*தினம் ஒரு புத்தகம்*
நாள்:175
தேதி:17-01-2023
புத்தகம் எண்ணிக்கை:175
புத்தகத்தின் பெயர் :திருக்குறள் புதிய உரை
ஆசிரியர்: பொறிஞர்.ஹெலினா
விலை:150
பக்கங்கள்:272
பதிப்பகம் : விசை வெளியீடு
KANI MATHS Educational Group -ல் இணைந்து கொள்ளலாம்.
*திருக்குறளுக்கு புதிய உரை என்ற தலைப்பில்
இந்தப்புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது
*புத்தகத்தின் முதல் பக்கம் உள்ள ஆசிரியரின்
பெயருக்கு முன்னால் உள்ள பட்டம் "பொறிஞர்" என்று தமிழ்ப்பெயரில் இருக்கிறது தமிழ் மீது
ஆசிரியர் கொண்ட பற்று தெரிகிறது இந்தப்பெயரே நம்மை புத்தகத்தை நோக்கி படிக்க
ஈர்க்கிறது.
* மிக அழகிய கவித்துவமான அட்டைப்படம்
திருவள்ளுவரின் முகம்
பார்ப்பதற்கு மனதைக்கவர்கிறது
*திருக்குறளுக்கு பல தெளிவுரைகள் படித்தபோது ஒரு
பெண்மணி எழுதிய தெளிவுரை என்னும்போது இந்த புத்தகத்தின் மீது மேலும் மதிப்பு
கூடுகிறது
*முதல் குறளின் விளக்கமே நம்மை தொடர்ந்து
இந்தப்புத்தகத்தை படிக்கத் தூண்டுகிறது ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது
புலனாகிறது
*எழுத்துக்கள் இயங்குவதற்கு மூல காரணமாய்
விளங்கும் அகரத்தைப் போல உலகம் முழுவதும் மூலகாரணமாய் இயங்குபவன் இறைவன்
*மனதைக் கவரும் விளக்கவுரை அறக்கடலாக விளங்கும்
அருளாளன் இறைவனின் திருவடிகளைப்பின்பற்றி வாழ்பவர்களை அறம் அல்லாத பாவம் ஒருபோதும்
நிறுத்தவே நிற்காது
*வார்த்தைகளை மிக அழகாய் கையாண்டு எழுதியுள்ளார்
படிப்பதற்கும் மிக எளிமையாக உள்ளது
*திருக்குறளை போன்று விளக்கத்திலும் எதுகை, மோனை
,இயைபு அழகாகப்பயன்படுத்தி உள்ளார்
*இல்வாழ்க்கையின் இரண்டு கண்கள் அன்பும் அறனும்
அவையே இல்வாழ்க்கைக்கு பண்பும் பயனும் தருகிறது
*மனதைக்கவர்ந்த விளக்கம் நற்பண்புகள் நிறைய
பெற்ற மனைவியே பெருமைக்குரியவள் அதற்கு அழகு செய்யும் அணிகலன் குழந்தை செல்வங்கள்
*குறளின் விளக்கமே பல குறல்களுக்கு கவிதை போல்
எழுதியுள்ளார்
*ஒருவர் செய்த நன்மைகளை ஒருபோதும் மறக்கக்கூடாது
ஆனால் அவர் செய்த தீமைகளை மறந்துவிடலாம்
*எந்த ஒரு உயிரையும் கொல்லாமைஅறம் ஆகும்
* உயிர்களை கொலை செய்தால் அறம் ஆகாது
*பெரியவர்களின் கோபத்துக்கு ஆளானவர்கள் எங்கு
சென்று எப்படி ஒளிந்து கொண்டாலும் அவர்கள் பிழைக்க முடியாது
*கோடிக்கு அதிகமான அளவிற்கு பணம் கொடுத்தாலும்
நல்ல குடியில் பிறந்தவர்கள் ஒழுக்கக்கேடான செயலைச்செய்ய மாட்டார்கள்
*எளிமையான வார்த்தைகளில் கவிதை போல் பொருள்
எழுதியுள்ளார் படித்த உடனே புரிந்து கொள்ளக்கூடிய வகையில் திருக்குறளுக்கு பொருள்
உரை மிக எளிமையாக இருக்கிறது கண்டிப்பாக மாணவர்கள் மற்றும் அனைவரும் படிக்க
வேண்டிய புத்தகம்.
*நன்றிகளுடன்*
'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,
M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,
பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,
சங்ககிரி- 637301
இதுவரை உள்ள புத்தகங்களின் மொத்த தொகுப்புகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள DOWNLOAD - ஐ CLICK செய்து பார்த்துக் கொள்ளலாம்.
0 Comments