பாளையங்கோட்டை ஒரு மூதூரில் வரலாறு ஆசிரியர்: தொ பரமசிவன்




*தினம் ஒரு புத்தகம்*

நாள்:169

தேதி:11-01-2023

புத்தகம் எண்ணிக்கை:169

புத்தகத்தின் பெயர் : பாளையங்கோட்டை ஒரு மூதூரில் வரலாறு 

ஆசிரியர்: தொ பரமசிவன் 

பக்கங்கள் : 70

விலை :  90 

பதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம் 

கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

 KANI MATHS Educational Group -ல்  இணைந்து கொள்ளலாம். 

*பாளையங்கோட்டை ஒன்பதாம் நூற்றாண்டை சேர்ந்த ஒரு கோட்டை நகரம் இந்நகரில் உள்ள பழமையான கோயில்கள் கோபால சுவாமி என்னும் கோபாலன் கோயிலும் திரிபுராதீஸ்வரர் எனும் சிவன் கோயிலும் ஆகும் இவ்விரண்டும் ஆகம வழி கற்கோயில்கள் 

 

*கோயில்களில் இருந்து 41 கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது

 

*ஊரின் வளமையை அறிய நமக்கு கிடைக்கும் சான்றுகள் கல்வெட்டுகள்

சில வட்டெழுத்தில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது 

 

*கோயிலில் உள்ள அனைத்து கல்வெட்டுகளிலும் ஊரின் பெயர் கீழ்களக் கூற்றத்து ஸ்ரீ வல்லபஙமங்கலம் என்றே காணப்படுகிறது எனவே இதுவே பாளையங்கோட்டை நகரத்தின் பழைய பெயராகும் 

 

*கோயிலின் பெயர் எல்லா கல்வெட்டுகளிலும் வீரநாராயண விண்ணகரம் என்றே காணப்படுகிறது 

 

*தாமிரபரணி நதியின் பழைய பெயர் தண் பொருந்தப் பேராறு என்பதாகும் பேராற்றங்கரையில் அமைந்த செல்வி அம்மனை பேராற்றுச்செல்வி என பெயர் பெற்றாள் 

 

*பாளையங்கோட்டை என இப்பொழுது அறியப்படும் நகரத்தில் கோட்டை ஒன்று இருந்ததற்கான தடயங்கள் மட்டுமே எஞ்சி உள்ளன

 

* ஐரோப்பிய அறிவொளிக் காலத்தின் விளைவாக பிறந்த இரேனியஸ் அடிகளே தமிழை நவீன யுகத்திற்கு திருப்பிய முதல் எழுத்தாளர் எனலாம் 

 

*இரேனியஸ் பற்றி சுந்தரனார் பல்கலைக்கழக தமிழியல் துறை ரேனியஸ் "தமிழில் முன்னோடி "என்ற நூலை வெளியிட்டுள்ளது 

 

*திருச்சபையின் கணக்குப்படி நெல்லை மாவட்டத்தில் 163 பள்ளிகளை தொடங்கியவர் இரேனியஸ் ஆவார் இவர் மத போதகர்களுக்கு மாத ஊதியம் வழங்கினார்.அவர்கள் இறந்த பிறகு அவர்களின் மனைவிகளுக்கு ஓய்வூதியம் வழங்கிய தீர்க்கதரிசி 

 

*பாளையங்கோட்டையில் உள்ள தாய் தெய்வக் கோயில்கள் அனைத்தும் வடக்கு நோக்கியே அமைந்துள்ளன 

 

* 1849 இல் தென்னிந்திய திருச்சபையில் இருந்து நற்போதகம் என்ற இதழ் தொடங்கப்பட்டது இன்றளவும் அது வெளிவந்து கொண்டிருக்கிறது 

 

*1904 இல் கண் தெரியாதவர்களுக்காக யோவான் எழுதிய சுவிசேஷம் என்ற தமிழ் பிரைலி எழுத்தில் பாளையில் வெளியிடப்பட்டது 

 

*பாளையில் சைவ சபை என்னும் அமைப்பு 1883 முதல் இயங்கி வருகிறது சென்னை மாகாண தமிழ் சங்கம் 1934 முதல் அரசு ஆதரவுடன் பாளையில் இயங்கி வருகிறது 

 

*1876 இல் ஏற்பட்ட தாது வருட பஞ்சத்தின் போது ஆங்கிலேய அரசு கைக்குழந்தைகளுக்கு இலவசமாக பால் வழங்கியது இந்த கட்டடம் இன்றளவும் பாலாஸ்பத்திரி என அழைக்கப்படுகிறது 

 

*வீரமிக்க வரலாறை அறிந்து கொள்ள இந்த நூலை கண்டிப்பாக படிக்க வேண்டும் 

 

*பாளையங்கோட்டை பழங்காலத்தில் இருந்து தற்போது வரை உள்ள அனைத்து வரலாறுகளையும் ஆதாரப்பூர்வமுடன் துல்லியமாக மிக எளிய நடையில் மனதை கவரும் வகையில் எழுதியுள்ளார்

 

 *நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

        இதுவரை உள்ள புத்தகங்களின் மொத்த தொகுப்புகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள DOWNLOAD - ஐ CLICK செய்து பார்த்துக் கொள்ளலாம்.

Post a Comment

0 Comments