தேதி:23-04-2023
புத்தகம் எண்ணிக்கை:262
புத்தகத்தின் பெயர் :பாரதியார் கவிதைகள்
ஆசிரியர் : மகாகவி பாரதியார்
பகுதிகள் :இரண்டு பக்கங்கள் :1524.
விலை :2000.
பதிப்பகம் :வர்த்தமானன் பதிப்பகம்
மேலும் கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான
* சாகாவரம் பெற்ற கவிஞர் கவிஞர்களை இரு வகைகளாகப்
பிரிப்பர். கருவிலே திரு ஏற்றார்போல் மேகம் போல விரைந்து
கவிதை படுபவர் ஒரு சாரார். முயன்று கவி ஏற்றுபவர் மற்றொரு சாரார்.
*பாரதியாரோ முதல் வகையை சார்ந்த கவியரசர்.
*39 ஆண்டுகளில் அவர் மறைந்தது நமக்கு மாபெரும்
இழப்பு. அவர் இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்து இருப்பின்
எவ்வளவு இனிய கவிதைகள் பெற்றிருப்போம் நாம் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்.
* பாரதியாரின் கவிதைகள் தனக்கு நிகரான அவருடைய
பாடல்களை தொடர் நாடகங்கள், திரைப்படங்கள்,
கதைகள் கட்டுரைகள், மேடைப் பேச்சுகள் அனைத்தும் அவற்றை பயன்படுத்த
யாருமே தவறுவதில்லை.
* அவருடைய கவிதைகளில் மனதைப் பறிகொடுத்தவர்
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, இவரை அறியாத தமிழர் இருக்க இயலாது. அந்த மாபெரும் கவிஞர் பாரதியார் பெருமையைப்
பற்றிப் பின்வருமாறு பாடுகிறார்.
"பாட்டுக்கொரு புலவன் பாரதியடா
அவன் பாட்டை இன்னொருவன் பாடினானடா
அதைக் கேட்டு கிறுகிறுத்துப் போனேனேடா
அந்த கிறுக்கு மொழியில் உளறுவதை பொறுப்பாயடா..
*பாரதியார் ஒரு தீர்க்கதரிசி என்று கூறுகிறோம். தீர்க்கதரிசி என்பதன் பொருள் என்ன? எதிர்காலத்தில் நடக்கப்போவதை முன்பே உணர்ந்து
கூறுபவரை தீர்க்கதரிசி ஆவார். அப்படி பாரதியார் கூறியதை என்ன என்றுதான்
பார்ப்போம்.
"வானை அளப்போம். கடல் மீனை அளப்போம். சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம் என்ற
பாடலடி அவர் ஒரு தீர்க்கதரிசி என்பதற்கு சான்று ஆகும்.
*இந்தியா விடுதலை பெறுவதற்கு முன்பு அவர்
எழுச்சியுடன் " ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்து
விட்டோம்" என்று பாடி நாட்டிற்கு ஒரு புத்துணர்ச்சி
ஏற்படுத்திய புதுமைக் கவிஞர் அல்லவா பாரதியார்.
*சமுதாயம் மனிதனுக்கு கிடைக்க வேண்டிய முறைப்படி
கிடைக்க வேண்டும் என்ற உயர் சிந்தனை பாரதிக்கு இருந்தது. பசியால் வாடும் மக்களை பார்த்து மனம் பதறினார்.
*"வயிற்றுக்கு சோறிட வேண்டும். இங்கு வாழும் மனிதருக்கெல்லாம்" என்பது
எவ்வளவு உயர் சிந்தனை. இதன் பிரதிபலிப்புதான் பெருந்தலைவர் காமராசரின்
மதிய உணவு திட்டம். எம்ஜிஆர் அவர்களின் சத்துணவு திட்டம் என்று கூற நியாயம் உண்டு
* பல கல்வி பற்றி அறிய வேண்டியது நமது முக்கிய
கடமை தொழிற்கல்விக்கு முக்கியத்துவம் ஏற்பட்டுள்ளது. தொழில்நுட்ப கல்வி மேலும் மேலும் வளர்ந்து
வருகிறது. மருத்துவம் பொறியியல் கணினி என்று பல
துறைகளிலும் நாம் வளர்ந்து வருகிறோம். இந்த கல்வி முன்னேற்றம் எல்லாம் அடைய எண்ணி
அவர்கள் தான் உலக மகா கவிஞர் பாரதி.
