*தினம் ஒரு புத்தகம்*
நாள்:221
தேதி:13-03-2023
புத்தகம் எண்ணிக்கை:221
புத்தகத்தின் பெயர்: வாழ்க்கையை ஒரு வழிபாடு
ஆசிரியர் :வெ.இறையன்பு
பதிப்பகம் :விஜயா பதிப்பகம்
பக்கங்கள் :194
விலை :200
*வாழ்க்கையை ஒரு வழிபாடு நூலில் வாழ்க்கையின்
மகத்துவத்தை ஒரு வாழ்க்கையை எப்படி கொண்டாடி மகிழ்வது என்பதையும் மிக அருமையாக
ஆழமாக அவருடைய நடையில் இறையன்பு அளித்துள்ளார்
*இந்தப்புத்தகத்தில் மொத்தம் 25 தலைப்புகளில்
கட்டுரைகள் உள்ளன எனக்கு மிகவும் பிடித்த தலைப்பு இல்லறமும் அறமே மற்றும்
கல்வியும் கடவுளும் தன்மையும் ஆகும்
*காற்றிலும் இறைமை
கடலிலும் இறைமை
முற்றிலும் இறைமை
முள்ளிலும் இறைமை
ஒளியிலும் இறைமை
ஒளியிலும் இறைமை
இறைமை என்பது இருத்தல் முழுமையும் மனிதன்
என்பவன் இறைமை சுட்ட சுருக்கொப்பம்
*ஒவ்வொரு மனிதனிடமும் புத்தனும்உண்டு எத்தனும்
உண்டு? விருப்பமானவரை வெளிக்கொணர்கின்றனர் வேண்டியதைதேர்ந்தெடுக்கின்றனர்
*முதல் குழந்தை பிறக்கும் போது ஒரு தாயும்
பிரசவமாகிறாள்என்றால் ஓஷோ
*குழந்தை மனிதனின் தந்தை என்றார் வோட்ஸ்வொர்த்
* தாயும் தந்தையும் ஒரு
குழந்தையைப்பிறப்பிக்கிறார்கள் ஆனால் ஒரு குழந்தை தாய் தந்தை இருவரையும்
பிரசவிக்கிறது
*உணவை உரிய முறையில் உண்டால் அது உபாயம் வழி
தவறிவிட்டால் அதுவே அபாயம்
*இறைமை மொழிகளைக் கடந்து புலன்களைத்தாண்டி
எண்ணங்களை மீறியது
*மௌனத்தை காட்டிலும் சிறந்த மொழி எது அதனிலும்
மகத்துவம் பெற்ற உரையாடல் அது
*கவலைகள் அற்ற மனம் வேண்டும் ஆசைகள் அற்ற
இதயத்துடன் பயிற்சியை தொடங்க வேண்டும்
*கருணையின் மூலமே கடவுளை அடையாளம் அன்பின் மூலமே
கருணையை உணரலாம்
*இந்தப்புத்தகம் படிக்க படிக்க மனம் அமைதி நிலைக்கு
சென்று விடுகிறது மனதில் ஏதோ ஒரு வித அமைதி நிலை ஏற்படுகிறது கண்டிப்பாக அனைவரும்
படிக்க வேண்டிய நல்ல புத்தகமாகும்
*இந்தப்புத்தகத்தில் ஜென் தத்துவங்கள்,
கதைகள்,ராமகிருஷ்ணர்,விவேகானந்தர் ,காந்தி ,ஷேக்ஸ்பியர் மற்றும் பல அறிஞர்களின்
கருத்துக்களையும் தத்துவங்களையும் இந்நூலில் ஒவ்வொரு கட்டுரையிலும் கொடுத்துள்ளார்
இதுவும் இதற்கு ஒரு தனி சிறப்பாகும்
*நன்றிகளுடன்*
'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,
M.A.,M.A.,M.A.,M.A.,M.A.,M.COM.,M.SC.,M.SC.,M.PHIL.,M.ED.,M.PHIL.,NET(T).,NET(EDN).,NET(PSY).,TET.,CTET.,CLIS.,
பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,
சங்ககிரி- 637301
0 Comments