தினம் ஒரு புத்தகம்
நாள்:261
தேதி:22-04-2023
புத்தகம் எண்ணிக்கை:261
புத்தகத்தின் பெயர்:தமிழ்க்களஞ்சியம்
ஆசிரியர்:
தமிழ் இனியன்
விலை:250
பக்கங்கள்:858
பதிப்பகம்:அறிவுக்கடல்
*பொது தமிழ் மற்றும் தமிழ் இலக்கிய வரலாறு உள்ளடக்கிய
தமிழ்க்களஞ்சியம் இது அறிவுக்கடல் பதிப்பகத்தின் வெளியீடு ஆகும்
*இந்தப்புத்தகத்தின் ஆசிரியர் தமிழ்இனியன்
*இந்தப்புத்தகம் போட்டித்தேர்வு
எழுதுபவர்களுக்கு சிறந்த புத்தகம் ஆகும்
*டி என் பி எஸ் சி, டிஆர்பி ,யுஜிசி போன்ற
தேர்வு எழுதுபவர்களுக்கு வழிகாட்டும் புத்தகம் ஆகும்
*ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள புதிய
பாடத்திட்டத்தில் உள்ள தகவல்கள் தொகுத்து தரப்பட்டுள்ளது
*தமிழ் அறிஞர்கள் மற்றும் தமிழ் தொண்டு மற்றும்
இலக்கணம் ஆகிய அனைத்து தகவல்களும் உள்ளடக்கியது
*இந்தப்புத்தகத்தில் இலக்கியம் சார்பாக 10
தலைப்புகளும் தமிழ் அறிஞர்களும் தமிழ்த்தொண்டுகளும் சார்பாக 21 தலைப்புகளும்
உள்ளது
* மேலும் கூடுதல் தகவல்களும்
கொடுக்கப்பட்டுள்ளது
*இலக்கணம் சார்பாக 5 இலக்கணங்களும் கூடுதலாக ஒரு
மதிப்பெண் வினாக்களும் கொடுக்கப்பட்டுள்ளது
* tnpsc தமிழ் தகுதித்தேர்வு எழுதுபவர்களுக்கு
மிகவும் உதவியாக அது குறித்த 21 தலைப்புகளில் தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளது
*இந்த புத்தகத்தில் ஒவ்வொரு நூல்கள் மற்றும் புலவர்கள்
பற்றி ஒரு வரி தகவலாக முதலில் தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது
*தமிழுக்கு இது ஒரு சிறந்த களஞ்சியம் ஆகும்
*தமிழ் சார்பாக எந்தத்தேர்வு எழுதினாலும்
இந்தப்புத்தகத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் அந்த அளவுக்கு தகவல்கள்
கொடுக்கப்பட்டுள்ளது
*உதாரணமாக
*திருக்குறளில் இல்லாதது இல்லை சொல்லாததும்
இல்லை
*பதினொன் கீழ்க்கணக்கு நூல்களில் அதிக
பாடல்களும் அடிகளையும் கொண்ட நூல் திருக்குறள்
* திருக்குறள் தமிழில் எழுதப்பட்ட உலக பனுவல்
*அகத்தியர் சங்கம் வைத்து தமிழ் வளர்த்ததாகக்
கூறும் செப்பேடு - வேள்விக்குடிச் செப்பேடு
*அகநானூற்றில் 1,3,5,7 என ஒற்றைப்படை எண் கொண்ட
திணைப்பாடல்கள் – பாலைத்திணை
* அகநானூற்றில் பாடல் தொடரால் பெயர் பெற்ற
புலவர்கள் – நோய்பாடியார், ஊட்டியார்
*அகநானூற்றின் நூல் முழுமைக்கும் உரை
எழுதியவர்கள் ,– வேங்கடசாமி நாட்டார் , இரா.வேங்கடாசலம்பிள்ளை
*அகநானூற்றுக்கு வழங்கும் வேறு பெயர் -
நெடுந்தொகை
*அகராதி நிகண்டு ஆசிரியர் – சிதம்பரம் வனசித்தர்
*அகலிகை வெண்பா நூலாசிரியர் – சுப்பிரமணிய
முதலியார்
*அசோகன் காதலி நாவலாசிரியர் - அரு.ராமநாதன்
*ஆசாரக்கோவை ஆசிரியர் - பெருவாயின் முள்ளியார்
* ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள்
தாழியின் சிறப்பு- – கி.மு.800 காலத் தமிழ் எழுத்துக்கள் இடம்பெற்றது.
*ஆபுத்திரனுக்கு அட்சய பாத்திரம் தந்தவர் -
சிந்தாதேவி
*இசை ஆராய்ச்சிக்குப் பெருந்துணை புரிந்த உரை –
அடியார்க்கு நல்லார் உரை
*இந்தியா எனும் இதழ் நடத்தியவர் - பாரதியார்
*இராமலிங்க அடிகளின் பாடல் தொகுப்பு -
திருவருட்பா
*குறிப்பு*
*இந்தப் புத்தகம் சங்ககிரி அரசு கிளை நூலகத்தில்
இருக்கிறது*
*நன்றிகளுடன்*
'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,
M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL.,
NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,
பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,
சங்ககிரி- 637301
0 Comments