*தேசிய கீதங்கள் நாட்டின் உரிமை நிலையை கண்டு
பொங்கி எழுந்த பாரதியின் கருத்து பிழம்புகளே அப்பாடல்கள் தான்.
* இந்தியாவிற்கு விடுதலை உணர்வை ஊட்டினார். நாடு மொழி மீது பற்று இன்றி இருந்த நம்மவருக்கு
பற்றி ஏற்பட காரணமாகும்.
*பாரதி தமிழ் மொழியின் மீதுள்ள பற்றும் நாட்டுப்
பற்றும் உணர்த்தும் பாடல் அடிகள் சான்று பகிர்கின்றன.
*பாரதியார் கடவுள் நம்பிக்கை கொண்டவர் என்பதை
அவர் பாடல்கள் நமக்கு உணர்த்துகின்றன. அவர் பாடாத தெய்வம் இல்லை. சிவன், விநாயகன்,
முருகன் சக்தி, வள்ளி, கண்ணம்மா, திருமகள், கலைமகள் என்று இந்து சமயத்தில்
வெளிப்படும் பாடல்களை பாடிப் பரவசப் படுத்துகிறார். மற்றும் ஏசு, அல்லா என்ற கடவுள் அறியும்படி மத ஒருமைப்பாட்டு
வலியுறுத்துகிறார். இயற்கையின் மீது ஈடுபாடு கொண்டவர் என்பதை அவர் பாடிய சூரியன்
சந்திரன் பாடல் சான்று கூறுவனவாம்.
*ஞானப் பாடல்கள் என்ற தலைப்பில் பாரதியார் பாடிய
பாடல்கள் மக்களுக்கு ஞானத்தை உணர்த்தும் எண்ணத்தில் பாடுபட்டன.
"அச்சமில்லை" என்ற தலைப்பில் உள்ள பாடல் அச்சம் எந்த
நிலையிலும் கூடாது என்பதை உணர்த்தியது
*தமிழ் இலக்கிய பாடல்களில் தனி பாடல்களுக்கு ஒரு
தனி இடம் உண்டு. பாரதியார் பாடல்கள் சிலவற்றை பாடியுள்ளார்.
* மழை, புயல், காற்று, கவிதை என்ற பாடல்கள் சிறப்புடையன.
*சீட்டுக் கவி எழுதிய எட்டையபுரம் மன்னருக்குத்
வறுமை நிலையை உணர்த்தி பொருள் பெற முயன்றதை சீட்டுக்கவிபாடல் கூறும், வேல்ஸ் இளவரசருக்கு வரவேற்பு பாடலும்
போற்றத்தக்கது.
*பாரதியார் கண்ணனை போல பல கோணங்களில்
பார்க்கிறார். கண்ணனை தன் தாய், தந்தை, சேவகன், அரசன், ஆண்டான் என்ற எண் வகையான
பாடல்கள் என்றும் நிலைத்து நிற்கும் திறமை கொண்டவை, இறைவன் நாம் விரும்பியபடி
காட்சி கொடுத்து அருள் தருவான் என்பது இதன் கருத்தாகும்.
* காற்றும் கவிஞனும் மறிப்பதில்லை தமிழ் கவிஞன்
பாரதிக்கு சாவு என்பதே இல்லை கவிதையாக என்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்
* நிலமகள் பெற்றெடுத்த நிலா மகன் பாரதி
*குறிப்பு*
*இந்தப் புத்தகம் சங்ககிரி அரசு கிளை நூலகத்தில்
இருக்கிறது*
*நன்றிகளுடன்*
'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,
M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL.,
NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,
பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,
சங்ககிரி- 637301
0 Comments