அன்பு என்பது ஒரு தந்திரம் அல்ல ஆசிரியர் :ச.மாடசாமி



*தினம் ஒரு புத்தகம்*

 நாள்:155

தேதி:28-12-2022

புத்தகம் எண்ணிக்கை:155

புத்தகத்தின் பெயர்: அன்பு என்பது ஒரு தந்திரம் அல்ல   

ஆசிரியர் :ச.மாடசாமி 

விலை :70            

பக்கங்கள் :72      

பதிப்பகம் : பாரதி புத்தகாலயம் 

                    

கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

 KANI MATHS Educational Group -ல்  இணைந்து கொள்ளலாம். 


    *பேராசிரியர் ச. மாடசாமியின் இந்தப் புத்தகம் மொத்தம் 12 கட்டுரைகளை உள்ளடக்கியது 

 

*பள்ளிக்குப் பெருமை ரிசல்ட் அல்ல அன்பின் மையங்களை உருவாக்கும் ஆசிரியர்கள் தான்  

 

*மாணவர்களுக்குள் பல்வேறு முகங்கள் உள்ளன ஆசிரியர்கள் தான் அந்த முகத்தை அடையாளம் காண மறந்து விடுகின்றனர் அடையாளம் கண்டால் அந்த மாணவன் வாழ்வில் சிகரத்தை தொட்டு விடுவான் 

 

*சடங்குகள் சூழ்ந்த வகுப்பறை ,விவாதங்கள் நிறைந்த வகுப்பறையாக மாற வேண்டும் ஆசிரியர் நினைத்தால் முடியாதது எது? 

 

*தலைகீழ் வகுப்பறை அல்லது மறுபுறம் திருப்பப்பட்ட வகுப்பறையை கண்டுபிடித்தவர்கள் ஜோதைன் பெர்க்மமேன் மற்றும் ஆரன் சாம்ஸ் என்ற இரு அமெரிக்கப் பள்ளி ஆசிரியர்கள் 

 

*ஆசிரியர்கள் கோபம் கொண்ட மாணவர்களோடு தயவு செய்து கைகுலுக்குங்கள் ,கண்டித்த மாணவர்களை அழைத்து தோளைத்தட்டிக் கொடுங்கள் வகுப்பறையில் நட்பை மலர வைப்பதற்காக தோற்றுப் போங்கள் தோற்பதற்கு கூச்சப்படாதவர்கள் தான் உண்மையான வீரர்கள் உண்மையான ஆசிரியர்கள் 

 

*ஒரு செயலை முடிக்கும் தருணம் கடினமானது மற்றும் முக்கியமானது ஆகும் 

 

*கேரளாவில் பள்ளிகள் திறக்கும் நாளில் குழந்தைகளை வரவேற்க வாசிக்கும் பாடல் 

 

    "வாகை மரங்கள் பூத்த வசந்த காலம்        பள்ளிக்கூட காலம் வண்ணத்துப்பூச்சிகள் தோப்பு நிறைய பறக்கும் பட்டுப்பூச்சி காலம் "

 

*குழந்தைகளின் உலகங்கள் உயிர் பெற தொழில்நுட்பம் மட்டும் போதாது பாடப்புத்தகம் மட்டும் போதாது உள்ளமும் உணர்வும் கனிந்த ஒரு வகுப்பறை வேண்டும் 

 

*உலகில் லட்சக்கணக்கில் பேனாக்கள் இருக்கின்றன ஒவ்வொரு பேனாக்குள்ளும் லட்சக்கணக்கில் உலகங்கள் ஒளிந்து இருக்கின்றன அவற்றையெல்லாம் வகுப்பறை வெளிக் கொண்டு வந்து விட்டதா? 

என்ற கேள்வியை கிறிஸ்டோபஸ் மையர் எழுதிய "என் பேனா" (My Pen)என்ற குழந்தை கதை எழுப்புகிறது 

 

*"ஒரு மழைத்துளி போல் எளிமையானது பேனா ஆனால் பேனாவின் பார்வை ஊடுருவும் எக்ஸ்ரே பார்வை ..!"

 

*தொடுதிரைக்கு ஆசைப்படும் வகுப்பறைகள் பேனாக்களையும் பேனா பிடிக்கும் விரல்களையும் எவ்வளவு வளர்த்திருக்கின்றன என்பது கேள்விக்குறிதான் ....?

 

*தடுமாறும் பிள்ளைகளோடு கைகோர்த்துக்கொண்டு அவர்கள் வேகத்தில் ஆசிரியர்கள் நடந்து போனால் பயணமும் தித்திக்கும் ஒவ்வொரு குழந்தைக்குள்ளும் உறைந்து கிடக்கும் உலகங்களும் உயிர்ப்பெறும் அதற்குத் தேவை வகுப்பறைக்கு ஒரு மனித முகம். 

 

*திறமையானவர்கள், உண்மையானவர்களை விட நெளிவு சுழிவு தெரிந்தவர்களே அன்றாட வாழ்வில் வெற்றி பெறுகிறார்கள் 

 

*செயல்படுவது தான் சுதந்திரம் 

 

*ஆசிரியப் பணியில் சோர்வு ஏற்படும் போது மனம் புத்துணர்வு ஏற்பட பேராசிரியர் ச. மாடசாமியின் புத்தகங்கள் உதவும் 

 

*மாணவர் மைய ஆசிரியர்கள் தங்களை மென்மேலும் செதுக்கிக் கொள்ள இந்தப்புத்தகம் கண்டிப்பாக உதவும்

 

 *நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

        இதுவரை உள்ள புத்தகங்களின் மொத்த தொகுப்புகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள DOWNLOAD - ஐ CLICK செய்து பார்த்துக் கொள்ளலாம்.

Post a Comment

0 Comments