தினம் ஒரு புத்தகம்
நாள்:264
தேதி:25-04-2023
புத்தகம் எண்ணிக்கை:264
புத்தகத்தின் பெயர் :எனது நாடக வாழ்க்கை
ஆசிரியர்: ஔவை தி.கா சண்முகம்
பதிப்பகம் :ஏ கே
.எல் .பதிப்பகம்
பக்கங்கள் :576
விலை:
மேலும் கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான
இணைந்து கொண்டு ஆசிரியர்கள் pdf ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
*திருவனந்தபுரம் கண்ணுசாமி சண்முகம் என்னும் ஔவை
தி. க. சண்முகம்
*1918 ஆம் ஆண்டு முதல் 1972 ஆம் ஆண்டு வரை தமிழ்
நாடகக்கலைக்கு நற்பணி ஆற்றியவர்
*நாடகத்துறையில் தொல்காப்பியர் என மு.
கருணாநிதியால் புகழப்பட்டவர்.
* ம. பொ. சிவஞானம் தலைமையில் இயங்கிய தமிழரசுக்
கழகத்தின் பொதுச் செயலாளராகப் பணியாற்றியவர்.
*சண்முகத்தின்
தம்பி தி. க. பகவதி புகழ்பெற்ற நாடக நடிகரும், திரைப்பட நடிகரும் ஆவார்.
*எனது நாடக வாழ்க்கை என்பது அவ்வை சண்முகம்
அவர்களின் தன் வரலாற்று நூலாகும்
*சண்முகம்வாழ்க்கை வரலாறு என்றாலும், அது 50
ஆண்டுகால, தமிழ் நாடக வரலாற்றைச் சொல்லும் நூலாகும்.
*இந்த நூலில் 1918 ஆம் ஆண்டு தொடங்கி 1972 வரை
தன் நாடக உலக அனுபவங்களை எழுதியிருக்கிறார்.
*இந்த நூல் முதலில் கவி கா. மு. ஷெரீப் நடத்திய
சாட்டை என்ற வார இதழில் தொடராக வந்தது பின்னர் அதன் தொகுப்பு நூல்வடிவம் பெற்றது.
*எனது நாடக வாழ்க்கை என்ற அவ்வை தி.க.சண்முகம்
நூலில் மல்லாங்கிணருக்கு நாடகம் போட வந்த அனுபவத்தை எழுதியிருக்கிறார். அதில்
சங்கரதாஸ் சுவாமிகள் மல்லாங்கிணருக்கு வந்து நாடகம் நடத்திய செய்தி
இடம்பெற்றுள்ளது.
*மல்லாங்கிணரில் நாடகம் போன்ற நிகழ்ச்சிகள்
ஏதாவது நடக்கிறது என்றால் வேட்டுப் போடுவார்கள். அந்தச் சப்தம் கேட்டு பக்கத்துக்
கிராமத்து மக்கள் யாவரும் ஒன்று திரண்டு வந்துவிடுவார்கள். அந்த விளம்பர யுக்தியை
வியந்து டிகே சண்முகம் எழுதியிருக்கிறார்.
*ஆடல் இல்லாத நாடகத்தை மக்கள் எப்படி
ரசித்தார்கள் என்பதைப் பற்றிய குறிப்பும் சுவாரஸ்யமானது.
*நாடகம் முடிந்த பிறகு நடிகர்கள்
கௌரவிக்கப்படுவார்கள். அப்போது விவசாயிகள் தங்களின் நிலத்தில் விளைந்த காய்கறிகள்.
பழங்கள். கம்பு, சோளம் போன்ற தானியங்கள். நாட்டுக்கோழிகளை அன்புப் பரிசாகக்
கொடுப்பார்கள்
* இந்நூலில் நாடகங்கள் மக்களை எவ்வாறு கவர்ந்தது
என்பது பற்றியும் மக்களை நாடகத்தின் பால் ஈர்க்க என்ன செய்வது என்பது பற்றியும்
கூறியுள்ளார்
* ஒரு நாடகத்தை நடத்த நாடகக் கலைஞர்கள் படும்
துன்பங்களையும் துயரங்களையும் தெளிவாக விளக்கியுள்ளார்
* நாடகங்கள் மக்கள் மனதில் எப்படி விழிப்புணர்வை
ஏற்படுத்தின என்பதை பற்றியும் விளக்கி உள்ளார்
*தனது வாழ்வில் அடைந்த துன்பங்களையும்
துயரங்களையும் மற்றவருக்கு படிப்பினையாக தெளிவுபட கூற கூறியுள்ளார்
* இந்த நூலை படிக்கும் போது சண்முகம் அவர்களின்
வாழ்க்கை வரலாறு மட்டுமல்லாமல் அன்றைய காலகட்டத்தில் நாடகங்கள் எவ்வாறு
நடிக்கப்பட்டன நாடகங்கள் எவ்வாறு காலத்திற்கு ஏற்ப மாற்றமடைந்தன என்பதை தெளிவாக
புரிந்து கொள்ள முடிந்தது
*நமது நாட்டில் நாடகத்தில் பழங்கால நிலையை
அறிந்து கொள்ள இந்த நூல் ஒரு கால கண்ணாடி மற்றும் வரலாற்று பொக்கிஷம் ஆகும்
*குறிப்பு*
*இந்தப் புத்தகம் பள்ளிபாளையம் அரசு கிளை
நூலகத்தில் இருக்கிறது*
*நன்றிகளுடன்*
'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,
M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL.,
NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,
பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,
சங்ககிரி- 637301
இதுவரை உள்ள புத்தகங்களின் மொத்த தொகுப்புகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள DOWNLOAD - ஐ CLICK செய்து பார்த்துக் கொள்ளலாம்.
0 Comments