*தினம் ஒரு புத்தகம்*
நாள்:208
தேதி:28-02-2023
புத்தகம் எண்ணிக்கை:208
புத்தகத்தின் பெயர் : வியப்பூட்டும் வழிபாடுகள்
ஆசிரியர் : கவிஞர் பெ. பெரியார் மன்னன்
பக்கம் : 130
விலை : 155
பதிப்பகம் : விவேகா பதிப்பகம்
*இந்நூல் வாழப்பாடி மற்றும் சுற்றுப்புற
கிராமங்களில் உள்ள கிராமிய கோயில்கள் குறித்த தகவல்கள் அடங்கிய அரிய ஆவணம் என்றால்
அதுமிகை ஆகாது
*நாட்டார் வழிபாடு என்பது தொன்று தொட்டு வரும் நமது மண்ணும் பண்பாடும் சார்ந்த நமது முறையாகும்
* வைதீக வழிபாட்டு முறைகள் செழித்தோங்கிய
காலத்திலும் நாட்டார் வழிபாடுகள் தமது தனித்துவத்தை இழக்காமல் இன்று வரை
கிராமங்களில் தொடர்ந்து வருகிறது
*நமது பண்பாட்டின் வேர்கள் ஆழமாக ஊடுருவி மக்கள்
மனதில் காலங்காலமாக வேரூன்றி வெளிப்பட்டிருப்பதையே இது காட்டுகிறது
*52 கிராமிய கோயில்கள் பற்றியும் அவற்றின்
வினோதமான வழிபாட்டு முறைகள் பற்றியும் அவற்றின் தனித்துவம் குறித்தும் எளிய
நடையில் எழுதியுள்ளார்
*ஆண்கள் மட்டும் வழிபடும் கோயில்
*கல்வெட்டுக்கு கோயில் கட்டி வழிபடும் கோவில்
*துறவிகளுக்கு கோவில் கட்டி வழிபாடு
*ராமருக்கு பல்லக்கு தூக்கி வழிபடும் கோவில்
* அம்மன் கோயிலில் இஸ்லாமியர் சிலை வழிபாடு
*வவ்வால்களுக்கு வழிபாடு செய்யும் கோவில்
*பேளூர் சிறுவர்களின் மார்கழி மாத வழிபாடு
* நேர்த்திக்கடன் தீர்க்கும் வழிபாடு
*நோய் தீர்த்த பூசாரிக்கு கோவில்
*காலை தாண்டும் வழிபாடு சுவாமி
*சுவாமி சிலைகளுக்கு விருந்து வைத்து வழிபாடு
*முன்னோர்களின் வழியில் பழமையும் பாரம்பரியம்
போற்றி பாதுகாக்கும் கிராமப்புற மக்களின் வழிபாட்டு முறைகள் பற்றிய தகவல்கள் உள்ளன
* இந்த நூலில் சேலம் மாவட்டத்தில் வாழப்பாடி
சுற்றியுள்ள பகுதியிலுள்ள அரிய கோயில்கள் பற்றிய அரிய தகவல்களை தொகுத்து
எழுதப்பட்ட இந்த நூல் ஒரு வரலாற்று பொக்கிஷம் ஆகும்
*நன்றிகளுடன்*
'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,
M.A.,M.A.,M.A.,M.A.,M.A.,M.COM.,M.SC.,M.SC.,M.PHIL.,M.ED.,M.PHIL.,NET(T).,NET(EDN).,NET(PSY).,TET.,CTET.,CLIS.,
பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,
சங்ககிரி- 637301
0 Comments