*தினம் ஒரு புத்தகம்*
நாள்:223
தேதி:15-03-2023
புத்தகம் எண்ணிக்கை:223
புத்தகத்தலைப்பு: திருப்புக்கொளியூர் அவிநாசி
வரலாறு
ஆசிரியர்:இந்து சமய அறநிலையத்துறை
**அவிநாசி கோவிலிலே இப்புத்தகம் கிடைக்கிறது
**தேவாரப் பதிகங்கள் பாடப்பட்ட காலத்தில்
திருப்புக்கொளியூர் என்று வழங்கப்பட்ட இந்த சிவஸ்தலம் தற்போது அவிநாசி என்று
கூறப்படுகிறது.
** கொங்கு சிவதலங்களில் ஒன்று
** இக்கோவில் சுமார் 1.5 ஏக்கர் பரப்பளவில்
கிழக்கு திசையில் 7 நிலை ராஜ கோபுரத்துடன் நம்மை வரவேற்கிறது.
**கோவிலின் உள்ளே இரண்டு பிரகாரங்கள் உள்ளன. ராஜ
கோபுர நுழைவு வாயிலில் இரண்டு பக்கமும் நர்த்தன கனபதியின் சிற்பங்கள் உள்ளன.
**உள்ளே நுழைந்தவுடன் உள்ள மண்டபத்தின்
தூண்களில் வீரபத்திரர், ஊர்த்துவ தாண்டவர் மற்றும் காளியின் சிற்பங்கள்
காணப்படுகின்றன.
** மண்டபத்தில் இருந்து உள் பிரகாரத்தில்
நுழைந்தால் மூலவர் அவிநாசியப்பர் சந்நிதி இருக்கிறது. மூலவர் சுயம்பு மூர்த்தியாக
எழுந்தருளியுள்ளார்.
**மூலவர் கர்ப்பக்கிரகத்தைச் சுற்றி உள்ள
பிரகாரத்தின் வடமேற்கு கோஷ்டத்தில் முருகன் சந்நிதியும், வடகிழக்கு கோஷ்டத்தில்
காரைக்கால் அம்மையார் சந்நிதியும் அமைந்துள்ளன.
**உள் பிரகாரத்தில் 63 நாயன்மார்கள்
சிற்பங்களும் வைக்கப்பட்டு இருக்கின்றன.
**ஸ்ரீகாலபைரவர் சந்நிதியும் இத்தலத்தில்
சிறப்பிற்குரியது.
**நடராஜர் மண்டபத்திலுள்ள ஐம்பொன்னால் ஆன
நடராஜர் திருமேனி எல்லோரையும் கவர்ந்து இழுக்கும்.
**இத்தலத்தில் பிரம்மா 100 ஆண்டுகளும்,
இந்திரனுடைய ஐராவதம் என்னும் யானை 12 ஆண்டுகளும், தாடகை 3 ஆண்டுகளும், நாகக் கன்னி
21 மாதங்களும் வழிபாடு செய்ததாக ஐதீகம்.
**இறைவி கருணாம்பிகை சந்நிதி மூலவர்
அவிநாசியப்பர் சந்நிதியின் வலதுபுறம் அமைந்துள்ளது. .
**அவிநாசி ஒரு திருப்புகழ் தலமாகும்.
**குமார சுப்பிரமணியர் உற்சவ மூர்த்தமும்
இவ்வாலயத்தில் உள்ளது. அருணகிரிநாதர் தனது திருப்புகழில் இவ்வாலய முருகர் மீது
மூன்று பாடல்களைப் பாடியுள்ளார்.
**இந்த ஆலயத்தின் மூன்று தீர்த்தங்கள் 1. காசிக்
கங்கை(கிணறு), 2. நாககன்னிகை தீர்த்தம் (கிணறு) 3. ஐராவத தீர்த்தம் எனபனவாகும்.
தலமரமாக மாமரம் விளங்குகிறது.
** தமிழ்நாட்டிலுள்ள மிகப் பெரிய கோவில்
தேர்களில் அவிநாசிக் கோவில் தேரும் ஒன்றாகும்.
** சுந்தரர் இத்தலத்திற்கு வருகை தந்த போது
முதலையால் விழுங்கப்பட்ட சிறுவனை பதிகம் பாடி மீண்டும் உயிர் பிழைக்க வைத்தார்
**முதலை வாய்ப்பிள்ளையை அழைத்த திருவிளையாடல்
வருடந்தோறும் பங்குனி மாதத்தில் உற்சவமாக கொண்டாடப்படுகிறது.
**வைகாசி விசாகமும், 63 மூவர் விழாவும் மற்ற
சிறப்பான விழாக்களாகும்.
*நன்றிகளுடன்*
'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,
M.A.,M.A.,M.A.,M.A.,M.A.,M.COM.,M.SC.,M.SC.,M.PHIL.,M.ED.,M.PHIL.,NET(T).,NET(EDN).,NET(PSY).,TET.,CTET.,CLIS.,
பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,
சங்ககிரி- 637301
0 Comments