*தினம் ஒரு புத்தகம்*
நாள்:213
தேதி:05-03-2023
புத்தகம் எண்ணிக்கை:213
புத்தகத்தின் பெயர் :காமத்தில் இருந்து
கடவுளுக்கு
ஆசிரியர் : ஓஷோ
பக்கங்கள் :256
விலை :150
பதிப்பகம் : மா பிரேம் விமலா திருச்சி
* ஓசோவை ஏதேனும் ஒரு வகையில் வகைப்படுத்துவது
கடினம் மனித குலத்தை மேன்மைப்படுத்தும் எல்லா கருத்துக்களையும் ஏற்றுக்கொள்கிறார்
ஆனால் அதே சமயம் குறிப்பிட்ட தத்துவத்தையோ எண்ணத்தையோ அவர் சார்ந்திருக்கவில்லை
*மத்திய பிரதேசம் மாநிலம் குச்சிவாடாவில் 1931
டிசம்பர் 11ஆம் தேதி அன்று பிறந்த ஓஷோவின் இயற்பெயர் சந்திரமோகன் ஜெயின்
*சிறுவயதிலிருந்து ஊர் சுற்றிப்பார்க்க மிக்க
விருப்பம் கொண்டிருந்ததாக Glimps of a golden childhood என்ற தனது புத்தகத்தில்
குறிப்பிட்டுள்ளார்
*1990 ஜனவரி 19ஆம் தேதி இறந்தார்
*ஓசோ என்ற சொல் ஒஷியானிக் என்ற சொல்லிலிருந்து
உருவானது ஓஷியானிக் என்றால் கடலில் கரைந்து போவது என்று பொருள்
*ஓசோவின் பொருள் வானம் பூச்செறிந்து
ஆசீர்வதிக்கப்பட்ட மனிதன்
*ஐந்து தலைப்புகளில் இந்தப்புத்தகத்தில்
கட்டுரைகள் உள்ளன எனக்கு பிடித்த தலைப்பு தியானத்தின் உச்சநிலையாகும்
*வாழ்க்கையில் அழகானதும் நேர்த்தியானதும் சில
விஷயங்களை நாம் வாழ்ந்து பார்க்க முடியும் அறிந்து கொள்ள முடியும் ஆனால் அவைகளை
விவரித்தால் அவைகளுக்கு பொருள் கூறுவது மிகவும் கடினம் தான்
*கடவுள் கொடுத்துள்ளவற்றின் மீது நம்பிக்கை
கொள்வதுதான் உங்களது விடுதலைக்கான வாயில்
*மனிதனைத் தவிர எதுவும் வீட்டில் வசிப்பதில்லை
*அன்பு என்பது கொடுத்துக் கொண்டே இருப்பது அன்பு
கொடுப்பதற்கு எப்போதும் தயார் நிலையில் இருக்கும்
*நாம் நமது வாழ்க்கையில் என்ன செய்கிறோம்
என்பதுதான் நமது எதிர்காலத்தை உருவாக்குகிறது
*சக்தியை பாதுகாப்பது தான் சமயநெறியின் அடிப்படை
*ஒவ்வொரு இளம் மனதிலும் தியானத்தின் பயணத்தை
நாம் ஆரம்பித்து வைக்காத வரையில் இந்த பூமியில் அமைதி ஒருபோதும் ஏற்படாது
*குழந்தைகளை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மௌனமாக
இருப்பதற்கு ஒவ்வொரு வீட்டிலும் பழக்க வேண்டும் பெற்றோர்களாகிய நீங்களும்
அவர்களோடு சேர்ந்து மௌனத்தை பயிற்சி செய்தால் அது சாத்தியப்படும்
*தியானம் ஒரு மணி நேரம் மௌனமாக இருப்பது சக்தியை
சேகரம் செய்கிறது அதன் பின் 14 வயதில் அது சக்தி அலையில் மிகுந்து தியானத்தின்
வாயிலை தள்ளி நிற்கிறது
*பிரம்மச்சாரியத்தின் முதல் படி காமத்தை கடந்து
செல்வதுதான் அதற்கான வழி தான் தியானம் இரண்டாவது படி அன்பு சிறு வயது முதற்கொண்டு
குழந்தைகளுக்கு அன்பு செலுத்த கற்றுக் கொடுக்க வேண்டும்
*கேள்வி என்னவென்று புரிந்து கொள்ளாமல் பதில்
சொல்ல முயல்வது ஒரு மனிதனை முட்டாள் ஆக்கிவிடும்
*அறிவில்லாமல் உயிர் வாழும் மதம் ஒரு மதமாகாது
*தன்னைத்தானே பட்டை தீட்டிக் கொள்வதே தியானம்
*தன் எண்ணங்களை கடந்து செல்வதே தியானம்
* தன்னை அழித்து உருக்கி ஓடச்செய்வதே தியானம்
*நன்றிகளுடன்*
'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,
M.A.,M.A.,M.A.,M.A.,M.A.,M.COM.,M.SC.,M.SC.,M.PHIL.,M.ED.,M.PHIL.,NET(T).,NET(EDN).,NET(PSY).,TET.,CTET.,CLIS.,
பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,
சங்ககிரி- 637301
0 Comments