*தினம் ஒரு புத்தகம்*
நாள்:136
தேதி:9-12-2022
புத்தகம் எண்ணிக்கை:136
புத்தகத்தலைப்பு: விடியலைத்தேடும் பூபாளங்கள்
ஆசிரியர்:சு.செந்தில்ராஜா
கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான
KANI MATHS Educational Group -ல் இணைந்து கொள்ளலாம்.
** நான் கல்லூரியில் படிக்கும் போது எனக்கு இளையவர் செந்தில் ராஜா நல்ல நண்பர்
** படித்தது வரலாறு என்றாலும் தமிழ் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர்.அவரது முதல் கவிதை நூல் இது
** சிலருக்கு ஊரில் உறவினர்கள் இருப்பார்கள் எனக்கு ஊரே உறவினர் என்ற நன்றியுரை மூலம் இவரின் பழகும் குணம் தெரிகிறது
** அனைவருடனும் மிகுந்த அன்புடன் பழகுபவர்.
** பெரும்பாலும் காதல் கவிதைகளே எழுதும் நிலையில் சமூகம் சார்ந்த ஆர்வம் இவரது கவிதைத்தலைப்புகளிலே தெரிகிறது
** முதியோர் இல்லம்,குழந்தை தொழிலாளி,டாஸ்மாக் ஒழிப்பு,விதவை,விலைமகள் ,பொங்கல் போன்றவற்றை படிக்கும் போது இவரின் சமூக ஆர்வம் தெரிகிறது
** மிக அழகான எளிதான வலிமையான கவிதை வரிகள் மனதை ஈர்க்கிறது
** மனிதநேயம் தவழும் சமூக அக்கறையுள்ள கவிதை வரிகள்
** முதியோர் இல்லம்**
விலங்குகளால்
ஒதுக்கிவைக்கப்பட்ட
மனிதர்களின்
மறுவாழ்வு மையம்...!
** விலை மலர்கள்**
எத்தனையோ
வாலிப வண்டுகளின்
முதல்பகல்கள்
எங்களோடு முடிந்தன..!
** குழந்தை தொழிலாளர்கள்**
காவிரியில் தண்ணீர் வற்றினாலும்
இவர்கள் கண்களில்
கண்ணீர் வற்றுவதில்லை..!
*நன்றிகளுடன்*
'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,
M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,
பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,
சங்ககிரி- 637301
இதுவரை உள்ள புத்தகங்களின் மொத்த தொகுப்புகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள DOWNLOAD - ஐ CLICK செய்து பார்த்துக் கொள்ளலாம்.
0 Comments