பண்பாட்டு அசைவுகள் ஆசிரியர் : தொ.பரமசிவன்



*தினம் ஒரு புத்தகம்*

நாள்:177

தேதி:19-01-2023

புத்தகம் எண்ணிக்கை:177

புத்தகத்தின் பெயர் :பண்பாட்டு அசைவுகள் 

ஆசிரியர் : தொ.பரமசிவன் 

பக்கங்கள்: 231 

விலை :100 

பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் 

 கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

 KANI MATHS Educational Group -ல்  இணைந்து கொள்ளலாம். 


*அறியப்படாத தமிழகம் தெய்வங்களும் சமூக மரபுகளும் ஆகிய இரு நூல்களில் உள்ள கட்டுரைகளையும் சில புதிய கட்டுரைகளையும் உள்ளடக்கிய தொகுப்பு ஆகும்.   

 

* மண்ணும் மண்ணின் உயிர் வகைகளும் பயிர் வகைகளும் இவற்றின் ஊடான மனித அசைவுகளும் பன்முகத் தன்மை கொண்டவை என்ற புரிதலை இந்நூல் ஏற்படுத்துகிறது 

 

*நம்மைச் சுற்றியுள்ள அசைவுகளை எந்திரகதிகள் அல்லாமல் தன் உணர்ச்சியோடு காண வைக்கிறது 

 

*தொ.பரமசிவன் அவர்களிடம் இருந்து தெறிக்கும் கருத்துக்களும் சான்று ,சான்று மேற்கொள்களும் வாழ்ந்து பெற்ற பட்டறிவும் மலைப்பை ஏற்படுத்தக்கூடியவை

 

*நாம் தமிழராக பிறந்துவிட்டு நமது நாட்டில் இவ்வளவு விஷயங்களை தகவல்களை அறிந்து கொள்ளாமல் இருந்து விட்டோமே என வருத்தப்பட வைக்கிறது 

 

*பல அறிவியல் பூர்வமான தகவல்களை ஆதாரங்களுடன் நூலில் அழகாய் விவரிக்கிறார் 

 

*ஒவ்வொரு தகவலையும் படிக்க படிக்க மிக ஆச்சரியமாக உள்ளது 

 

*இந்த நூலைப்படிக்க படிக்க நாம் தமிழர் என்பதில் பெருமிதம் ஏற்படுகிறது 

 

*தமிழ் என்ற சொல் தமிழருக்கு இனிமையானது "இனிமையும் நீர்மையும் தமிழெனல் ஆகும்" என்று பிங்கல நிகண்டு குறிப்பிடுகிறது 

 

*தமிழ் என்ற சொல்லை இனிமை ,பண்பாடு அகப்பொருள் என்ற பொருள்களிலும் வழங்கியுள்ளனர் 

 

*சிவநெறி தமிழ்நாட்டில் பிறந்தது என குறிக்க வந்த சேக்கிழார் "அசைவில் செல்லும் தமிழ் வழக்கு " என சைவத்தையும் "அயல் வழக்கு" என சமணத்தையும் குறிப்பிடுகிறார் 

 

*"தெள்ளமுதின் மேலான முத்திக்னியே என் முத்தமிழே " என்று தமிழை முத்தி தரும் பொருளாகவும் தமிழ்விடு தூது 

 குறிப்பிடுகிறது 

 

*முதலாம் ஆதித்த சோழன் தனது வெற்றிக்கு உதவிய படைத்தலைவன் ஒருவனுக்கு "செம்பியன் தமிழவேள்"என்ற பட்டங்களை கொடுத்துள்ளதாக சான்றுள்ளது 

 

*நீர் என்பது வானத்திலிருந்து வருவது என்பதனால் அதனை அமிழ்தம் என்று வள்ளுவர் குறிப்பிடுவார் 

 

*நீர் நிலைகளுக்கு தமிழர்கள் வழங்கி வந்த பெயர்கள் பல சுனை, கயம் பொய்கை ,ஊற்று என்பன தானே நீர்கசிந்த நிலப்பகுதிகளாகும் 

 

*குட்டை மழை நீரின் சிறிய தேக்கமாகும் 

 

*குளிப்பதற்கு பயன்படும் நீர்நிலைக் குளம் என்பதாகும் 

 

*உண்பதற்கு பயன்படும் நீர்நிலை ஊரணி என்பதாகும் 

 

*ஏர் தொழில் பெயர் தொழிலுக்கு பயன்படும் நீர்நிலை ஏரி

 

*மழை நீரை மட்டும் ஏந்தி நிற்கும் நிலையினை ஏந்தல் என்றும் 

 

*கண்ணாறுகளை உடையது கண்மாய்என்றும் தமிழர்கள் பலவிதமாக பழங்காலத்தில் அழைத்துள்ளனர் 

 

*சமைத்தல் என்ற சொல்லுக்கு பக்குவப்படுத்துதல் என்று பொருள் 

 

