*தினம் ஒரு புத்தகம்*
நாள்:205
தேதி:25-02-2023
புத்தகம் எண்ணிக்கை:205
புத்தகத்தின் பெயர் :க.அயோத்திதாசர் பண்டிதர்
ஆசிரியர் :கௌதம சன்னா
பக்கங்கள் :112
விலை: 50
பதிப்பகம் :சாகித்திய அகடமி
கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான
*தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் ஆகியோருக்கு
முன்னோடியாக திகழ்ந்தவர் அயோத்திதாசர்
*நல்ல சிந்தனை, சிறப்பான செயல், உயர்வான பேச்சு,உவப்பான
எழுத்து பாராட்டத்தக்க உழைப்பு ஆகிய ஐந்து பண்புகளையும் ஒருசேரப் பெற்ற
சிந்தனையாளர்
*தென்னிந்திய சமூக சீர்திருத்தத்தின் தந்தை எனப்
போற்றப்பட்டவர்
*அயோத்திதாசர் 1845 ஆம் ஆண்டு மே திங்கள்
இருபதாம் நாள் சென்னையில் பிறந்தார் இயற்பெயர் காத்தவராயன் ஆகும்
*தமிழ் மட்டும் இன்றி பாலி ,வடமொழி ,ஆங்கிலம்
ஆகிய மொழிகளில் தேர்ச்சி பெற்றிருந்தார்
*1907ஆம் ஆண்டு சென்னையில் ஒரு பைசா தமிழன்
எனும் வார இதழை வெளியிட்டார் பின்னர் தமிழன் என மாற்றினார்
*ஒரு மனிதன் அறிவு வளர்ச்சி பெற வேண்டுமானால்
கல்வி அறிவு அவசியம் என்று அயோத்திதாசர் கூறினார்
*போகர் 700 அகத்தியர் 200 சிமிட்டு இரத்தின
சுருக்கம் பாலவாகடம் போன்ற நூல்களை பதிப்பித்தார்
*மக்கள் அனைவரும் அன்பு கொண்டு வாழ வேண்டும்
கோபம் பொறாமை ,பொய் ,களவு போன்றவற்றை தம் வாழ்வில் இருந்து நீக்கி வாழ வேண்டும்
*1892ல் திராவிட மகாஜன சங்கம் தொடங்கினார்
*விடுதலை என்பது வெறும் ஆட்சி மாற்றம் மற்றும்
அன்று அது மக்களின் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்துவதாக அமைய வேண்டும்
என்று கூறினார்
*சென்னை தாம்பரத்தில் உள்ள சித்த ஆராய்ச்சி
மையத்துடன் இணைந்த மருத்துவமனைக்கு அயோத்திதாசர் பண்டிதர் மருத்துவமனை என்று பெயர்
சூட்டப்பட்டுள்ளது
*ஆதி வேதம் ,இந்திரர் தேச சரித்திரம் ,விவாக
விளக்கம் ,புத்தர் சரித்திரப்பா போன்ற நூல்களை எழுதியுள்ளார்
*நன்றிகளுடன்*
'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,
M.A.,M.A.,M.A.,M.A.,M.A.,M.COM.,M.SC.,M.SC.,M.PHIL.,M.ED.,M.PHIL.,NET(T).,NET(EDN).,NET(PSY).,TET.,CTET.,CLIS.,
பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,
சங்ககிரி- 637301
0 Comments