2022 – 2023 ஆம் கல்வியாண்டில் 8 ஆம் வகுப்பிற்கு தமிழ் பாடத்திற்கு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு August மாதம் 2 வாரத்திற்கான Lesson plan நமது www.kanimaths.com இல் subject wise தொகுக்கப்பட்டு pdf மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
 
மேலும் கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான
இணைந்து கொண்டு ஆசிரியர்கள் pdf ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
வகுப்பு : 8
பாடம் : தமிழ்
நாள்  : 08.08.2022 - 12..08.2022
தலைப்பு :
- நோயும் மருந்தும்
 - வருமுன் காப்போம்
 
பாடத்தின் தன்மை :
- அறம் சார் நெறியினை மட்டும் விளக்குவதால், தனித்தவகையைச் சார்ந்தது.
 - உடல்நலம் பேணுதலை மட்டும் விளக்குவதால், தனித்தவகையைச் சார்ந்தது.
 
கற்கும் முறை :
- ஆசிரியர் பாடலைப் பாட அதனைக் கேட்டு மாணவர்கள், தானே கற்றல்.
 
துணைக் கருவிகள் :
- மின்னட்டை
 - விளக்கப்படம்
 - மடிக்கணினி
 - பொருத்தட்டை
 - காட்சிப்படம்
 - மின்அட்டை
 
பாட அறிமுகம் :
- நோய் மற்றும் மருந்து குறித்து நீவிர் அறிந்த செய்தியைக் கூறுக? என்ற வினாவினை மாணாக்கர்களிடம் கேட்டு, அவ்விடைகளின் வழியே பாட அறிமுகம் செய்தல்.
 - நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற பழமொழி குறித்து நீவிர் அறிந்த செய்தியைக் கூறுக? என்ற வினாவினை மாணாக்கர்களிடம் கேட்டு, அவ்விடைகளின் வழியே பாட அறிமுகம் செய்தல்.
 
வாசித்தல் :
- நூல்வெளிப் பகுதியினை ஆசிரியர் வாசித்துக் காட்ட மாணாக்கர்கள் தனித் தனியே வாசித்தல் மேற்கொள்ளுதல்.
 - பாடலின் பொருளை உரிய ஒலிப்புடன் வாசித்துக் காட்ட மாணாக்கர்கள் தனித் தனியே வாசித்தல் மேற்கொள்ளுதல்.
 
கற்றல் திறன்கள் :
- புதிய சொற்களை அடிக்கோடிடல்
 - அகராதி கொண்டு பொருள் அறிந்து எழுதுதல்
 - உரக்கப்படித்தல்
 - சந்த நயத்தோடு வாசித்தல்
 
மனவரைபடம் : நோயும் மருந்தும்

மனவரைபடம் : வருமுன் காப்போம்

தொகுத்தல் : நோயும் மருந்தும்
- பெண்ணே! நோயின் தன்மை மூன்று வகை என அறிவாயாக!
 - அவை மருந்தால் நீங்கும் நோய், தீராத நோய், வெளியில் நீங்கும் உள்ளிருக்கும் நோய் ஆகும்.
 - அந்த நோயைத் தீர்க்கும் மருந்துகள் நல்லறிவு, நற்காட்சி, நல்லொழுக்கம் ஆகியவை ஆகும்.
 
தொகுத்தல் : வருமுன் காப்போம்
- உடலில் உறுதி உடையவர் உலகில் மகிழ்ச்சி உடையவர் ஆவர். நோயாளிக்கு இடமும் செல்வமும் இனிய வாழ்வு தராது. சுத்த இடம் சுகம். நாள்தோறும் தூய்மை நீடித்த வாழ்வு தரும்.
 - காலை மலை நடைப்பயிற்சி நல்லகாற்று சுவாசித்தல் நோயும் எமனும் அணுகாது.
 - கூழே ஆனாலும் குளித்துக் குடி.
 - அதிகம் உண்டால் நோய்பட்டு பாயில் விழுவீர். தூய்மை காற்று, நல்ல குடிநீர்,பசித்தபின் உண்ணல் : நோய் அணுகாது.நூற்றாண்டு வாழவைக்கும்.
 
வழங்குதல் :
- மனவரைபடக் கருத்துகளை குழுவினில் வழங்கி, ஒட்டு மொத்த தொகுத்தல் செய்தல்.
 
வலுவூட்டல் :
- மடிகணினி அல்லது தொலைக்காட்சி மூலம் பாடல் காட்சிகளைக் காட்டி, பாடத்தை வலுவூட்டுதல்.
 - உடல் நலம் பற்றிய கதை ஒன்று கூறி பாடத்தை வலுவூட்டுதல்.
 
மதிப்பீடு :
- மாணாக்கர் திறன் அறிய எளிமையான சில வினாக்கள் கேட்டல்.
 - நீலகேசி எவ்வகை நூல்?
 - இந்நூல் எத்தனைச் சருக்கங்களைக் கொண்டது?
 - மருந்துகள் யாவை?
 - உலகில் மகிழ்ச்சி உடையவர் யாவர்?
 - நீடித்த வாழ்வை எப்போது பெறுவாய்?
 - கவிமணியின் இயற்பெயர் யாது?
 
குறைதீர் கற்பித்தல் :
- மெல்ல அரும்பும் மாணாக்கர்களுக்கு பாடலையும் பொருளினையும் கற்பித்துத் தனியே பயிற்சி அளித்தல்.
 
எழுதுதல் :
- சொல்வதை எழுதுதல்,
 - பாடநூல் மதிப்பீட்டு வினாக்கள் எழுதுதல்.
 
கற்றல் விளைவுகள் :
- நீலகேசிப் பாடல் வழி அற உணர்வை மாணவர்கள் அறிந்து கொண்டனர்.
 - உடல்நலம் காத்தல் பற்றிப் பாடல் வழி மாணவர்கள் அறிந்து கொண்டனர்.
 
தொடர்பணி :
- பாடலை மனனம் செய்து, ஒரு முறை எழுதி வரச் சொல்லல்.
 - சிறு வினா விடையை நன்கு படித்து வரச்சொல்லல்
 
கீழே கொடுக்கப்பட்டுள்ள click here என்ற ஆங்கில வார்த்தையை பயன்படுத்தி ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள ஆசிரியர் குறிப்பேடு pdf மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.





  
   
  
  
  
  
  
  
0 Comments