*அடுப்பில் ஏற்றி சமைப்பது அடுதல் எனப்படும் சமையல் செய்யப்படும் இடம் அட்டில் அல்லது அடுக்களை தமிழர் வீட்டு அமைப்பில் வீடு எந்த திசை நோக்கி அமைந்திருந்தாலும் சமையலறை வீட்டின் வடகிழக்கு அல்லது தென்மேற்கு மூளையில் அமைக்கப்படுகிறது 

 

*வற்றல் என்பது மழைக்காலத்திற்கு என சேமிக்க சேமிக்கப்பட்ட உணவாகும் காய்கறிகள் நிறைய கிடைக்கும் காலத்தில் உப்பு கலந்த மோரில் ஊறவைத்து பின்னர் வெயிலில் நீர்வற்ற காயவைத்து சேமிப்பர் 

 

*உப்பு என்ற தமிழ் சொல்லுக்கு சுவை என்பதே முதல் பொருள் இனிப்பு கசப்பு துவர்ப்பு என்று சுவைகள் எல்லாம் உப்பு என்ற சொல்லை அடிப்படையாகக் கொண்டு பிறந்தது 

 

*சமையலுக்கு பயன்படுத்தும் உப்பிற்கு வெள்ளுப்பு என்று பெயர் 

 

*பழந்தமிழ் நாட்டு பொருளாதாரத்திலும் தமிழ் பண்பாட்டிலும் உப்புக்கு தனி இடம் உண்டு பழந்தமிழர்களால் சுவையின் சின்னமாகவும் வளத்தின் சின்னமாகவும் உப்பு கருதப்பட்டது 

 

*தன் உருவம் தெரியாமல் பிற பொருள்களோடு கலந்து கொண்டு பயன் தருவதால் வெள்ளுப்பு என அழைக்கப்படுகிறது 

 

*ஆடி அறுதி எனப்படும் ஆடி மாத கடைசி நாளிலும் தைப்பொங்கலுக்கு மறுநாளான கரி நாளிலும் விருப்பத்துடன் புலால் உண்ணுவது தமிழர் வழக்கமாகும் 

 

* சங்ககால சங்க இலக்கியத்தில் வீடு என்பதற்கு பதிலாக மனை என்ற சொல்லே காணப்படுகிறது உண்டு 

 

*ஆய்வு நெறியில் சிறு தெய்வம் பெருந்தெய்வம் என்ற சொற்களை தாழ்ந்தவை, உயர்ந்தவை என்ற பொருளில் எடுத்துக் கொள்ள இயலாது உண்மையில் சிறு தெய்வங்கள் எனப்படுபவையே மிகப்பழைய நம்பிக்கைகளையும் உணர்வுகளையும் பேணி நிற்பவையாகும்  

 

* மனிதன் இயற்கையே தனக்கு உணவை அளிக்கிறது என்று அறிந்து கொண்டான் அச்சமும் உணவுத்தேவையையும் கொண்ட மனிதன் இயற்கையின் பேராற்றலை வணங்கத் தலைபட்டான் 

 

*தமிழர்கள் கூட 'முருகு' எனப்பட்ட ஒரு ஆற்றலையே முதலில் வணங்கினார்கள் பின்னர் தனிமனிதச் சிந்தனை வளர்ந்த போது தான் 'முருகு' என்பது 'முருகன்'ஆக்கப்பட்டான் 

 

*ஒவ்வொரு கட்டத்திலும் சமூகச்சேவைகள் மாற மாற தெய்வங்களும் அவற்றின் பண்புகளும் மாறின 

 

*ஹரப்பா நாகரிகத்தில் பசுபதி வழிபாடு வேதத்தில் உள்ள ருத்ர வழிபாடு தமிழ்நாட்டில் நிலவிய தறி வழிபாடு இந்த மூன்றும் கலந்தது தான் சிவ வழிபாட்டின் அடிப்படை 

 

*வட இந்தியாவில் பிறந்த கந்த வழிபாடு தமிழ்நாட்டின் முருக வழிபாடு கிழக்கிந்திய பகுதிகளில் பிறந்த கார்த்திகேய வழிபாடு இவற்றின் கலவைதான் இன்று உள்ள முருக வழிபாடு 

 

*ஆதி மனித கூட்டம் உணவு தேவைக்காகவே அச்சத்தோடும் ஆச்சரிய உணர்வோடும் இயற்கையை வணங்கியது 

 

*சமூகத்தின் ஒவ்வொரு வளர்ச்சி கட்டத்திலும் சமூக சேவைகள் மாறி வளர்ந்து பெருகும் போது கதைகளும் புராணங்களும் அதற்குத் தகந்தவாறு வளர்ந்தன.

     

*நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

        இதுவரை உள்ள புத்தகங்களின் மொத்த தொகுப்புகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள DOWNLOAD - ஐ CLICK செய்து பார்த்துக் கொள்ளலாம்.

Post a Comment

0 Comments