*தினம் ஒரு புத்தகம்*
நாள்:265
தேதி:26-04-2023
புத்தகம் எண்ணிக்கை:265
புத்தகத்தின் பெயர்
:என்னை நான் சந்தித்தேன்
ஆசிரியர் :ராஜேஷ்
குமார்
பக்கங்கள்: 504
விலை :390
பதிப்பகம் :அமராவதி
பதிப்பகம்
இணைந்து கொண்டு ஆசிரியர்கள் pdf ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
*2010-ல் தமிழக அரசு
இவருடைய எழுத்துப் பணியைப் பாராட்டி கலைமாமணி பட்டத்தை அளித்து கௌரவித்தது.
*க்ரைம் நாவல்கள்
மட்டும் அல்ல, சமுதாய அவலங்களைச் சாடும் சமூக நாவல்களையும் 1500 என்கிற
எண்ணிக்கையையும் தாண்டி இன்னமும் எழுதிக் கொண்டிருப்பவர்.
*41 ஆண்டுகளில் நான்கு
தலைமுறை வாசகர்களைப் பார்த்துக் கொண்டிருப்பவர்.
*தமிழில் வெளிவந்த,
இப்போதும் வெளிவந்து கொண்டிருக்கிற அனைத்து மாத, வார, நாளிதழ்களில் 2000க்கும்
மேற்பட்ட சிறுகதைகளை எழுதியவர்.
*எழுத்துலகில் அவர்க்கு
நேர்ந்த அவமானங்களையும், கிடைத்த வெகுமானங்களையும் தனக்கே உரித்தான விறுவிறுப்பான பரபரப்பான நடையில் 500க்கும்
மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட இந்தப் புத்தகத்தில் கொட்டியுள்ளார்.
*ராஜேஷ்குமார் ஒரு
தமிழக எழுத்தாளர் ஆவார். குற்றப் புனைவு, அறிபுனை மற்றும் துப்பறிவுப் புனைவு
பாணிகளில் 1500க்கும் மேற்பட்ட புதினங்களையும், 2000க்கும் மேற்பட்ட
சிறுகதைகளையும் எழுதியுள்ளார்
*1980களிலும் 90களிலும்
தமிழ்நாட்டில் பிரபலமாக இருந்த “பாக்கெட் நாவல்” புத்தகங்களை ஆயிரக்கணக்கில் எழுதியதன் மூலம் புகழ் பெற்றவர்.
தமிழின் காகிதக்கூழ் புனைவின் ஆளுமைகளில் ஒருவராகக் கருதப்படுகிறார்.
*கோயம்புத்தூரைச்
சேர்ந்த இவர், 20 மார்ச், 1947இல் பிறந்தார்.
* இவரது இயற்பெயர்
ராஜகோபால். கோவை ராமகிருஷ்ண வித்யாலயத்தில் கல்வி கற்றார். பவானிசாகர் பயிற்சிப்
பள்ளியில் சில காலம் ஆசிரியராகப் பணியாற்றினார்.
*1968இல் கல்கண்டு
இதழில் தன் முதல் சிறுகதையை வெளியிட்டார்.
*இவரது முதல் புதினம்
“வாடகைக்கு ஒரு உயிர்” 1980இல் வெளியானது.
*பின் ஆனந்த விகடன்,
குமுதம் போன்ற வெகுஜன இதழ்களிலும் பெஸ்ட் நாவல், திகில் நாவல், எவரெஸ்ட் நாவல்,
கிரேட் நாவல், கிரைம் நாவல் போன்ற பாக்கெட் நாவல் பதிப்புகளிலும் இவரது படைப்புகள்
வெளியாகின.
*விவேக்-ரூபலா என்ற
புகழ்பெற்ற துப்பறியும் சோடிப் பாத்திரங்கள் இவரால் உருவாக்கப்பட்டவை.
*இவரது சில படைப்புகள்
ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, பிளாஃப்ட் பதிப்பத்தால் வெளியிடப்பட்டுள்ளன.
*2009 ஆம் ஆண்டுக்கான,
தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
*குறிப்பு*
*இந்தப் புத்தகம்
சங்ககிரி அரசு கிளை நூலகத்தில் இருக்கிறது*
*நன்றிகளுடன்*
'புத்தக ஆர்வலன்'
வ.பெரியசாமி,
M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,
பட்டதாரி ஆசிரியர்
கணிதம் ,
அரசு ஆண்கள்
மேல்நிலைப்பள்ளி,
சங்ககிரி- 637301
இதுவரை உள்ள புத்தகங்களின் மொத்த தொகுப்புகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள DOWNLOAD - ஐ CLICK செய்து பார்த்துக் கொள்ளலாம்.
0 Comments