தென்னாட்டுப் போர்க்களங்கள் ஆசிரியர் :கா.அப்பாதுரை

 


நாள்:280

தேதி:11-05-2023

புத்தகம் எண்ணிக்கை:280   

புத்தகத்தின் பெயர் :தென்னாட்டுப் போர்க்களங்கள் 

ஆசிரியர் :கா.அப்பாதுரை 

விலை :350 

பக்கங்கள் : 424 

பதிப்பகம் : விக்ரம் பதிப்பகம்

 மேலும் கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

இணைந்து கொண்டு ஆசிரியர்கள் pdf ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.      


* தமிழர்களின்  வாழ்வின் வீரத்தையும் அவர்தம் சிறப்பையும் விளக்கிக் கூறும் நூல் பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையாரின் “தென்னாட்டுப் போர்க்களங்கள்” 

 

*தென்னாட்டுப் போர்க்களங்கள் என்பது கா. அப்பாத்துரை எழுதிய போர்க்களங்கள் பற்றிக்கூறும் வரலாற்றாராய்ச்சி நூலாகும். 

 

*இதில் சங்ககாலம் நடந்த போர்கள், வரலாற்று காலப்போர்கள் நடந்த போர்களும் கல்வெட்டுகளையும், சங்கத்தமிழ் பாடல்களையும் சான்று காட்டி எழுதப்பட்டுள்ளது.

 

*அப்பாத்துரையாரின் நூல்களை வீடுதோறும் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். அப்பாத்துரையார் எழுதிய நூல்களில் ‘தென்னாட்டுப் போர்க்களங்கள் எனும் நூல் என்னை மிகவும் கவர்ந்த ஒன்றாகும். அந்த நூலின் ஒரே ஒரு பக்கத்தை எழுத அவர் எத்தனை ஆயிரம் ஏடுகளைத் தேடிப் பார்த்திருக்க வேண்டும் என்பதை எண்ணி எண்ணி வியந்தேன்.  அவர் தமிழின் மூலத்தையே ஆராய முனைந்தவர். தமிழினத்தின் வரலாற்றைத் துருவித் துருவி ஆராய்வதன் மூலம், தமிழ் இனத்துக்கும் மற்ற இனத்துக்கும் பகை மூட்ட அல்ல- தோழமையை ஏற்படுத்த நற்பணி செய்து இருக்கிறார். அவர் அறிந்த அனைத்தையும் எழுதி ஏடாக்கினால் அவை ஒரு மண்டபமே நிறையும் அளவிற்கு இருக்கும் என்றார் அறிஞர் அண்ணா.

 

*கல்வெட்டு, பட்டயங்கள், நாணயங்கள் உதவியால் தமிழகத்துக்கு நாம் காணும் வரலாறு சென்ற ஆயிரம் ஆண்டு வரலாறே. அது சங்ககால வரலாறு போல நிறையுடைய தேசிய வரலாறு அல்லவே அல்ல.

 

*தென்னாட்டுப் போர்க்களங்கள் என்ற இச்சிற்றேடு மூன்று வகைக் குறிக்கோள்களுடன் எழுதப்பட்டுள்ளது. அது தமிழகத்தை மையமாகக் கொண்டு அதன் அரசியல் விரிவாகிய தென்னாட்டிலும் அதனினும் விரிந்த பண்பு விரிவாகிய தமிழுலகம், அதாவது தென் கிழக்காசியாவிலும் கண்ணோட்டம் செலுத்தி தமிழகத் தேசிய வாழ்வின் உடலும் உயிர் மையமும் காண முயன்றுள்ளது, அந்நாடுகளின் தேசிய, இன உரிமை வரலாறுகளில் வருங்கால வரலாற்றாசிரியர் மிகுதி கவனம் செலுத்தும்படி அது அவர்களைத் தூண்ட முனைந்துள்ளது. 

