*தினம் ஒரு புத்தகம்*
நாள்:182
தேதி:24-01-2023
புத்தகம் எண்ணிக்கை:182
புத்தகத்தின் பெயர் : ஆசிரியர் முகமூடி அகற்றி
ஆசிரியர் : ச. மாடசாமி
பக்கங்கள் : 72
விலை : 50
பதிப்பகம் :அறிவியல் வெளியீடு
கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான
KANI MATHS Educational Group -ல் இணைந்து கொள்ளலாம்.
*அமெரிக்காவில் பள்ளி ஆசிரியராக பணிபுரிந்தவர் பிராங்க் மக்கோர்ட் ஆங்கில ஆசிரியர் அவரின் வகுப்பறை அனுபவமே இந்த
புத்தகம்
*மக்கோர்ட் வகுப்பறை அனுபவங்கள் வித்தியாசமானவை
மாணவர் ஒவ்வொருவரும் உரையாடலில் பங்கேற்கும் விதமாக எப்போதும் வகுப்பறையை
மக்கோர்ட் திறந்து வைத்திருப்பார்
* மக்கோர்ட் எழுதிய டீச்சர் மேன் நூலின்
வாசிப்பு அனுபவம் இந்த நூல்
*மொழிபெயர்ப்பு அல்ல
*இந்த நூலில் மனதைத்தொட்ட வரிகள்*
*"தாமதமாய் மலர்ந்தவன்" என்று
மக்கோர்ட் தன்னைப் பற்றி சொல்லிக் கொள்வார்.
*தன் பணிக்காலம் முழுவதும்'ஆசிரிய முகமூடி'யைக்
கழற்ற ஓயாமல் முயன்றவர் மக்கோர்ட்.
*பணி ஒய்வு பெற்றதும் ”முகமூடி அநேகமாக கழன்று விட்டது. இப்போது
என்னால் மூச்சு விட முடிகிறது”
என்று எழுதினார் மக்கோர்ட்.
*"நீ அவர்களைப் பார்த்துக் கத்தினாலோ,
திட்டினாலோ அவர்களை இழக்கிறாய். உன் சத்தத்துக்குப் பிறகு, சலனமற்று மௌனமாய்
அவர்கள் வகுப்பறையில் உட்கார்ந்திருப்பது உன்னைத்திருப்பி அடிப்பது போல. வகுப்பறை
அத்துடன் முடிந்துவிட்டது."
*"மாணவர்களைக் கட்டுப்பாட்டில் வைக்க
ஆசிரியரிடம் என்ன இருக்கிறது? பிரம்பா? துப்பாக்கியா? ஆசிரியரிடம் இருப்பது வாய்
மட்டுமே"
”
*ஒவ்வொரு வருடம் முடியும் போதும் அந்த
வகுப்பறையில் நிச்சயம் ஒருவனாவது ஏதோ சிலவற்றைக் கற்றுக் கொள்கிறான்.அந்த ஒருவன்
நான்தான்”
* எழுத்து நடை மட்டுமல்ல மக்கோர்ட் எழுதத்
தொடங்கிய விதமும் வித்தியாசமானது தான் வயது 60 தாண்டிய பிறகுதான் அவருக்கு நூல்
எழுதுவதில் ஆர்வம் பிறக்கிறது அதற்கு முன்னால் ஒரு கட்டுரையை கூட அவர்
எழுதியதில்லை
* எழுத ஏன் இவ்வளவு தாமதம் ?என்ற கேள்வி
வந்தபோது என்ன செய்ய இத்தனை ஆண்டுகளாய் வகுப்பில் பாடம் நடத்திக் கொண்டிருந்தேன்
பாடம் நடத்தும் போது வேறு எதைச் செய்ய முடியும் என்று பதில் சொன்னவர் மக்கோர்ட்
*வகுப்பறை ஆனாலும் சரி படுக்கை அறையானாலும் சரி
உள்ளது உள்ளபடி வெளிப்படையாக எழுதுகிறார் மக்கோர்ட.
* இருப்பதைவிட சேர்ந்து கூடி முரண்பட்டு
விவாதிப்பதே நல்லது
*மக்கோர்ட்டின் பலம் என்ன ? சுய விமர்சனம் தான்
மக்கோர்ட் பலம் வெற்றியின் போது இது சரியான வெற்றி தானா என தனக்குள் கேள்வி
எழுப்புகிறார் தோல்வியின் போது இதில் தன் தவறு என்ன ?என்று தான் முதலில் தேடிப்
பார்க்கிறார்
*ஆசிரியர் பணி தம் லட்சியப் பணி என்றெல்லாம்
மார்க்கெட் சொல்வதில்லை கிடைத்த பணி அவ்வளவுதான்
*கதவை திறந்து நடப்பதற்கு வெளியே வந்து விட்டால்
நீ சுதந்திரம் ஆகிறாய் கவலைகளும் பொறுப்புகளும் இல்லை புறப்பட இடத்திற்கு திரும்ப
வேண்டும் என்ற அவசியம் இல்லை நடந்து கொண்டே இரு ஏனெனில் நீ சுதந்திரம்
பெற்றிருக்கிறாய்
*மன்னிப்பு கடிதம் எழுதுவதன் மூலம் மாணவர்களிடம்
எழுத்தாற்றலை வளர்த்தவர்
*மாணவர்களுடன் தன் வாழ்க்கை அனுபவங்களை
பகிர்ந்து கொண்டு அவர்களை நல்வழிப்படுத்தியவர்.
*மாணவர்களின் உள்ள உணர்வுகளைப் புரிந்துக்கொள்ள
ஆசிரியர் என்ற நிலையில் இருந்து மாணவர்கள் நிலைக்கு வந்தால் மட்டுமே முடியும் என
நிரூபித்தவர்
*மாணவர்கள் மைய ஆசிரியர்களும் குழந்தைகள் மைய
பெற்றோர்களும் கண்டீப்பாக படிக்க வேண்டிய புத்தகம் இது.
*நன்றிகளுடன்*
'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,
M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,
பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,
சங்ககிரி- 637301
இதுவரை உள்ள புத்தகங்களின் மொத்த தொகுப்புகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள DOWNLOAD - ஐ CLICK செய்து பார்த்துக் கொள்ளலாம்.
0 Comments