*தினம் ஒரு புத்தகம்*
நாள்:143
தேதி:16-12-2022
புத்தகம் எண்ணிக்கை:143
புத்தகத்தலைப்பு:இதுவரையில் நான்.
ஆசிரியர்: வைரமுத்து
KANI MATHS Educational Group -ல் இணைந்து கொள்ளலாம்.
*வைரமுத்து அவர்கள் இந்த புத்தகத்தை எழுதி முடிக்கும் போது அவருக்கு வயது இருபத்தி எட்டு மட்டுமே.
*வைரமுத்து அவர்கள் இது ஒரு இளைஞனின் சுயசரிதை கிடையாது சுயம் மட்டுமே என்று முன்னுரையிலேயே கூறி விடுகிறார்.
*வைரமுத்து பிறந்தது முதல் தன் பள்ளிப் பருவம், கல்லுரி பருவம், கல்லூரி முடித்து அரசாங்க வேளையில் சேர்வது. தான் காதலித்த தன் பேராசிரியரின் மகளை இரு தரப்பு பெற்றோர்கள் எதிர்த்தும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து வாடகை வீட்டில் வாழ்ந்து... பிறகு பாரதிராஜாவிடம் தன் முதல் பாடலான 'பொன்மாலை பொழுது' பாடல் எழுதிய தினமும் தன் மூத்த மகன் பிறந்த தினமும் ஒன்றாக அமைந்த மகிழ்ச்சியோடு நிறைவடைகிறது இப்புத்தகம்.
* வைரமுத்துவின் தன்னம்பிக்கை ஊட்டும் கவித்துவ வரிகள் இந்தப்புத்தகத்தை மெருகூட்டுபவை
* எந்த ஒரு உயர்ந்த நிலைக்கு வர கடின உழைப்பு விடாமுயற்சி தேவை என்பதை உணர்த்துகிறது.
* இளம் பருவம் முதல் நூல்கள் வாசிப்பும் நூலக வாசிப்பும் வைரமுத்தை பண்படுத்தியுள்ளது.
*நன்றிகளுடன்*
'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,
M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,
பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,
சங்ககிரி- 637301
இதுவரை உள்ள புத்தகங்களின் மொத்த தொகுப்புகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள DOWNLOAD - ஐ CLICK செய்து பார்த்துக் கொள்ளலாம்.
0 Comments