*தினம் ஒரு புத்தகம்*
நாள்:215
தேதி:07-03-2023
புத்தகம் எண்ணிக்கை:215
புத்தகத்தின் பெயர்: கண்ணதாசன் கவிதைகளில்
தத்துவம்
ஆசிரியர் பெயர் : பெ.இளவரசன் பக்கங்கள் : 96
விலை : 24
பதிப்பகம் : கண்ணதாசன் பதிப்பகம்
*எழுத்து என் ஆசையின் உச்சம் ,அதுவே என்
நோக்கம், எப்படி எழுதுகிறோம் என்று நான் எண்ணம் பார்த்ததில்லை இது இறைவன் கொடுத்த
பிச்சை என்கிறார் கவியரசு கண்ணதாசன்
*கண்ணதாசன் உள் ஒன்று வைத்து புறம் ஒன்று
பேசாதவர்
*நெஞ்சில் பட்டதை நேரில் சொல்லக்கூடியவர் அதே
நேரத்தில் பிறர் நெஞ்சம் நோகாத வாரும் உரையாடும் இயல்புடையவர்
*வாய்மை வழி நின்று நாட்டு மக்களுக்கு நல்ல வழி
காட்டுவது அரசியல்வாதிகளின் பணியாகும்
*வாழ்க்கையை வசந்தமாக்க காதல் தேவை என்கிறார்
பெண்களை விட்டென்ன பேரின்பம் வழிகாட்டும்
கண்களை விட்டென்ன கடவுள் நெறி
* எது திருப்பினும் என்ன நடப்பினும் இளமை
திரும்பிடுமோ ஒரு தேதி நடந்திட தேதி நடந்திட திரையும் விழுந்திடுமோ ..?என்று அவரே
கேட்டுக்கொள்கிறார்
* நல்ல எதிர்கால நம்பிக்கையே அவருக்கு தெம்பும்
திறனும் அளித்தன ஊக்கமும் உற்சாகமும் ஊட்டின எனவே தான்
என்னடா துன்பம் அதை
எட்டி உதை வாழ்ந்து பார்
எப்போதும் உன்னை நம்பி
என்று ஆணையிடுகிறார்
*வீடு வரை உறவு
வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை
கடைசி வரை யாரோ.?
என்று பாடி நிலையாமை தத்துவத்தை மிக எளிய
சொற்களில் அனைவருக்கும் புரியும்படி விளக்கியுள்ளார்
*இறைவன் எங்கும் உள்ளான் என்பதை கோழிக்குள் முட்டை வைத்து முட்டைக்குள் கோழி
வைத்து வாழைக்குள் கன்று வைத்தான் ஒருவன் அந்த ஏழையின் பேர் இறைவன்
என்று கூறுகிறார்
*கண்ணதாசன் தத்துவக் கருத்துக்களை படிக்க படிக்க
மனதிற்குள் ஒரு அமைதி ஏற்படுகிறது
*நன்றிகளுடன்*
'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,
M.A.,M.A.,M.A.,M.A.,M.A.,M.COM.,M.SC.,M.SC.,M.PHIL.,M.ED.,M.PHIL.,NET(T).,NET(EDN).,NET(PSY).,TET.,CTET.,CLIS.,
பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,
சங்ககிரி- 637301
0 Comments