*தினம் ஒரு புத்தகம்*
நாள்:204
தேதி:24-02-2023
புத்தகம் எண்ணிக்கை:204
புத்தகத்தின் பெயர் :இரட்டைமலை சீனிவாசன்
ஆசிரியர் :ஜே .பாலசுப்பிரமணியன் பக்கங்கள் :96
விலை :50
பதிப்பகம் :சாகித்ய அகாடமி
கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான
*விளிம்பு நிலை மக்களின் விடிவெள்ளி என்று
அழைக்கப்பட்ட இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் வாழ்க்கை வரலாறே இந்தப்புத்தகமாகும்
*செங்கல்பட்டு மாவட்டத்தில் கோலியாளம்
கிராமத்தில் ஜூலை 7ஆம் தேதி 1859 ஆம் ஆண்டு பிறந்தார்
*இந்திய துணைக்கண்டத்திலேயே தாழ்த்தப்பட்ட
மக்களிலிருந்து பட்டப்படிப்பை முடித்த பெருமைக்குரியவர் இரட்டைமலை சீனிவாசன்
*1891 பறையர் மகாஜன சபையை உருவாக்கினார் அதுவே
ஆதிதிராவிட மகாஜன சபையாக மாறியது
*ஆதிதிராவிட மக்கள் விழிப்புணர்வுக்காக 1893 ஆம்
ஆண்டு பறையன் எனும் இதழை வெளியிட்டார்
*தென்னாப்பிரிக்காவில் நேட்டாலில் உள்ள
நீதிமன்றத்தில் மொழிபெயர்ப்பாளராக பணிபுரிந்தார்
*தமிழ்நாட்டில் 74 பெயர்களில் அழைக்கப்பட்ட
தாழ்த்தப்பட்ட மக்களை பொதுப் பெயரில் ஆதி திராவிடர் என அழைக்க ஆணையைப் பெற்றுத்
தந்தார்
*இவரின் மகத்தான பணியை பாராட்டி ஆங்கில அரசு
ராவ் சாகிப் பட்டம் வழங்கி சிறப்பித்தது
*வட்டமேசை மாநாட்டில் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக
அம்பேத்கர் உடன் கலந்து கொண்டார்
*ஐந்தாம் ஜார்ஜ் மன்னரிடம் நாட்டின் விடுதலை
என்பது தாழ்த்தப்பட்ட மக்களுக்கான விடுதலையே என்று கோரிக்கை வைத்தார்
*1931 ஆம் ஆண்டு ராவ் பகதூர் பட்டம் வழங்கி
சிறப்பிக்கப்பட்டார்
*கற்பி,புரட்சி செய்,ஒன்றுசேர் என்பது வார்த்தை
வரிகளில் அல்லாமல் வாழ்க்கை வரியாக அமைத்து செயல்பட்டவர்
*1932 ஆம் ஆண்டு பூனா ஒப்பந்தத்தில் இரட்டைமலை
சீனிவாசன் கையொப்பமிட்டார்
* 1945 இல் இயற்கை எய்தினார்
*நன்றிகளுடன்*
'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,
M.A.,M.A.,M.A.,M.A.,M.A.,M.COM.,M.SC.,M.SC.,M.PHIL.,M.ED.,M.PHIL.,NET(T).,NET(EDN).,NET(PSY).,TET.,CTET.,CLIS.,
பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,
சங்ககிரி- 637301
0 Comments