 

*இரண்டாவதாக போர்கள், வெளிநாட்டுத் தொடர்புகள் ஆகியவை தென்னகத்தைப் பற்றிய அளவில் வெறும் நிகழ்ச்சிகளல்ல. வரலாற்றின் எலும்புருவம் மட்டுமல்ல. அவையே தமிழர் தேசிய வாழ்வின் பல திரும்பு கட்டங்கள், பண்பு மாறுபாட்டுக் கணுக்கள் ஆகும். அத் தேசிய வாழ்வுக்கு உருத் தருபவையும், அதன் வளர்ச்சித் தளர்ச்சிகள், உறுதித் தளர்வுக் கூறுகளை வகுத்தமைக்கும் ஊழ்கூறுகளும் அவையே ஆகவே கூடிய மட்டும் போர்க்கள வரலாற்று தேசிய வரலாற்றின் எலும்பு மையமாக, கணு மையங்களாக, திரும்பு கட்டங்களாகவே விளக்கப்பட்டுள்ளன. 

 

*மூன்றாவதாக, போரும் தேசிய வாழ்வும்கூட நாட்டின் எலும்புக்கூடும் உடலும் மட்டுமே. அவற்றின் உயிர் அதன் தேசியப் பண்பும், அப்பண்பு அகல் உலகுடன் கொண்டுள்ள தொடர்புமேயாகும்.

 

*இந்நூலில்  சங்கப்பாடல்களையும் சிலப்பதிகாரத்தையும் கொண்டு பாண்டியன் நெடுஞ்செழியன் காலத்தில் அரண்மனையில் அமைக்கப்பட்ட பொறிகளையும், போர்கருவிகளையும் அதன் உபயோகங்களையும் பற்றி எழுதப்பட்டுளது குறிப்பிடத்தக்கது.

 

*முல்லை பெரியாறு அணை கட்ட 1886 ஆம் ஆண்டு  ஆங்கிலேயர்களால்  திருவாங்கூர் அரசுடன்  ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டனர். ஒப்பந்தப் படி

 

ஒப்பந்த காலம் 999 ஆண்டுகள்

8000 ஏக்கர்  நிலத்திற்கு  நீர்பாசனம், ஏக்கருக்கு ரூபாய் 5 வீதம் வருடத்திற்கு 40000 பணம் திருவாங்கூர் நிர்வாகத்துக்குக் கொடுக்கப்பட வேண்டும்

 

*நிலத்தின் வழியாக வரக்கூடிய அனைத்து நீருக்கும் உரிமை

அணை  மற்றும் அணை சார்ந்த பாசன வேலைகளை செய்ய உரிமை

 

*நீர் பிடி பகுதியில் மீன் பிடிக்க உரிமை

 

*நீர் பிடி பகுதியில் உள்ள மரம் செடி மற்றும் தாது பொருட்களை பயன்படுத்திக்கொள்ள உரிமை

 

*அதிகாரிகள் மற்றும் வேலையாட்கள் செல்ல உரிமை , 

 

*அணை  பராமரிப்பு  உரிமை

 

*அணை கட்டுதல் மற்றும் பாசன வேலைகளுக்கு 100 ஏக்கர்  நில உரிமை ஆகிய கோட்பாடுகளுடன்  கையொப்பமானது. 

 

*முல்லைப் பெரியாறு அணை, கேரள மாநிலம் இடுக்கி  மாவட்டத்தில் உள்ள தேவி குளம் மற்றும் பீர்மேடு  தாலுகாவில் உள்ளது.

 

* தென்னாட்டு போர்க்களங்கள் நூலை படிக்கும் போது போர்கள் நடந்த சூழலையும் போர்கள் நடைபெறும் போது இருந்த நிலையையும் அறிய முடிகிறது 

 

*தமிழர்களின் வாழ்வியலையும் வீரத்தையும் அறிந்து கொள்ள காலக் கண்ணாடியாக உதவுகிறது

                 *குறிப்பு*

*இந்தப் புத்தகம் சங்ககிரி அரசு கிளை நூலகத்தில் இருக்கிறது*

 *நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

 இதுவரை உள்ள புத்தகங்களின் மொத்த தொகுப்புகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள DOWNLOAD - ஐ CLICK செய்து பார்த்துக் கொள்ளலாம்.

Post a Comment

0 Comments