*தினம் ஒரு புத்தகம்*
நாள்:228
தேதி:20-03-2023
புத்தகம் எண்ணிக்கை:228
புத்தகத்தின் பெயர் : படிப்பில் சிறந்து
விளங்குவது எப்படி
ஆசிரியர் : பசுமைக்குமார்
பக்கங்கள் : 88
விலை : 40
பதிப்பகம் : தாமரைப்பதிப்பகம்
*படிப்பில் சிறந்து விளங்குவது எப்படி என்ற இந்த
நூலில் எந்த ஒரு மாணவரும் படிப்பில் சிறந்து விளங்க பல்வேறு உத்திகள்
தெரிவிக்கப்பட்டுள்ளன
*நினைவாற்றலை வளர்த்துக் கொள்ள வேண்டியது
அவசியம் மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டியதன் முக்கியத்துவம் நேர நிர்வாகத்தின்
இன்றியமையாமை ஆகிய முக்கிய கூறுகள் இந்த நூலில் வலியுறுத்தப்பட்டுள்ளன
*மாணவர்களுக்கு பாடத்தில் கவனம் செலுத்த
முடியாமல் போவது ஏன் என்பதற்கான விளக்கங்களையும் இதில் காணலாம்
*மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்க
வேண்டுமானால் அவர்கள் உடல் நலத்திலும் அக்கறை செலுத்த வேண்டும்
*நல்ல உணவுப்பழக்க வழக்கங்களை கைக்கொள்ள
வேண்டும்
*தேர்வு நேரத்தில் பயம் கொள்ளக்கூடாது
*ஒரு பாடத்தில் அதிக மதிப்பெண்கள் எடுப்பதற்கும்
இன்னொரு பாடத்தில் குறைவான மதிப்பெண்கள் எடுப்பதற்கும் காரணம் அவர்கள் அந்த
பாடத்தின் மீது செலுத்தும் ஆர்வத்தின் அளவு ஆகும்
*மாணவர்கள் பள்ளி வாழ்க்கையிலும் பிற்கால
வாழ்க்கையிலும் முன்னேற தன்னம்பிக்கை அவசியம்
*குறிப்பு*
*இந்தப் புத்தகம் சங்ககிரி அரசு கிளை நூலகத்தில்
இருக்கிறது*
*நன்றிகளுடன்*
'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,
M.A.,M.A.,M.A.,M.A.,M.A.,M.COM.,M.SC.,M.SC.,M.PHIL.,M.ED.,M.PHIL.,NET(T).,NET(EDN).,NET(PSY).,TET.,CTET.,CLIS.,
பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,
சங்ககிரி- 637301
0 Comments