*100- வது நாள்,100- வது புத்தகம்**
அனைவருக்கும்
வணக்கம் கடந்த நூறு நாட்களாக புத்தக விமரிசனப்பதிவை படித்து பாராட்டி
ஊக்கப்படுத்திய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்
*தினம் ஒரு
கல்விசார்ந்த புத்தகம்*
நாள்:100
தேதி:03-11-2022
புத்தகம்
எண்ணிக்கை:100
புத்தகத்தலைப்பு:
சார்லின் சாப்ளின்
ஆசிரியர்: யூமா
வாசுகி
மேலும் கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான
இணைந்து கொண்டு ஆசிரியர்கள் pdf ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
**ஏப்ரல் 16, 1889ம் ஆண்டு ‘சார்லஸ் சாப்ளின் - ஹன்னா சாப்ளின்’ தம்பதிக்குமகனாக
பிறந்தார்.
**சாப்ளினின் தந்தை குடிப் பழக்கத்தால் சாப்ளினின் பன்னிரண்டாவது
வயதில் இறந்தார். இதனால் இவர் தாயும் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாகி மன நலம்
பாதிக்கப்பட்டார். பின்பு இவரும் 1928ஆம் ஆண்டில் இறந்தார்.
**மேக்கிங் எ லிவிங்’ என்ற தனது முதல் திரைப்படத்தில் ஒரு கருப்பு
கோட்டும், பெரிய தொப்பியும், சிறு மீசையுடன் நடித்தார் பின்னாளில் அதுவே சாப்ளினின்
அடையாளமானது.
**சார்லின் சாப்ளின் சிறப்பான நடிப்புக்காக எலிசபெத் ராணியார்
அவருக்கு 'சர்' பட்டம் வழங்கி கவுரவித்தார்.
**சாப்ளின் இருமுறை சிறப்பு ஆஸ்கார் விருதினைப் பெற்றுள்ளார்.
**சாப்ளினின் கண்கள் நீல நிறத்தில் இருந்தன. கருப்பு வெள்ளைப்
படங்களில் மட்டுமே அவரைப் பார்த்திருந்த ரசிகர்கள், அவரை நேரில் பார்க்கும் பொழுது
பெரிதும் வியப்புற்றனர்.
**சாப்ளினின் புகழினால் சாப்ளினைப் போல் தோற்றம் அளிப்போருக்கான
போட்டிகள் பல நடத்தப்பட்டு வந்தன. சாப்ளின் ஒரு முறை அப்போட்டி ஒன்றில் ரகசியமாகப்
பங்கு பெற்றார்.இதில் இவரால் மூன்றாம் பரிசையே வெல்ல முடிந்தது
**சார்லின் சாப்ளின் கடைசி திரைப்படங்கள் -"தி கிங் இன் நியூ
யார்க்" (1957) , "தி சாப்லின் ரெவ்வூ" (1959) மற்றும் சோ·பியா லாரென்.
**யுத்த வெறி பிடித்த ஹிட்லரை கிண்டலடித்து வந்த சார்லிசாப்ளின்
இயக்கி நடித்த முதல் பேசும் படம் The great dictator. இந்த படத்தை ஹிட்லர் இருட்டில்
தனியாளாக அமர்ந்து மூன்று நாட்கள் இடைவிடாமல் திரும்பத் திரும்ப பார்த்துக்கொண்டே
இருந்தாராம்
**சார்லின் சாப்ளின் அமுத மொழிகள்**
**ஒரு மனிதனின் உண்மையான சொரூபம் ; அவன் குடித்திருக்கும் போது
தெரியவரும்.
**நாம் ரொம்ப அதிகமா யோசிக்கறோம்; ரொம்ப குறைவா உணர்கிறோம்.
**இவ்வுலகத்தில் ஒவ்வொருதருக்கும் இடமிருக்கு ; எல்லோருக்கும் கொடையளிக்கும் அளவுக்கு
வளமையானது இவ்வுலகம். வாழ்க்கைக்கான பாதையும் அழகா இருக்கு; ஆனால் வழியைத்தான் தொலைத்துவிட்டோம்.
**பேராசை மனிதன் மனத்தை விஷமாக்குகிறது; தன்னைச்சுற்றி வெறுப்பெனும்
வேலியமைத்துக் கொள்கிறான். முட்டாள்தனமான நடவடிக்கையால் துக்கங்களை தேக்கி
வைக்கிறான். வேகம் வளர்த்துகொண்டு அதில் நம்மை அடக்கிவிட்டோம்.
**இயந்திரங்கள் அளவுக்கதிகமான நம் தேவையை பூர்த்திசெய்கிறது. அறிவு நம்மை சிடுமூஞ்சியாக்கிவிட்டது.
நம் புத்திசாலித்தனம் மென்மை இழந்து பண்பற்றதாகிப்போனது.
**எந்திரங்களை காட்டிலும் நமக்கு மனிச தன்மையும்; புத்திசாலிதனத்தை காட்டிலும் நமக்கு
நல்ல பண்பும், இனிய குண நலன்களும் தேவை. இவைகள் இல்லை என்றால் வாழ்க்கை
போராட்டமாகவும்; எதுவும் இல்லாமலும் போகும்.
**மதிப்புடைய வாழ்கையை தேடி கண்டுபிடிக்கலாம்... உன் புன்சிரிப்பால்.
** ஒழுங்கீனமான உலகத்தில் எதுவும் நிரந்தரமில்லை;
** நம்முடைய தொல்லைகளும் தான்.
வாழ்க்கை அழகானதும்
அற்புதமானதும் கூட ஜெல்லி மீன் போல..
**நீ எப்போதும் வானவில்லை காண முடியாது உன் பார்வை கீழ் நோக்கியே
இருந்தால்.
**எப்போதும் மழையில் நனைந்த படியே நடக்கப் பிடிக்கிறது. என் கண்களில்
கண்ணீரை யாரும் பார்த்துவிட முடியாதே.
**1977 ஆம் ஆண்டு கிறிஸ்மஸ் தினத்தன்று தனது 88-ஆவது வயதில் காலமானார்
** சாப்ளினை பார்த்து சிரிக்க மட்டுமே செய்த உலகம் அன்று அவரை
பார்த்து முதன் முறையாக அழுதது
**உலகில், கடைசி மனிதனின் முகத்தில் சிரிப்பு இருக்கும் வரை, அதில் சாப்ளின் உயிர்
வாழ்ந்துகொண்டுதான் இருப்பார்.
*தனது வேதனை, மற்றும் வலிகளைப் புன்னகையாக மாற்றி,சந்தோஷத்தை மட்டுமே நமக்கு கொடுத்த
ஒரே கலைஞன் சார்லி சாப்ளின் மட்டுமே*
*நன்றிகளுடன்*
'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,
M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,
பட்டதாரி ஆசிரியர்
கணிதம் ,
அரசு ஆண்கள்
மேல்நிலைப்பள்ளி,
சங்ககிரி- 637301
இதுவரை உள்ள புத்தகங்களின் மொத்த தொகுப்புகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள DOWNLOAD - ஐ CLICK செய்து பார்த்துக் கொள்ளலாம்.
0 Comments