*தினம் ஒரு புத்தகம்*
நாள்:247
தேதி:08-04-2023
புத்தகம் எண்ணிக்கை:247
புத்தகத்தின் பெயர் : எங்கும் தமிழ் எதிலும்
தமிழ்
பதிப்பகம் ::தமிழ் ஐயா வெளியிட்டகம் பக்கங்கள் :
474
விலை : 250
KANI MATHS Educational Group -ல் இணைந்து கொள்ளலாம்.
*தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக கட்டடக்கலை துறையுடன்
இணைந்து திருவையாறு தமிழ் ஐயா கல்விக்கழகம் நடத்திய அனைத்து உலகத் தமிழ் ஆறாவது
ஆய்வு மாநாடு டெல்லி தமிழ்ச் சங்க அரங்கத்தில் நடைபெற்ற போது கருத்து அரங்கங்களில்
படித்த அளிக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல் ஆகும்
*நாளைக்கு என் மொழி செத்துவிடும் என்றால் இன்றே
நான் செத்து விட நினைக்கின்றேன் என்று சொன்னான் கவிஞன் ஒருவன் தமிழ் பேசி உயிர்
பிழைக்கும் தமிழன் வாழும் புண்ணிய பூமி நம் தமிழ் நிலம்
*அறிவியலின் இயல்பை உணர்ந்தவாறு கூறும் தமிழ்
இலக்கியங்கள் புறநானூறு ,திருக்குறள், காப்பியங்கள் ,சிந்தாமணி ,தேம்பாவணி போன்ற
இலக்கியங்களில் அறிவியல் சிந்தனைகள் பொதிந்து உள்ளன
*வெள்ளி நிறம் உடைய கோள் வெள்ளி எனப்படும்
காலையில் தோன்றும் வெள்ளியை விடிவெள்ளி என்பார் இதை புறநானூறு பாடல் கூறுகிறது
*வெள்ளி தென்குளத்துறைய விலை வயல் பள்ளம் வாடிய
பயனில் காளை
* ஒரு மொழி என்பது தூய ஆற்று நீர் போன்றது அதில்
பிறமொழிச் சொற்கள் வேண்டாத வகையில் வந்து கலப்பது என்பது அந்த ஆற்று நீரில்
மாசுக்கள் வந்து கலப்பது போன்றது எனவே மாசுக் கலவாத ஆற்று நீராக அருந்தமிழை காக்க
வேண்டும்
*ஹைக்கூ என்பது 17 ஒலிக்குறிப்புகள் கொண்ட ஒரு
சிறிய கவிதை இதை உடனே புரிந்து கொள்வதற்காக இந்த ஒலி குறிப்புகளை மூன்று வரிகளில்
அமைத்துக் கொள்கிறார்கள்
*1984 ஆம் ஆண்டு புள்ளிப்பூக்கள் என்ற முதல்
தமிழ் ஹைக்கூ தொகுதியை வெளியிட்டவர் ஓவியக் கவிஞர் அமுத பாரதி
*மொத்தம் இந்த நூலில் 75 ஆய்வுக் கட்டுரைகள்
தமிழ் சார்ந்து உள்ளது
* தமிழ் இலக்கியம் உணர்வுகளை புலப்படுத்தி
காட்டும் கண்ணாடி போன்றது அது பன்முக பரிணாமங்களின் திகழ்கின்றது அப்ப
பரிணாமங்களில் புதினமும் ஒன்று
* தூது இலக்கியங்களில் மிகச்சிறந்த நூலான
தமிழ்விடு தூது தமிழைச் சக்கரவர்த்தி என்று உருவகமாக்கி 10 திசைகளிலும் தமிழ்
செங்கோல் ஆட்சி செய்கிறது என்கிறது
*உலகில் தோன்றிய உயிர்களை ஒழுங்கா பெருகும்
புகழ் தொல்காப்பியனார் 5000 ஆண்டுகளுக்கு முன்பு அறிவு நெறியால் ஆறாக பகுத்தார்
அவ்வகையில் ஆறாவது அறிவாகிய பகுத்தறிவு பெற்ற மக்கள் மாந்தர் என பெற்றனர்
* மக்கள் தாமே ஆறு அறிவுயிரே-தொல்காப்பியம் 1532
*கண்டிப்பாக அனைவரும் படிக்க வேண்டிய நல்ல
நூலாகும்
*தமிழைப் பற்றி பல்வேறு தகவல்களை தெரிந்து கொள்ள
இந்த நூல் கலைக்களஞ்சியமாக உதவும்
*குறிப்பு*
*இந்தப் புத்தகம் சங்ககிரி அரசு கிளை நூலகத்தில்
இருக்கிறது*
*நன்றிகளுடன்*
'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,
M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL.,
NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,
பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,
சங்ககிரி- 637301
0 Comments