தினம் ஒரு புத்தகம்
நாள்:286
தேதி:16-05-2023
புத்தகம் எண்ணிக்கை:286
புத்தகத்தின் பெயர் : இந்திய விடுதலையை முன்னெடுத்த புரட்சிகள்
ஆசிரியர் :பேராசிரியர் ந.சஞ்சீவி பக்கங்கள் :360
விலை: 160
பதிப்பகம் : பூவிழி பதிப்பகம்
இணைந்து கொண்டு ஆசிரியர்கள் pdf ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
*18 ஆம் நூற்றாண்டின் பின் பாதையில் அயலாருக்கு தலை வணங்க
மறுத்து நெஞ்சுரத்துடன் போரிட்டு மாண்ட தமிழக வீர மறவர்கள்
நெற்கட்டான் சேவல் பூலித் தேவர்
கம்மந்தான் கான் சாகிபு
சிவகங்கை மருது சகோதரர்கள் ஆகியோர்கள் பற்றி இந்நூல் கூறுகிறது
*பூலித்தேவர் நெற்கட்டான் செவலை தலையிடும் தலைமையிடமாகக்
கொண்டு ஆண்டு வந்த பாளையக்காரர்
*இந்திய விடுதலை வரலாற்றில் வெள்ளையனே வெளியேறு என்று 1755 ஆம்
ஆண்டு வீர முழக்கமிட்டவர்
*விடுதலைப் போரான சிப்பாய் கழகத்திற்கு 1857 முன்னோடியாக
திகழ்ந்தவர்
*மருதநாயகம் பிள்ளை என்றழைக்கப்பட்ட முகமது யூசுப்
கான்ஆர்க்காட்டு படைகளில் போர் வீரராகவும், பிற்காலத்தில் கிழக்கிந்திய படைகளுக்கு
படைத்தலைவராகவும் விளங்கினார்.
*1725 ஆம் ஆண்டு இராமநாதபுரம் மாவட்டம் பனையூரில் சைவவெள்ளாளர்
குடும்பத்தில் பிறந்தார்.
*ஆங்கிலேயரும், ஆர்க்காட்டு நவாப்புகளும் தமது எதிரிகளான
தமிழகத்தினைச்சேர்ந்த பாளையக்காரர்களுக்கு எதிராக மருதநாயகத்தினை போரில் ஈடுபடச்செய்தனர்.
*பிற்காலங்களில் மதுரை நாயக்கர்களின் ஆட்சி முடிவடையும்
காலகட்டத்தில் மதுரையை ஆளும் அதிகாரத்தினை ஆங்கிலேயர் இவருக்கு அளித்தனர்.
*தம்
வாழ்நாளின் இறுதியில் கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சியாளர்களுக்கு எதிராக
செயல்பட்டார்.
*அக்டோபர் 15, 1764 ஆம் ஆண்டில் மதுரை சம்மட்டிபுரம் பகுதியில்
ஆங்கிலேயர்களால் தூக்கிலிப்பட்டார் மருதநாயகம் பிள்ளை.
*மருது பாண்டியர் எனப்படும் மருது சகோதரர்கள் ஆங்கிலேயரை
எதிர்த்து இந்தியாவிலேயே முதன்முதலாக தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டத்தை
தொடங்கியவர்கள்.
*ஆங்கிலேயரைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்ட 1785 முதல் 1801
இறுதி வரை ஆயுதம் தாங்கிப் போராடினார்கள்.
*பெரிய மருது, சின்ன மருது எனப்படும் இவர்கள் ஆங்கிலேயருக்கு
எதிராகப் போராடிய அனைத்திந்திய குழுக்களையும் ஒன்றிணைத்துத் திரட்ட முயன்ற
போதுதான் ஆங்கிலேயரின் அதிருப்திக்கும் கோபத்திற்கும் ஆளானார்கள்.
*இவர்களது களம் சிவகங்கைச் சீமையைச் சேர்ந்த காளையார்கோயில்
ஆகும்.
*ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியரால் 1801 அக்டோபர் 24 இல்
திருப்பத்தூரில் இவ்விருவரும் தூக்கிலிடப்பட்டனர்.
*மருது
சகோதரர்கள் நினைவாலயம் காளையார் கோவிலில் அமைந்துள்ளது
*குறிப்பு*
*இந்தப் புத்தகம் சங்ககிரி அரசு கிளை நூலகத்தில் இருக்கிறது*
'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,
M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,
பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,
சங்ககிரி- 637301
இதுவரை உள்ள புத்தகங்களின் மொத்த தொகுப்புகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள DOWNLOAD - ஐ CLICK செய்து பார்த்துக் கொள்ளலாம்.
0 Comments